.கம்பு இட்லி.
தேவையான பொருட்கள் - கம்பு (சுத்தம் செய்தது) - ஒரு கப் புழுங்கலரிசி -அரை கப், உளுத்தம்பருப்பு - அரை கப். உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கம்பையும் அரிசியையும் தனித்தனியே ஊறவையுங்கள்.
உளுந்தையும் ஊறவையுங்கள். பிறகு. கம்பை நைஸான அரிசி ரவை பதத்தில் அரைத்தெடுங்கள். உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து பொங்கப்பொங்க ஆட்டி, உப்பு சேர்த்து, கம்பு மாவுடன் சேர்த்துக் கலந்துவையுங்கள். 5 அல்லது 6 மணி நேரம் புளித்ததும், இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.
குறிப்பு: கம்பை வறுத்தும் ஊறவைக்கலாம். விருப்பப்பட்டால். அரைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் 2 பச்சை மிளகாய்களையும் சேர்த்து அரைக்கலாம். பொதுவாக, கம்பு, கேழ்வரகு போன்ற தானிய இட்லிகள், அரிசி இட்லியைப் போல'மெத்தென்று இருக்காது. அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள். கம்பு இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்புமா போல தாளித்து. ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து சாப்பிடலாம்.
0
Leave a Reply