விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (31.05. 2024) பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023 -2024 ஆம் கல்வியாண்டில் கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் வழங்கினார்.தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. அதனடிப்படையில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளையும், மாணவ, மாணவிகளையும் ஊக்குவிக்கும் வகையில் காமராசர் விருது வழங்கி கவுரவிக்கிறது. தமிழக அரசு காமராஜர் விருதினை சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து வருடத்திற்கு ஒருமுறை வழங்கி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் இந்த வருடம் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என அனைத்து விதமான பள்ளிகளில் இருந்தும், குழுக்கள் அமைத்து அதில் 4 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அதனடிப்படையில், கிழவிகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ.25,000/- த்திற்கான காசோலையும், மானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50,000/-த்திற்கான காசோலையும், மம்சாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75,000/-த்திற்கான காசோலையும்,சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, வரும் கல்வி ஆண்டில் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டுமென தலையாசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி இரா.வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திருமதி பெ.இந்திரா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (F.L-1), F.L-2/F.L-3/FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, மக்களவை பொதுத்தேர்தல்- 2024 வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 அன்று முழுவதும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் F.L-1> F.L-2/F.L-3/FL-4A மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் (31.05.2024) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில், தாய் சேய் நலம் குறித்து நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கு பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் தாய் சேய் சிசு இறப்பு விகிதத்தை குறைத்து விருதுநகர் மாவட்டத்தினை தாய் சேய் இறப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க மாவட்ட நிர்வாகம் முன்னெடுப்பில் கடந்த ஒரு மாத காலம் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி நடைபெற்றது.விருதுநகர்மாவட்டத்தில், மருத்துவ வசதிக்கு எந்த ஒரு குறைபாடும் கிடையாது. குறிப்பாக பேறுகாலத்தில் அவர்களுக்கு ஏற்பட கூடிய சிக்கல்கள் தவிர்ப்பதற்காக, குழந்தைபேறு அவர்களுக்கு மருத்துவமனையில் நடக்க வேண்டும். அதுவும் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களால்மற்றும்மருத்துவப்பணியாளர்களால்நடத்தப்படவேண்டும்என்பதுதான்அரசின்முக்கியமானமருத்துவக்கொள்கையாகும்.நமது மாவட்டத்தில் இரண்டு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஊர்களிலும் 2 கி.மீ தொலைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 கி.மீட்டருக்குள் அரசு மருத்துவமனை உள்ளன.குழந்தை இறப்பு விகிதம் என்பது ஒரு குழந்தை பிறந்து, ஒரு வருடத்திற்குள் இறந்து போவது என்பதாகும். மேலும், குழந்தை பிறப்பின் போது பிரசவத்தில் தாய்மார்கள் இறப்பு என்பது இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த இறப்பிற்கு காரணம் இவ்வளவு மருத்துவ வசதிகள் மட்டும் போதாது இதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு தாய்மார்களிடம் இல்லததுதான் காரணம்.கர்ப்பகாலத்தில் ஆறு மாதத்திற்குள் தாய்மார்களுக்கு இரும்பு சத்தின் அளவு சரியாக இருப்பது குறித்தும் மற்றும் கர்ப்பகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.தமிழ்நாட்டில் நமது மாவட்டம் சிறந்த மருத்துவ முறைகளை வழங்கி வந்தாலும், குழந்தை இறப்பு விகிதம் அதிக அளவு காணப்படுகிறது. அதனால் அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்பது குறித்தும், அவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவர்களின் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி குறைவாக காணப்படும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் குறிப்பாக இளம் வயதில் 18 வயதிற்குள் திருமணம் செய்து, இளம் தாய்மார்களாக உருவாகிறார்கள். இளம் வயதில் கருவுற்றால் அவருக்கு பிறக்கு குழந்தைகளும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறக்கும் சூழ்நிலை உருவாகிறது.கருவுற்ற தாய்மாருகளுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இரத்த சோகை ஆகிய காரணங்களினால் ஏற்படும் பிரச்சனைகளால் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை குறைந்து அந்த குழந்தை உயிர் வாழ வாய்ப்பு குறைவாக காணப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் கவனிப்பு மருத்துவமனைகள் (சீமான் சென்டர்- CEMON CENTER) என்ற மருத்துவமனை ஆறு இடங்களில் உள்ளது, அதாவது சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய இடங்களில் உள்ளது. இந்த மருத்துவமனையில் பாதுகாப்பான பிரசவம் மற்றும் தாய் சேய் நலம் உறுதிப்படுத்தப்படும்.இப்பயிற்சியில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி நமது மாவட்டத்தில் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.இப்பயிற்சியில் 850 அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பயிற்சி வழங்கிய மருத்துவ அலுவலர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பயிற்சி கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம்) திருமதி தனலெட்சுமி, தலைமை மருத்துவர் திருமதி பிச்சைகாளி (அருப்புக்கோட்டை), தலைமை மருத்துவர் திரு.அய்யனார்(சிவகாசி), மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை, Redington Foundation மற்றும் Learning Links Foundation சார்பில் அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்த Digital Literacy தொடர்பான பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும், உயர்கல்வி, போட்டித்தேர்வு, வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டவும், இளம் பசுமையாளர்களை உருவாக்கவும், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப்பணிகள் குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கவும், தொழிற்சாலைகள், விண்வெளி தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பாக அரசு பள்ளிகளில் 5 முதல் 9 -ஆம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு யிலும் மாணவர்களுக்கு, Digital Literacy தொடர்பாக (MS-Office, Basics of Computer, E-mail Creation ) தொடர்பாகவும், கல்லூரி மாணவர்கள் Cyber Crime, Cyber safety மற்றும் Artificial Intelligence தொடர்பாகவும், கிராமப்புற பொதுமக்கள் ; Aadhar card, Pan card, Digital Money Transfer தொடர்பாகவும், அறிந்து, தெரிந்து பயன்பெறும் வகையில் Digital Literacy தொடர்பான பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டு,Redington Foundation, Learning Links Foundation சார்பில் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அடிப்படையான கணினி தொழில்நுட்பங்களை அரசு பள்ளி மாணவர்கள் Digital Literacy பயிற்சி மூலமாக அறிந்து பயன்பெற முடியும்.தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இணையவழி குற்றம் என்றால் என்ன? அதில் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி? இணையவழி பாதுகாப்பு தொடர்பான படிப்புகள் குறித்தும், தொழில்நுட்ப கல்வியறிவு குறித்தும், இணையவழி குற்றங்களிலிருந்து மாணவர்கள் தங்களையும், தங்களுடைய தரவுகளையும் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளன. மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும் ஆற்றல் கொண்ட ஒரு தொழில்நுட்பமாகும். AI தொழில்நுட்பம் Machine Learning என்னும் கணினி நிரலாக்க மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகும். இது எதிர்காலத்தில் பல்வேறு முன்னேற்றங்களை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல மேம்பட்ட Automation மற்றும் இயந்திரங்கள், தானாக முடிவெடுக்கும் திறன்கள் வளர்ச்சி பெறும். AI தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. எனவே,AI தொழில்நுட்பம் குறித்து கல்லூரி மாணவர்கள் அறிந்து, தெரிந்து பயன்பெறும் வகையில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.இந்த Digital பேருந்தானது, மாவட்டம் முழுவதும் 5 வருடத்திற்கு தொடர்ந்து இயக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட உள்ளது. 2024 -2025 ஆம் ஆண்டில் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரத்திலும், 2025-2026 விருதுநகர் மற்றும் சாத்தூர் வட்டாரத்திலும், 2026-2027 திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, இராஜபாளையம் வட்டாரத்திலும், 2027-2028 அருப்புக்கோட்டை, நரிக்குடி வட்டாரத்திலும், 2028-2029 காரியாபட்டி, திருச்சுழி வட்டாரத்திலும் Digital பேருந்து இயக்கப்பட்டு, Digital Literacy தொடர்பான சேவைகள் வழங்கப்பட உள்ளது. எனவே, இந்த பயிற்சியை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 3500 ஏக்கர் பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர்க்கு 20 கிலோ தக்கைப் பூண்டு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025-ம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர உற்பத்தியினை ஊக்குவித்தல் இனம் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது உள்ள தொழில் முறை வேளாண்மையில் ஒரே பயிரை சாகுபடி செய்வதாலும் மண்ணிலிருந்து சத்துக்களை அதிக உறிஞ்சும் வீரிய ஒட்டு ரக பயிர்களை சாகுபடி செய்வதாலும் மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது.இது தவிர உற்பத்தி அதிகரிப்பதற்கென அதிக அளவில் இராசயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சி மருந்துகள், போன்றவற்றை பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும், நலமும் குன்றி அதிக அளவில் நிலங்கள் களர்; உவர், அமில நிலங்களாக மாறியுள்ளன.இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மலடான மண்ணைத்தான் நம் எதிர்கால தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் நிலை ஏற்படும். மண்வளத்தை பேணி காக்கவும், மக்கள் நலம் காக்கும் விதமாகவும் உயிர்ம வேளாண்மை அதிகரித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதி உடையவர் ஆவர். விவசாயிகள் நேரடியாக உழவன் செயலில் பதிவு செய்து இத்திட்டத்தின் பயனை எளிதில் பெறலாம். விவசாயிகள் நில ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின்; சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (30.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, வெம்பக்கோட்டை வட்டாரம், இரவார்பட்டி கிராமத்தில், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வைக்கான இயக்கம் 2023-24 (TNMSGCF) திட்டத்தின்கீழ், 5 ஏக்கர் பரப்பளவில் 950 சவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதையும்,அதனை தொடர்ந்து, சுப்பிரமணியபுரம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் முறையில் 5 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதையும்,தாயில்பட்டி கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கமலம் பழம் மானியத்தில் வழங்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, வேளாண்மை துணை இயக்குநர் /மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி ஆ.நாச்சியார் அம்மாள், திருவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி கு.தனலட்சுமி, வேளாண்மைத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துகளைக் குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திடும் நோக்கில் தமிழக அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம்.இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48" திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவினங்களை குறைக்கும் இந்த உயிர்காக்கும் உன்னத திட்டத்தின் கீழ் விபத்து நிகழும் பகுதிகளுக்கு அருகாமையிலுள்ள 683 மருத்துவமனைகளில் 213.47 கோடி ரூபாயில் செலவில் ரூ.2.45 இலட்சம் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 61,802 நபர்களுக்கு ரூ.45.87 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (29.05.2024) சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக தேசிய வனப்பயிற்சி முகாமிற்கு டார்ஜிலிங் அழைத்துச் சென்றுவரப்பட்ட 54 மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ,I A S, அவர்களை சந்தித்து தங்கள் பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பங்கு பெற்ற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 13.05.2024 முதல் 17.05.2024 வரை தேசிய அளவிலான “அட்வன்ஜர் முகாம்” நடைபெற்றது. இம்முகாமில், திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 40 சாரணர்கள், 14 சாரணியர்கள் உட்பட 6 ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.மேலும், இம்முகாமில் சாரண, சாரணியர்களுக்கு மலையேறும் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், வில் எரிதல், கயிறு ஏறுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.
சுதந்திர தினவிழாவின்போது, தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது 2024 வழங்கப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விதிமுறைகள்தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில், தொடர்ந்து பணியாற்றும் சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட தகுதியுடைய சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் இருப்பின் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக 20.06.2024-க்குள் விண்ணப்பித்து, பின்பு உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 24.06.2024-க்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். அலைபேசி எண்: 04562-252701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், IAS அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 90 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி- I (குரூப் 1) தேர்வு வரும் 13.07.2024 அன்று நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்இசூலக்கரையில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்று நர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.எனவே, TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.