விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் (22.02.2025) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட21 ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.95.95 இலட்சம் மதிப்பில் 38 மின்கலன் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தூய்மைப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கி துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஜி.எஸ்.டி மஹாலில் (22.02.2025) ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட ம் மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து, இளம் தளிர் என்ற தலைப்பில் நடத்திய ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தொடங்கி வைத்தார்.குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து ஆறு வயது வரை அந்த குழந்தைகளுடைய வளர்ச்சிக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து முழுமையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.ஆறு மாதம் வரைக்கும் தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்கிறோம். அதன் பின்பு அந்த குழந்தைக்கு ஆறு மாதத்தில் இருந்து இணை உணவுகளை கொடுக்கின்ற போது, அதை ஊட்டச்சத்து மிக்கதாக எப்படி தொடர்ச்சியாக அந்த குழந்தைக்கு கொடுப்பது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.சத்தான உணவுகள் என்பது செலவு அதிகமாகும் என்று இல்லை. நமது பகுதியில் கிடைக்கக்கூடிய சிறு சிறு உணவுப் பொருட்களைக் கூட தொடர்ச்சியாக அவர்களுக்கு கொடுப்பதன் மூலமாகவும், குறிப்பாக செரிமானம் ஆகக்கூடிய அளவிலான புரதச்சத்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.புரதச்சத்து குழந்தைகளின் உடல் கட்டமைப்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அது எந்த உணவில் அதிகமாக கிடைக்கும் என்பதெல்லாம் இந்த கருத்தரங்கில் மருத்துவர்கள் எடுத்துக்கூற உள்ளனர்.எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவது மிகவும் அவசியம். அது 6 மாதம் முதல் 6 வயது வரை பெற்றோர்கள் கொடுக்கக்கூடிய உணவில் தான் இருக்கிறது.இதையெல்லாம் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக இன்று கருத்தரங்கு நடைபெறுகிறது. இதை நல்ல முறையில் பயன்படுத்தி கவனித்து நல்ல ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அறிவியலால் நிரூபிக்கப்படாத முறையை பின்பற்றுவது தவறாகும்.குறிப்பாக கிராமங்களில் தொக்கு எடுப்பது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.எனவே அதை மருத்துவ ரீதியாக பார்த்து அதற்கான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.நமது பகுதிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மருத்துவம் பார்த்து சரி செய்வதற்கும், நல்ல சத்தான சாப்பாடு கொடுப்பதும் மிகவும் முக்கியம். அதனை எடுத்துக்கூறும் வகையில் தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் (பொ) திருமதி பத்மாவதி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி உட்பட அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (22.02.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கலைஞரின் கனவு இல்லம் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டம் ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், சமத்துவபுரம் உயிர் நீர் இயக்கம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு அபிவிருத்தி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஊராட்சி ஒன்றிய பொது நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.மேலும், ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள், நிலுவையிலுள்ள பணிகள், முடிவுற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகளை விரைந்தும், தரமானதாகவும் உரிய காலத்திற்குள் செய்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் அரசின் அனைத்து திட்டங்களும் சாமானிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பிரத்யேக திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து தொடர்ச்சியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.அரசின் பொதுவான திட்டங்களையும் தாண்டி இலக்கிய, கலை, பண்பாடு உள்ளிட்ட திட்டங்களிலும் ஒரு தனியிடத்தை நமது மாவட்டம் பெற்றிருக்கிறது.நமது மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவு படுத்தவும், குறிப்பாக குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குறைகள், பத்திரிகை மூலம் கிடைக்கப்பெறும் குறைதீர்க்க வேண்டிய செய்திகளுக்கு அரசு அலுவலர்கள் உடனடியாக செயல்பட்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். முன்னேற விளையும் பகுதியான நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் செயல் படுத்தப்படும் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் நிர்வாக சிக்கல் இருக்கும்பட்சத்தில் அதனை மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.மேலும், அங்கன்வாடி புதிய கட்டடங்கள் கட்ட வேண்டியதன் தேவை, மராமத்து செய்ய வேண்டிய அரசு கட்டடங்கள், இடமில்லாத அங்கன்வாடி மையங்களுக்கு இடத்தை தேர்வு செய்தல் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், இந்த பகுதிகளில் அங்கன்வாடி மையங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்கூரை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.பணிகள் நடைபெறும் மையங்களில் மாற்று ஏற்பாடாக அருகில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் அங்கன்வாடி மையத்தை செயல்படுத்தலாம்.நபார்டு திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தண்ணீர் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அனைத்துபணியாளர்களின் சேவைகளை உறுதிசெய்ய வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பேவர் கல்தளம் அமைத்ததற்கு பின்பு சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். சுகாதார நிலையங்களுக்கு செல்லும் சாலைகளில் போதிய தெருவிளக்கு வசதியை செய்ய வேண்டும்.நரிக்குடி, வீரச்சோழன் முக்குளம், கட்டனூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக க.விலக்கிலிருந்து ம.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மார்க்கமாக ஆலம்பட்டி கிராம வரை செல்வதற்கு சிற்றுந்து வசதி ஏற்பாடு செய்யப்படும்.முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்கு இயலாத அதிக நீளமான சாலைகளை பிற திட்டங்கள் மூலமாக நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கி நிறைவேற்றப்படும்.குடிநீர் விநியோகம் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.அனைத்து பகுதிகளிலும் தேவையான குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள் / அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000- வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள்/ கல்வி நிறுவனங்கள் / குடியிருப்போர் நல சங்கங்கள் / தனிநபர்கள் / உள்ளாட்சி அமைப்புகள்/ தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு4. பசுமை தயாரிப்புகள் /பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்5. நிலைத்தகு வளர்ச்சி6. திடக்கழிவு மேலாண்மை7. நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு8. காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை9. காற்று மாசு குறைத்தல்10. பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை11. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு12. கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கைதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள்/ நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் கடைசி நாள் ஆகும்.மேலும், கூடுதல் தகவல்களை பெற மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் உரையாற்றியபோது “பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர் கல்வி வரையிலான அனைத்துக் கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும்”என்ற அறிவிப்பினை தொடர்ந்து தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு (எம்1) துறை அரசாணை (நிலை) எண் – 13, நாள் – 12.02.2025-ன்படி ரூ.5.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என்ற விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பு நாளேடுகளில் வெளியானதைத் தொடர்ந்து இத்திட்டம் குறித்தான பயனாளர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் கீழ்கண்டவாறு விளக்கங்கள் தெரிவிக்கப்படுகிறது. பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் குழந்தைகளில்10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ, 4,000/-ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்குரூ, 6,000/-ம், ஆகிய ஒரு தடவை மட்டும் வழங்கப்படும் பணப்பலனை பெறவும், பட்டாசு தொழிற்சாலை விபத்தில் தாய் தந்தை இருவரில் எவரேனும் ஒருவர் மரணமடைந்த நிகழ்வில் மாதாந்திர பராமரிப்பு செலவினம் ரூ.2,000/-ம், (18 வயது பூர்த்தி ஆகும் வரை) தாய் தந்தை இருவரும் மரணமடைந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு செலவினம் ரூ.4,000/-ம், (18 வயது பூர்த்தி ஆகும் வரை) பெறவும் 10.11.2024க்கு முன் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10.11.2024 அன்று 18 வயது நிறைவடையாதவர்களாகவும் 10.11.2024க்கு பிந்தைய விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் விபத்து நிகழ்ந்த நாளன்று 18 வயது நிறைவடையாதவர்களாகவும் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவி தொகை பெறமேற்குறிப்பிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டவாறு அரசுக்கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ்10.11.2024 அன்றைய தேதியில் உயர் கல்வி பயிலும் மற்றும் 10.11.2024க்கு பிறகு உயர் கல்வியில் சேரும் குழந்தைகள் எவரேனும் இருந்தால் விண்ணப்பிக்கலாம். . மேற்குறிப்பிட்ட பட்டாசு தொழிற்சாலை விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஏதுவாக இறந்தவரின் பெயர், பட்டாசு தொழிற்சாலையின் பெயர், விபத்து நாள், வாரிசுகளின் விவரம், வயது மற்றும் கல்வி விவரம், தொடர்பு அலைபேசி எண் மற்றும் முகவரியுடன் கூடிய விவரங்களுடன் “ இணை இயக்குநர், தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம். கதவு எண்- 4,NSPN ஆறுமுகநாடார் ரோடு, தங்கம் மகால் முதல் தளம், சிவகாசி - 626 123. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கும்படியும், மேலும் விண்ணப்பத்துடன் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், விண்ணப்பிக்கும் குழந்தைகளின் பிறந்த தேதி ஆதாரமாக பிறப்புச்சான்றிதழ் அல்லது கல்வி சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அனுப்பும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இது பற்றி கூடுதல் விவரங்கள் அறிய 9865958876 (இணை இயக்குநர், விருதுநகர்), 93447 45064 (இணை இயக்குநர், சிவகாசி) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட மல்லாங்கிணறு கலைஞர் திடலில் இன்று (23.02.2025) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு வைகை ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.75.85 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.கிரண் குரலா,I A S., அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில், கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்திரு.கே.என்.நேருஅவர்கள்,வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்கள்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு ஏற்கனவே உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் உள்ளூர் நீராதாரத்தின் வாயிலாக காரியாபட்டி பேரூராட்சிக்கு 1.75 மில்லியன் லிட்டர் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு 1.00 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு 2024-25 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்களால் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் நீங்கலாக காரியாபட்டி பேரூராட்சிக்கு 2.38 மில்லியன் லிட்டர் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு 1.84 மில்லியன் லிட்டர் என கணக்கிட்டு அப்பேரூராட்சிகளுக்கான ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 29.10.2024 நாளிட்ட அரசு அரசாணை வாயிலாக ரூ.75.85 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு தேவைப்படும் குடிநீரினை வைகை ஆற்றில் 11 நீர் உறுஞ்சு கிணறுகளிலிருந்து 3.96 கிலோ மீட்டர் நீளம், 100MM விட்டமுள்ள இரும்பு குழாய்கள் (DI) வழியாக 9.20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பின்பு 2.38 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள 1.80 இலட்சம் லிட்டர் மேல் சமநிலை நீர்தேக்கத் தொட்டிக்கு (Balancing Reservoir) உந்தப்பட்டு அங்கிருந்து 58.61 கிலோ மீட்டர் நீளமுள்ள இரும்பு குழாய் (DI pipe) மற்றும் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் (HDPE) தன்னோட்ட குழாய்கள் (Gravity Main) மூலம் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு முறையே 80 ஆயிரம் மற்றும் 1.00 இலட்சம் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கு அனுப்பப்படவுள்ளது.அங்கிருந்து குடிநீர் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் குழாய் 13.79 கிலோ மீட்டர் பதிக்கப்படுவதன் மூலம் காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள 23 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் மற்றும் 13.98 கிலோ மீட்டர் பதிக்கப்படுவதன் மூலம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள 22 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் குடிநீர் உந்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படள்ளது.இத்திட்டம் நிறைவுறும் போது இவ்விரு பேரூராட்சிகளிலும் உள்ள 36,200 மக்கள் பயன்பெறுவார்கள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (21.02.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.வனவிலங்குகளால் பயிர் சேதம் குறித்து நேர்முக கடிதம் அரசுச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும், வனவிலங்குகளால் பயிர் சேதம், மனித உயிர் சேதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என துணை இயக்குநர், மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் அவர்கள் தெரிவித்தார். கண்மாய்கள் மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று முன்னுரிமை அடிப்படையில் அப்பகுதிக்குரிய வட்டாட்சியர், செயற்பொறியாளர், நீர்வளத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, விருதுநகர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்கள். சீமைக் கருவேல மரங்களை அரசு ஆணையின்படி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமைக் கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே வனவிலங்குள் காட்டுப்பன்றிகள் பயிர் சேதத்தினை தடுக்க முடியும் என மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்தார்.விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணவும், மனுக்களுக்கான பதில்களை அனைத்து அலுவலர்களும் மனுதாரருக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் உரிய அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திரு.தேவராஜ்,இ.வ.ப., வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,) திருமதி நாச்சியார் அம்மாள், மற்றும் தோட்டக்கலை துணை இயக்குநர் உட்பட பல துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.
விருதுநகர் வே.வ.வன்னியப் பெருமாள் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கியக் கழகம் மற்றும் வே.வ.வன்னியப் பெருமாள் கல்லூரி இணைந்து நடத்தும் உலக தாய்மொழி தினவிழா நிகழ்ச்சியில் (21.02.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.இன்று உலக தாய்மொழி தினம். நாம் எப்படி அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடுகிறோம். அது போல ஒவ்வொருவருக்கும் அவரது தாய் உணர்வு ரீதியாக, அன்பு ரீதியாக எவ்வளவு மிகுந்த நெருக்கத்திற்கு ஆட்டபட்டவரோ, அதே போன்று தாய்மொழியும் அவரவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்.மிகவும் புகழ் மிக்க ஒரு பொருளாதார கோட்பாட்டில், இந்த உலகத்தில் எந்த ஒன்றும் இலவசம் அல்ல என குறிப்பிடுகிறது. மேலும், மொழியை ஏன் பாதுகாக்க வேண்டும், ஏன் ஒவ்வொருவரும் தாய்மொழியை கொண்டாடுகிறார்கள் என்ற அடிப்படை கேள்விக்கு விடையை கண்டுபிடித்தால் நாம் ஒவ்வொருவருமே அவரவர் தாய்மொழியை கொண்டாடுகிறோம்.பாரதிதாசன் அவர்கள் தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாடலில்; உயிரும் தமிழும் ஒன்றுதான். தமிழ்மொழி என்பது 2000 ஆண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்ட இலக்கண இலக்கிய வளங்களை கொண்டது. இன்றளவும் உலகெங்கும் அதிகளவு கொண்டாடப்படக்கூடிய மொழியாக தொன்றுதொட்டு தொடர்ச்சியான இலக்கண இலக்கிய வளங்களை கொண்ட மொழியாக இருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் பத்து கோடிக்கும் அதிகமானவர்கள் பேசக்கூடிய ஒரு மொழியாக இன்றளவும் இருக்கிறது. தமிழ் மொழியில்; 2000 ஆண்டுகளாகவே எந்த ஒரு மாற்றமும் இல்லை. 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு இருக்கக்கூடிய சங்க இலக்கியங்களை எடுத்துப் பார்த்தால் மொழிகளுக்குள் ஒரு பெரிய வேறுபாடு இல்லை.நமது மொழி ஒரு இறுகியத் தன்மை உடையதா என்று பார்த்தால் புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு இந்த மொழி தனது தகவமைப்புகளை பெறவில்லையா என்று பார்த்தால், 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த தொழில் நுட்பங்கள் வேறு. தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் வேறு. அதற்கு ஏற்ப மொழித்தன்னை தகவமைத்து கொண்டிருக்கிறதா என்றால், இதுக்கு இலக்கணமே வழிவகைத்துக் கொண்டிருக்கிறது.ஆங்கிலம் என்பது உலகின் உடைய இணைப்பு மொழி, அறிவு மொழி, அறிவியல் மொழி. நாம் புதுபுது சிந்தனைகளை பெறுவதற்கும்,அறிவியல் தொழில்நுட்பம் பெறுவதற்கும், வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும், ஏன் பாடத்திட்டத்தை பயில்வதற்கும் ஆங்கிலம் தான் வருகிறது. நமது மொழியை படிப்பதன் மூலமாக நிறைய புரிதல் மற்றும் தனிப்பட்ட நலன்கள் இருக்கிறது. நமது மொழி என்பது நமக்கு பல்வேறு இலக்கிய செல்வங்களை கொண்டு தருகிறது. அந்த இலக்கிய செல்வங்கள் என்பது நாம் எப்போது எல்லாம் சோகமாக இருக்கிறோமோ, அப்போதெல்லாம் நமக்கு ஆறுதல் தெரிகிறது. நீங்கள் பறப்பதற்கு வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தீர்கள் என்றால் அப்போது சிறகுகளை தருகிறது. நம் வாழ்க்கையினுடைய போக்குகளில் துன்பங்கள் எதிர்கொள்கின்ற பொழுது சற்றே அருகில் வந்து ஆறுதல் படுத்துகிறது. இன்பக் களிப்புகளை வெற்றிகளை கொண்டாடுவதற்கு பல்வேறு வடிவங்கள் இருப்பதைப் போன்று ஆகச் சிறந்த வடிவம் மொழியாகும்.தமிழ்மொழி அற்றுப்படுத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும், தாங்கிப் பிடிப்பதற்கும் உதவுகிறது. இன்றைய சூழலில் முறையான நமக்கான கல்வி, வேலைவாய்ப்பு என எப்படி இருந்தாலும் ஆணிவேராக இருக்க வேண்டியது நம்முடைய தமிழ் மொழி. இந்த தமிழ் மொழி நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். இலக்கிய செல்வங்களை பெற்றுக்கொள்வதற்கும் நிறைய இருக்கிறது அதனை தேடினால் கண்டறிய முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (20.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் ஊரகம், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், நலத்திட்டங்கள், சேவைகள் முறையாகவும், தரமானதாகவும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதன்படி, சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, இரயில்வே பீடர் சாலையில், சிறு பாலம் அமைப்பதற்கான சாத்திக்கூறுகள் குறித்தும், ஹட்சன் பிளாட் சாலையில் உள்ள தெருவிளக்குகள் குறித்தும், முஸ்லீம் தெருவில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தினையும், வேலாயுத ரஸ்தா சாலையில் உள்ள நான்கு முக்கு பகுதியில் சாலை அகலப்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் வடிகால், பொதுமக்களுக்கான குடிநீர் உள்ளிட்டவற்றை முறையாக மேற்கொள்வது குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை மதி பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ,I A S., அவர்கள் திறந்து வைத்தார்.பின்னர், இராஜபாளையம் வட்டார இயக்க மேலாண்மை அலகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராஜபாளையம் வட்டாரத்தை சேர்ந்த 42 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.49.50 இலட்சம் மதிப்பிலான சமுதாய முதலீட்டு கடனுதவிகளையும்,கிழவிகுளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1.35 கோடி மதிப்பிலும், சுந்தரராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.2.95 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மகளிர் சுய உதவிக்களுக்கு வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பெண்கள்; மகளிர் சுய உதவிக்குழுவில்; இருக்கின்றனர். அதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறு சிறு தொழில்களை செய்யக்கூடியவர்களாகவும், தொழில் முனைவோர்களாக இருக்கிறார்கள்.நிறைய பேர் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளார்கள். இந்த சுய உதவி குழுவில் இணைகின்ற பொழுது அதன் மூலமாக நன்மைகளை பெறக்கூடிய சகோதரிகளாக மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த பெண்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் இன்னும் அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.பெண்களுக்கான விடுதலை என்று சொல்கின்ற பொழுது அவர் விரும்பிய பணியை செய்வது தான் சுதந்திரம்.இன்றைய சமூகத்தில் இன்று மட்டுமல்ல எப்பொழுதும் பெண்களுக்கான மிக வலிமையான விடுதலை என்பது அவர்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார சுதந்திரம் தான். அதிகமாக பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்க வேண்டும். தான் சம்பாதித்ததை, தான் உருவாக்கிக் கொண்ட செல்வத்தை முழுமையாக தானே அந்த செல்வத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு வாய்ப்புகளும், உரிமைகளும் கிடைப்பதே மிக முக்கியமான பெண்களுக்கான விடுதலை ஆகும்.பெண்கள் தங்களுக்கான அரசு திட்டங்களை தெரிந்துகொண்டு, தொழில் வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை பெற்று, அரசு மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை முறையாக முதலீடு செய்து தங்களுடைய வருமானத்தை பெருக்கி, குடும்ப பொருளாதாரத்தையும், சமூக பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு. திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.