அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (22.11.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நடைபெற்ற 15-ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு மற்றொரு மருத்துவ சேவை சார்ந்த திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.மாநிலம் முழுவதும் 1,256 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, அனைத்து வயதினருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் நோய்களை கண்டறிந்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் காப்பாற்றுவதே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.பொதுவாகதனியார்மருத்துவமனையில்முழுஉடல்பரிசோதனைகள்செய்யரூ.15,000வரைசெலவாகிறது.ஆனால், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் மக்களை தேடிச் சென்று அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகளும், மருந்துகளும் கூட இலவசமாகவே வழங்கப்படுகின்றது.இதனால், கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வசதி இல்லாத ஏழை, எளிய மக்கள் பெரியளவில் பயனடைந்து வருகின்றனர். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முகாமின் போது பொதுமக்கள் எளிதாக புரிந்துக் கொள்ளும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், இம்முகாமில் குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 14 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 15 ஆவது முறையாக அருப்புக்கோட்டை வட்டம், பந்தல்குடி ஊராட்சியில் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டைகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டைகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் உள்ளிடவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 10 நகர் பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் (21.11.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திடவும், பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திடவும், போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகளை ஒதுக்கீடு செய்யவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக தற்போது 9 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக தற்போது 10 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் - ஒண்டிப்புலி வழித்தடம், விருதுநகர் – பேரையூர் வழித்தடம், சாத்தூர் - நாருகாபுரம் வழித்தடம், சாத்தூர் - திருத்தங்கல் வழித்தடம், அருப்புக்கோட்டை - உடையநாதபுரம் வழித்தடம், அருப்புக்கோட்டை – பி.தொட்டியான்குளம் வழித்தடம், திருவில்லிபுத்தூர் – இராஜபாளையம் - திருவில்லிபுத்தூர் - சிவகாசி வழித்தடம், இராஜபாளையம் – திருவில்லிபுத்தூர் – கான்சாபுரம் வழித்தடம், இராஜபாளையம் – திருவேங்கடம் - இராஜபாளையம் – மாங்குடி வழித்தடம், காரியாபட்டி – திருவளநல்லூர் – காரியாபட்டி - அருப்புக்கோட்டை வழித்தடம் ஆகிய 10 வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளின் சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மண்டல பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்) திரு.கோபாலகிருஷ்ணன், துணை இயக்குநர்(போக்குவரத்து கழகம்) திரு.தங்கவேலு, விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், உதவி மேலாளர்(வணிகம்) திரு.நாகராஜ், உதவி பொறியாளர் திரு.தமிழ்செல்வன், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துக்கழக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (21.11.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும், கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.விவசாயிகள் மனுக்களை தொடர்ச்சியாக அளிக்காமல் நடவடிக்கை விபரங்களை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டறிய அறிவுறுத்தப்பட்டது. கோட்டாட்சியர் தலைமையில் மாதந்தோறும் கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தவறாது கலந்து கொண்டு விவசாயிகளின் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.வனவிலங்குகளால் பயிர் சேதம் அதிகஅளவில் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், நிவாரணத்திற்கு நடவடிக்கை எடுத்து பயிர் இழப்பீடு உடனடியாக வழங்கவும், வனவிலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் கிராம அளவில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழுக்கள் மூலமாக உரிய மேல் நடவடிக்கைகளை எடுத்து, வன விலங்குளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும், உரங்கள் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், அத்திகுண்டு முதல் கல்லுக்கட்டு ஊரணி வரை தார்ச்சாலை அமைக்க தொடர் நடவடிக்கை எடுக்குமாறும், நெல்கொள்முதல் நிலையங்கள் அதிகளவில் திறக்க நடவடிக்கை எடுக்குமாறும், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறும் தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.தொடர்ந்து, பல்வேறு நகராட்சிகள்,மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தவும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,) திருமதி அ.அம்சவேணி , வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி மு.சுமதி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி , செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திருமதி செல்வி, இணை பதிவாளர்கள், கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகள் உட்பட பல துறை அரசு அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (21.11.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, விருதுநகர் மாவட்ட குடும்பநல செயலகத்தின் சார்பாக உலக வாசக்டமி இருவார விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தமிழ்நாட்டில் குடும்பநலத் திட்டம் 1956 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாய் சேய் நல விகிதத்தை மேம்படுத்துவதும், பிறப்பு விகிதத்தை குறைப்பதும் முக்கிய குறிக்கோள் ஆகும்.குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. குடும்பநலத் திட்டம் மக்கள் திட்டமாக செயல்படுவதால் சமுதாயத்தின் ஒத்துழைப்புடன் மக்கள் தாமே விரும்பி ஏற்றுக்கொள்ளும் திட்டமாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக பெண்களே குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. ஆண்களும் எளிய பாதுகாப்பான முறையில் கருத்தடை செய்து கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஆண்களுக்கு ஏற்படும் பொருட்டு வருடந்தோறும் நவம்பர் 21முதல்27வரைவிழிப்புணர்வுவாரமாகவும்நவம்பர்28முதல்டிசம்பர்04வரைசேவைவழங்கும்வாரமாகவும்கடைபிடிக்கப்படுகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் ஆண்களுக்கான தழும்பில்லா நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை இருவார விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் பொருட்டு விருதுநகர் மாவட்ட குடும்பநல செயலகத்தின் சார்பாக உலக வாசக்டமி இருவார விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த வாகனம் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று ஆண்களுக்கான தழும்பில்லா நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.ஆண்களுக்கான நவீன தழும்பில்லா குடும்பநல கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக் கொள்ளும் பயனாளிகளுக்கு அரசு உதவித்தொகை ரூ.1100/- மற்றும் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3900/- சேர்த்து மொத்த ஊக்கத்தொகை ரூ.5000/- வழங்கப்படும்.ஆண்களுக்கான தழும்பில்லா நிரந்தர கருத்தடை சிகிச்சை முறை சேவையை தகுதி வாய்ந்த ஆண்கள் எளிதில் பெறும் வகையில் வருகின்ற 27.11.2025 வியாழக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை மிக மிக எளிமையானது. மிகவும் பாதுகாப்பானது. பயப்பட தேவையில்லை. மயக்க மருந்து கொடுப்பதில்லை. 5 நிமிடங்களில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை கிடையாது. தையல் போடுவது கிடையாது. மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. சிகிச்சை முடிந்த உடன் வீடு திரும்பலாம். குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை. இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் கிடையாது. எப்போதும் போல் இல்லற உறவு கொள்ளலாம். எனவே, அலுவலர்கள், பணியாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாய வேலை செய்வோர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வெடி மருந்து கம்பெனி மற்றும் பிரிண்டிங் பிரஸ் போன்ற கடினமான வேலை செய்வோர்கள் கூட கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளலாம். கருத்தடை சிகிச்சைக்கு பின்னரும் முன்னர் செய்த அதே வேலையினை எவ்வித களைப்பும் இன்றி எப்போதும் போல இயல்பாக செய்ய முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(குடும்பநலம்) (பொ) மரு.இராஜன், மாவட்ட குடும்ப நல அலுவலர்கள், மருத்துவப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம் வெள்ளுர் அரசு உயர்நிலைப்பள்ளியில் (21.11.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்(SIR) தொடர்பாக, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவிசெய்வதற்காகவும்,படிவங்களைநிரப்புவதற்கும்,நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடிமையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என் ஓ.சுகபுத்ரா , I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தினால் உதவியாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்வு அறிவிக்கை 06.08.2025-இல் வெளியிடப்பட்டது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற்றது.இத்தேர்விற்கான நேர்முகத்தேர்வு 26.11.2025 முதல் நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் வெற்றிபெற்றோர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி நேர்காணலில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு நேர்காணல் குறித்த விழிப்புணர்வு மற்றும் தேர்ச்சி பெறுவதற்கான நுணுக்கங்கள் குறித்த ஆலோசனைகள் துறை வல்லுநர்களை கொண்டு 24.11.2025 திங்கள் அன்று காலை 10.30 மணியளவில் வழங்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இம்மாதிரி இலவச நேர்காணலினை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 93601-71161 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வருகைபுரிந்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ர,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் தொடர்பாக இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெறாத வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (20.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்றும் வருகின்றனர். இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 15,82,225 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 19.11.2025 மற்றும் 20.11.2025 ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, விருதுநகர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாக்குச்சாவடி மையங்களான மீசலூர் த.அ.சீனிவாசா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் செவல்பட்டி தாமு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் 4 ஆவது புத்தகக் கண்காட்சியில், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் பொது மக்களுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 சிறப்பு ஆலோசனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்றும் வருகின்றனர். மேலும், பெறப்பட்ட படிவங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும் பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்று வரும் விருதுநகர் 4 ஆவது புத்தகக் கண்காட்சியில் அரங்கம் எண் 28-ல் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 சிறப்பு ஆலோசனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த அரங்கத்தில், சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 மூலம் நடைபெற்று வரும் பணிகளின் முக்கிய தினங்கள், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவது, 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரையோ அல்லது தங்களின் தந்தை/தாய்/தாத்தா/பாட்டி பெயர்களைக் கண்டறிவதற்கும் ஆலோசனைகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.எனவே, வாக்காளர்கள் இந்த சிறப்பு ஆலோசனை மையத்தில், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 தொடர்பான சந்தேகங்களை கேட்டறிந்து, பயன்பெறுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், மீசலூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து (20.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மீசலூர் ஊராட்சியில் அமைந்துள்ள நியாய விலைக்கடையில் பொருட்களின் இருப்பு மற்றும் அவற்றின் தரம் குறித்தும், பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், பொருட்களின் வழங்கல் முறை குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, மீசலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால மற்றும் நடுத்தரக் கால பயிர்க்கடன் குறித்த விவரங்களையும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.பின், த.நா.சீனிவாசா அரசு மேல்நிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றின் தரம் மற்றும் சுகாதாரத்தன்மை குறித்தும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
.1.1.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டுவாக்காளர்பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்றும் வருகின்றனர். இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 15,82,225வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடிமையங்களில் 19-11-2025 புதன் கிழமை மற்றும் 20.11.2025 வியாழக் கிழமை ஆகிய 2 தினங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டதன் பேரில் வாக்காளர்கள் பெருமளவில் இம்முகாம்களில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த படிவங்களைப் பூர்த்தி செய்து அளித்துள்ளனர். எனவே இந்த சிறப்பு முகாம்களை 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெறாதவர்களும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்து அளிக்காதவர்களும் இச்சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.