25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 10, 2024

குரூப்-IV (TNPSC Group-IV) பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி லயன்ஸ் மேல்நிலைப்பள்ளியில்  (09.06.2024) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-IV (TNPSC Group-IV) பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், IAS., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Jun 10, 2024

சிவகாசி செங்குளம் கண்மாயில் சுற்றுசூழல் மறுசீரமைப்பு செய்யும் பணி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் (09.06.2024) சிவகாசி மாநகராட்சி, பசுமை மன்றம் மற்றும் ராஜா KSP சேரிட்டீஸ் சார்பில் சிவகாசி செங்குளம் கண்மாயில் சுற்றுசூழல் மறுசீரமைப்பு செய்யும் பணியினை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் அவர்கள் துவக்கி வைத்தார். வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் துவக்கி வைத்தார். 

Jun 08, 2024

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூர்  ஊராட்சி, முண்டலப்புரம் கிராமத்தில்  (07.06.2024) நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.50இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை  விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,   மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் திறந்து வைத்தார்.பொதுவாக ஒரு கிராமத்தில், ஒரு நகரத்தில், ஒரு ஊரில் அரசு நிகழ்ச்சி அல்லது தனியார் நிகழ்ச்சி நடக்கும். ஆனால் அரசும், ஊர் பொதுமக்களும் இணைந்து நடத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இந்த கிராமத்தில் பொதுமக்கள் இணைந்து அரசியல் பங்களிப்போடு சுமார் ரூ.50 இலட்சம் செலவில், 2300 சதுர அடி அளவில் சுமார் 200 நபர்கள் அமர்ந்து திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு இந்த சமுதாய நலக்கூடம் கட்டி இருக்கிறீர்கள்.இதை இந்த கிராமத்திற்கான ஒரு சொத்து என்பதை தாண்டி, இது போன்று அரசுடன் இணைந்து பொதுமக்கள் பங்களிப்புடன் செய்தால் இன்னும் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக கொண்டு வர இயலும். மேலும் மற்ற கிராமங்களுக்கும் பல்வேறு ஊராட்சிகளுக்கும் நீங்கள் முன்னுதாரணமாக இருப்பீர்கள் என்று சொன்னாலும் கூட அது மிகையாகாது. நிதித்துறை அமைச்சர் அவர்களும்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களும் இந்த திட்டத்தின் கீழ், மிகப்பெரிய ஒத்துழைப்பை நல்கி, தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் 100 சமுதாயக்கூடங்கள் புதிதாக கட்டியும், ஏற்கனவே  பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை பழுது நீக்கியும், சரிசெய்தும் அதனை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.மேலும், ஒரு கிராமத்திற்கு சமுதாயக்கூடம் என்பது முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த மாதிரி ஒரு சமுதாயக்கூடம் ஏற்படுத்துவது என்பது அந்த கிராமத்திற்கும், அங்குள்ள பொதுமக்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நிறைய நன்மைகளை நேரடியாகவும், மறைமுகவாகவும் செய்யக்கூடிய ஒரு அமைப்பாக உள்ளது.எனவே, இப்படிப்பட்ட கட்டிடங்களை அரசு பல்வேறு திட்டங்களின் மூலமாக செயல்படுத்தி வருகிறது. முழுமையாக அரசு திட்டங்களுடன் சேர்ந்து பொதுமக்களும் பங்களித்து செயல்படுத்துவதற்கு தான் நமக்கு நாமே திட்டம் அரசு வழங்கி இருக்கிறது. அதனை நன்கு பயன்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சுமதி ராஜசேகர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 08, 2024

சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர்  மிளகாய் வத்தல் மண்டபத்தில்  (07.06.2024) கரிசல் இலக்கிய கழகம் சார்பில், சுற்றுச்சூழல் தின கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும் நாமும் நமது வருங்காலச் சந்ததிகளும் அறிந்து கொள்ளவும், கரிசல் இலக்கியங்கள் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துவதும், கரிசல் இலக்கியப் படைப்புகளை மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பதும், புதிய படைப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மாணவர்கள், பொதுமக்கள், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும், கரிசல் இலக்கியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் “கரிசல் இலக்கிய கழகம்”  உருவாக்கப்பட்டு, பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக இன்று சுற்றுச்சூழல் தின கருத்தரங்க நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.கரிசல் மண்ணான நமது பகுதிகளில் நீர் நிலைகளை எவ்வாறு உருவாக்கி, பாதுகாத்தனர். நீரினை தேக்கி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்ற குறிப்புகள் கரிசல் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கின்றது.  பண்டைய காலத்தில் நீர் நிலைகளை எவ்வாறு பாதுகாத்தனர் என்பது குறித்த பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெளிவாக எடுத்துரைக்கிறது. நீர் அதிகமாக உள்ள பகுதிகளில் அதன் பெருமைகளை பேசுவதை விட, நீர் குறைவாக உள்ள பகுதிகளில் தான் நீரின் பெருமைகள் பற்றி உணர்ந்துள்ளனர்.நீர்நிலைகள் அனைத்து உயிரினங்களுக்கும் பயன்படும் வகையில் அதன் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். இவ்வாறு பண்டைய காலங்களில் மிகவும் பாதுகாப்பாக இருந்த நீர்நிலைகள் தற்போது மாசடைந்து வருகின்றது.நீர்நிலைகளில் பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டி வந்துள்ள நிலை மாறி, தற்போது நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அனைத்து பகுதிகளிலும் வசிக்கக்கூடிய மக்களுக்கு வந்திருக்கிறது. நமது மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் இயற்கை மற்றும் பல்லுயிர் சமநிலையை பாதுகாக்க கூடிய  நிறைய பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன.நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய மேற்கு தொடர்ச்சி மலையானது பல்லுயிர்  சமநிலையை பாதுகாக்க கூடிய ஒரு மையமாக செயல்பட்டு வருகிறது. மலைகளில் உற்பத்தியாக கூடிய நீரினை முறையாக மேலாண்மை செய்தால், நமது மாவட்டத்தினுடைய அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம். இந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும், நீர்நிலைகளை பேணி பாதுகாப்பதற்கும், உரிய சிந்தனையை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்ற வேலையை இந்த கரிசல் இலக்கிய கழகமானது தொடர்ந்து செய்யும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், எழுத்தாளர் பாமயன் அவர்கள் சுற்றுச்சூழலும், கரிசல் இலக்கியமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து, எழுத்தாளர் பாமா, கரிசல் இலக்கிய கழக பொருளாளர் திரு.பெருமாள் சாமி ஆகியோர் சுற்றுச்சூழல் மற்றும் கரிசல் இலக்கியம் குறித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.முன்னதாக சுற்றுச் சூழல் குறித்த ஓவிய கண்காட்சியினை கரிசல் இலக்கிய கழக செயற்குழு உறுப்பினர் திரு.ரவீந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், தேவராட்டம், வாள் சண்டை, யோகா உள்ளிட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்நிகழ்ச்சியில் கரிசல் இலக்கிய செயலாளர் மரு.த.அறம் அவர்கள் வரவேற்புரையும், கரிசல் இலக்கிய கழக செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் காமராஜ் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 07, 2024

சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள்  (06.06.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, சிவகாசி மாநகராட்சி, பெரியார் காலனியில் காலனியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் தேசிய நகர்ப்புற சுகாதார பணியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும்,கவிதா நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.43 இலட்சம் மதிப்பில் குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் விளையாட்டுக்களம் அமைக்கப்பட்டு வருவதையும்,விருதுநகர் - திருத்தங்கல் சாலையில்; செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில், சேரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் அனைத்தும் அதற்கான இயந்திரத்தில் அரவை செய்யப்பட்டு,  தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள், ரப்பர், நெகிலி, மரக்கட்டை உள்ளிட்ட திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணிகளையும்,சிறப்பு நிதியின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 56 இலட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Jun 07, 2024

அருப்புக்கோட்டை நகரில் வார்டு ‘E” பிளாக் 5 உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள நகர நிலஅளவை புலங்களுக்கு நகர நிலவரித்திட்டத்தின் கீழ் வருவாய் பின்தொடர்பணி மேற்கொள்ளும் பணி

நமது தமிழ்நாடு அரசானது பொதுமக்களின் நலன் கருதி பொது மக்கள் தங்களது நில ஆவணங்களை எளிதில் எங்கிருந்தும் உடனடியாக பெற்றுக்கொள்ள ஏதுவாக ஆன்லைன் பட்டா திட்டம் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.         தற்போது நமது அருப்புக்கோட்டை நகரில் நகர நில அளவைக்குட்பட்ட வார்டு ‘E” பிளாக் 5 உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள நகர நிலஅளவை புலங்களுக்கு நகர நிலவரித்திட்டத்தின் கீழ் வருவாய் பின்தொடர்பணி மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.          பொதுமக்கள் தங்கள் கிரைய ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட வீட்டு மனைகளுக்கு கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா பெறவும், பாகவிஸ்தி பத்திரங்கள் அடிப்படையில் தனிப்பட்டா பெறவும், கிரையம் பெற்றது முதற்கொண்டு நாளது தேதி வரை பட்டாமாற்றம் செய்யாமல் இருப்பின், பட்டா பெறவும், தங்களிடம் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணங்களின் நகல்களுடன் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.தேவைப்படும் ஆவணங்கள்:1. கிரைய ஆவணம் மற்றும் மூல ஆவணத்தின் நகல்2. வில்லங்கச்சான்று (EC)3. ஆதார் அட்டை நகல்4. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்5. இறப்பு மற்றும் வாரிசு சான்று (இறந்தவரின் பெயரில் பட்டா இருக்கும் நேர்வுகளில்)

Jun 07, 2024

தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் ஒரு உன்னதமான இடத்தினை பிடித்துள்ளது. விவசாயத்திற்கு அடுத்த படியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பினை வழங்குவதில் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகும்.தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணிநூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் ((SITRA)  மூலமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள்  https://tntextiles.tn.gov.in/jobs/  என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டுமாறு தெரிவிக்கப்படுகிறது.     மேலும் துணிநூல் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள், உற்பத்தி கூட கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை விருதுநகர் மாவட்டத்தில் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும்.மேலும், இது குறித்த விபரங்களுக்கு, துணை இயக்குநர், மண்டல துணிநூல் துணை இயக்குநர் அலுவலகம், 39, விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, மதுரை- 625- 014,  மின்னஞ்சல் முகவரி -ddtextilesmdu@gmail.com.  தொலைபேசி எண். 0452-2530020, 96595 32005. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 06, 2024

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,  (05.06.2024) மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி நடைப்பயண விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து,  மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம்  மூலம் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலமும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக  பசுமை விருதுநகர் இயக்கம் மூலமும் பல்வேறு கட்டங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நில மறுசீரமைப்பு, பாலைவனமாதலை தடுத்தல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மை ஆகியவற்றை நோக்கமாக  கொண்டு, ஜீன் மாதத்தில் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரம் பகுதியில் 200 மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தும்,பின்னர், வெள்ளூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி, சுற்றுச்சூழல் விழிப்புணர்பு பதாகைகளுடன் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, சிவகாசி ஊராட்சி ஒன்றியம் வடமலாபுரம் செக் போஸ்ட் அருகில் 400 மரக்கன்றுகள் மற்றும் ஆனையூர் பகுதியில் 100 மரக்கன்றுகள் நடும் பணிகளையும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், சமீப காலமாக புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் வறட்சியினை தடுப்பதற்கும் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையினை போக்குவதற்கும், மரம் நடுதல் ஒன்றே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்பதையும்  பல்வேறு சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள், ஊடகவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இதை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டியதின் அவசியத்தை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.இது போன்று தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த சீரிய முயற்சியில் அனைவரும் தவறாது பங்கு கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து இந்த பூமியை அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்விடமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 06, 2024

திருநங்கைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் வரும் 21.06.2024 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இம்முகாமில் கீழ்காணும் சேவைகள் செய்து  தரப்படுகின்றன.  1. திருநங்கைகள் நல வாரிய அட்டை வழங்குதல்2. ஆதார் அட்டையில்  திருத்தம் மேற்கொள்ளுதல்3. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல்4. ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்குதல்5. வாக்காளர் அட்டை வழங்குதல்  மேற்கண்ட நாளில் நடைபெறும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 06, 2024

பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மூலம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் அரசு பள்ளியில் தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மூலம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி  (05.06.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

1 2 ... 49 50 51 52 53 54 55 ... 69 70

AD's



More News