25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 12, 2026

பிரதமர் மோடி   கோரிக்கை. ( வேண்டுகோள் )

1. கொரோனா காலத்தை போல வீட்டிலிருந்தேவேலை செய்யலாம் ( WORK FROM HOME ) 2. ஓராண்டிற்கு தங்கம் வாங்க வேண்டாம். 3. பெட்ரொல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள் . (விலை ஏறப்போகிறது) 4. சமையலிலும் எண்ணெய் பயன்பாட்டை குறையுங்கள். உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. 5. ரசாயன உரத்தை குறையுங்கள், இயற்கை உரத்திற்கு மாறுங்கள் 6. ஓராண்டிற்கு வெளிநாட்டு பயணங்களை தவிருங்கள்.

May 12, 2026

பூமிக்கு வரும் செவ்வாய் மண்!

2031ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் இருந்து 500 கிராம் மண்ணை, பூமிக்கு கொண்டு வர சீனா இலக்கு!சீனாவின் Tianwen-3 விண்கலம் 2028ல் செவ்வாய்க்கு ஏவி, 2031க்குள் மாதிரிகளைபூமிக்கு கொண்டுவர உள்ளதாக அந்நாடு அறிவிப்பு. நாசாவை முந்தி, செவ்வாயிலிருந்து மண்ணை கொண்டு வரும் முதல் நாடாக உருவெடுக்க சீனா முயற்சி.

May 12, 2026

நகரும் நாடு ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் ஏழு சென்டிமீட்டர் வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது. கடந்த 22 வருடங்களில் 1.5 மீட்டர் தூரம் நகர்ந்திருக்கிறது.

May 11, 2026

“ஜோசப் விஜய் எனும் நான்” . CHIEF MINISTER OF TAMILNADU

பல பிரச்சனைகளுக்கு இடையே, எதிர் கட்சிகளின் பதவி மோகம் அதிகரித்து, பதவிக்காக அவர்கள் என்ன மாதிரி எல்லாம், முறையற்ற சிந்தனை செய்தனர் என்பது தெளிவாகவே புரிந்தது. எப்பேர்பட்ட நயவஞ்சகர்கள் என்று மக்கள் அனைவரும் புரிந்து கொண்டனர்.இவர்களுடைய ஆடு புலி ஆட்டத்தில், அமைதியாக சுயமாகச் சிந்தித்து, தன்னுடைய வெற்றியைவிட்டு விடாமல் எதைச் செய்ய வேண்டுமோ அதை மாத்திரம் செய்து, முதலமைச்சர் பதவி ஏற்றுள்ள திரு.விஜய் அவர்களுக்கு ராஜபாளையம் டைம்ஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று த.வெ.க., தலைவர் விஜய்க்கு முதல்வராக கவர்னர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார் . பதவியேற்புவிழா துவங்கியது. முதலாவதாக வந்தே மாதரம் பாடலை கலைக்குழு வினர் பாடினர்.அதை தொடர்ந்து தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பின்பதவியேற்பு நிகழ்ச்சி துவங்கியது. முதலில் முதல்வர் விஜய்க்கு, கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்து, முதல்வராக விஜய் பதவியேற்றார். இந்நிகழ்வு காலை 10:17 முதல் 10:20 மணி வரை நடந்தது. தொண்டர்கள் விசில் சப்தத்தை எழுப்பி,டி.வி.கே., என உற்சாக குரல் எழுப்பினர். முதல்வர் பதவியேற்பு விழாவில் 'நல்லதே நடக்கும்' என பாசிட்டிவாக முதல் பேச்சை முதல்வர் விஜய் துவக்கினார். தன் பேச்சில் 'அரசின் கடன் சுமை குறித்து வெள்ளை அறிக்கை கொடுப்போம். நான் தவறு செய்ய மாட்டேன் ,செய்யவும் விடமாட்டேன்' என சூளுரைத்தார். மேலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கவும், இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருட்கள் தடுப்பு போலீஸ் நிலையங்கள்உருவாக்குவதற்கான மூன்று கோப்புகளிலும் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். ஒரு சாதாரண உதவி இயக்குநருக்கு மகனாக பிறந்த எனக்கும், வறுமை என்றால் என்னவென்று தெரியும்; பசி என்றால் என்னவென்று நன்றாகவே எனக்கு தெரியும். நான் ஒன்றும் பெரியமன்னர் பரம்பரையில் இருந்து வந்து விடவில்லை. இந்த அரசியல் பயணத்தில், எனக்கு எவ்வளவோ கஷ்டங்கள், அவமானங்கள் ஏற்பட்டன.என் வலி, வேதனைகளை தங்களுடையதாக நினைத்து, என் கூடவே நின்று, 'ஜோசப் விஜய் எனும் நான்' என்பதை, மக்கள் உண்மையாக்கி இருக்கின்றனர். நான் ஒன்றும் தேவதூதன் கிடையாது. நானும் இயல்பான  வாழ்க்கை வாழும் சாதாரணமான மனிதன் தான்.நான் முன்பே சொன்னது போல, 'அது செய்வேன், இது செய்வேன்' என பொய்யான வாக்குறுதிகள் எல்லாம்கொடுத்து, மக்களை ஏமாற்ற மாட்டேன்; எது சாத்தியமோ, அதை மட்டும் தான்செய்வேன், எனக்காக குரல் கொடுத்ததற்கும், என்னை ஆதரித்து கூடவே நின்றதற்கும், உங்கள் எல்லாருக்கும் நன்றி. நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லதே நடக்கும். முதல்வர் விஜய் தன் பேச்சின் போது, அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் ,விஜய் மாமாவுடைய குட்டி நண்பா, நண்பீஸ். அவர்களால் தான் இது நடந்திருக்கிறது. உங்களுக்காக, உங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து, எல்லா நல்ல விஷயங்களையும், உங்களுக்காக இந்த விஜய் மாமா செய்து கொடுப்பான், குட்டீஸ்களுக்கு நன்றி என்றார். கஷ்டப்பட்டு வாங்கிய, இப்பதவியை அடுத்த 5 ஆண்டுகள் தக்க வைத்துக் கொள்ள, குள்ள நரிகளின் தந்திரத்தில் சிக்காமல், சொல்லிய வாக்குறுதிகளைச் சிறப்பாகச் செய்து, தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவார் ,என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் அனைவருமே காத்திருக்கின்றனர். செய்வாரா விஜய் ! 

May 11, 2026

கொளுத்தும் கோடை... மிரட்டும் வெப்ப அலை!

நகரங்களிலுள்ள தார்ச்சாலைகளும், கான்கிரீட் கட்டடங்களும் பகலில் சூரிய வெப்பத்தை உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதுதான் நகரங்களில் வெப்பம் அதிகமாக உணரப்படுவதற்குக் காரணம். இதை ‘அர்பன் ஹீட் ஐலேண்ட் எஃபெக்ட்’ என்பார்கள். காடுகள் அல்லது நீர்நிலைகள் இல்லாத இடங்களில் வெப்பம் வெளியேற வழியின்றி அங்கேயே தங்கிவிடும். இதனால் கிராமப்புறங்களைவிட நகரங்கள் 3 முதல் 5 டிகிரிசெல்சியஸ் வரை கூடுதல் வெப்பமாகக் காணப்படும்.

May 11, 2026

மனதளவில் Strong  ஆக....

.சில பேரை எந்த முன்னறிவிப்பும் இல்லாம வாழ்க்கையில இருந்து கட் பண்ணிடுவீங்க. மன்னிப்பீங்க, ஆனா திரும்ப அவங்க கூட சேர மாட்டீங்க.  உங்க வாழ்க்கையில் நடக்குற எல்லாத்தையும் ஸ்டேட்டஸா போட மாட்டீங்க.  தனியா வாழறதுல உங்களுக்கு பயம் இல்ல. குற்றஉணர்ச்சி இல்லாம "NO" சொல்ல கத்துக்குவீங்க. நிரூபிக்கிறத விட நிம்மதிதான் முக்கியம்னு நினைப்பீங்க. அட்ஜஸ்ட் பண்ணுவீங்க, ஆனா உங்க சுயத்தை இழக்க மாட்டீங்க. சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓவரா ரியாக்ட் பண்ண மாட்டீங்க. உங்க காயங்களை யாருக்கும் தெரியாம நீங்களே ஆத்திக்குவீங்க. .அமைதியா இருக்கிறது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

May 11, 2026

விண்வெளியில் ஒரு தங்கச் சுரங்கம்.

விண்வெளியில் சுற்றித் திரியும் 16 சைக்கி (16 Psyche) என்ற விண்கல், உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப் போடக்கூடிய ஒரு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த விண்கல், வெறும் பாறைகளால் ஆனது அல்ல; இது தங்கம், இரும்பு மற்றும் நிக்கல் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களால் நிறைந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் $700 குவிண்டில்லியன் ($700 quintillion) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச்செல்வம் முழுவதையும் பூமிக்குக் கொண்டு வந்து மக்களிடையே பகிர்ந்துஅளித்தால், பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஒரு கோடீஸ்வரராக (Billionaire) மாற முடியும் என்பது வியக்கத்தக்க உண்மை. தற்போது நாசா (NASA) இந்த விண்கல்லை ஆய்வு செய்யத் தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது, இது எதிர்காலத்தில் விண்வெளி சுரங்கத் தொழிலுக்கு (Space Mining) ஒரு புதியவாசலைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

May 11, 2026

ஈரக் குப்பைகளை பயோகேஸாக மாற்றி LPGக்கு பை?

பெங்களூரில் தினமும் வரும் 3,000 டன் ஈரக் குப்பைகளை பயோகேஸாக மாற்றி, மார்க்கெட் பகுதிகளுக்கு கொண்டு சென்று எரிவாயுவாக பயன்படுத்துகின்றனர்.அந்த வாயுவை ஹோட்டல்களில் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.இப்படி செய்தால் LPG தேவையும் குறையும்.குப்பையும் பயனுள்ளதாக மாறும்.

May 09, 2026

45 டிகிரி செல்சியஸ்! அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்தியா ஒரு நெருப்புக்கோளம் போலத் தகிக்கப் போகிறது.

இந்தியா முழுவதும் அனல் காற்று தீவிரமடைந்துள்ளது.பல நகரங்களில் வெப்பம் 45°C-ஐ நெருங்குவதால், ஹீட் ஸ்ட்ரோக் (Heatstroke) ஏற்படும் அபாயம் உள்ளது. வறண்ட காற்று மற்றும் மேகங்கள் இல்லாததே இந்த அகோர வெயிலுக்குக் காரணம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பாதுகாப்பாக இருங்கள்

May 09, 2026

வணக்கம் +2 மாணவ, மாணவிகளே…

 சாத்தூர்  SRNM Politechnic ல் புதியதாக LAB technician course மற்றும் X Ray technician course இருக்கிறது . இந்த course க்கான கட்டணத்தை Siemens நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது . அதுமட்டுமின்றி இரண்டாம் வருடம் Internship கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிர்வாகம் உதவி தொகையுடன் வழி வகை செய்கிறது.இந்த அரிய வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .இதே கல்லூரியில் Fashion Technology course உள்ளது என்பது கூடுதல் தகவல் .

1 2 ... 29 30 31 32 33 34 35 ... 119 120

AD's



More News