25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஓவிய, சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் துவக்கி வைத்தார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஓவிய, சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஓவிய, சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.

உள்ளூர் படைப்பாளர்களின் படைப்பாற்றலை மேம்படுத்திடவும், அவர்களது தனித்திறன்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும் அதற்கான வாய்ப்புத்தளங்களை ஏற்படுத்தித்தரும் பொருட்டு கலை பண்பாட்டுத்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் 17.07.2026 முதல் 19.07.2026 வரை ஓவிய சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெறுகிறது.

இதன் மூலம் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்த இயலவில்லை என்ற குறைகளை கலைந்திடவும், நல்ல ஓவியம் மற்றும் சிற்பங்களைக் காண வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகளை தவிர்த்திடும் பொருட்டு நம் ஊரிலேயே கண்காட்சி நடைபடுத்தப்படுகிறது.

இக்குறுகிய கால பயிற்சிகளில் ஓவியம் வரைவதில் உள்ள நுணுக்கங்கள் குறித்த பயிற்சியும், சிற்பங்கள் உருவாக்குவதற்கான சிற்பக்கலைக்கான பயிற்சி பட்டறையும் நடத்தப்படுகிறது.இதனை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மண்டலக் கலை பண்பாட்டு துறை  திரு. து.சிவப்புகழ் (உதவி இயக்குநர்) அவர்கள் கலந்துகொண்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News