25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 06, 2024

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்

இளைஞர் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015, பிரிவு 56-ன்கீழ் தத்தெடுத்தல் திட்டத்தின் மூலம் குழந்தையை சட்டப்படி தத்தெடுத்து வளர்க்கலாம்.  அவ்வாறின்று சட்டத்திற்கு புறம்பாக குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது மற்றும் குழந்தையை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து புகார் வரப்பெற்றால் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வழக்கு விசாரணையின்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.தத்தெடுத்தல் திட்டத்தின்கீழ் பெற்றோர் இருவரும் இல்லாத குழந்தைகள் (Orphan),  பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் (Abandoned), பெற்றோரால் வளர்க்க முடியாமல் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் (Surrendered)  மற்றும் உறவுமுறையில் குழந்தைகளை (Relative child adoption) தத்தெடுத்து வளர்க்கலாம். அவ்வாறு குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மத்திய தத்துவள ஆதார மையத்தின் www.cara.nic.in  என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யவேண்டும்.அவ்விணையதளத்தில் பெற்றோருக்கான (Parents)  என்ற பகுதியினை தெரிவு செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கணவன், மனைவி ஆகியோரின் பின்கண்ட சான்றுகளான 1. பிறப்புச்சான்று, 2. ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை/ரேசன் கார்டு, 3.பான்கார்டு, 4.திருமண பதிவுச்சான்று, 5.மருத்துவ அலுவலரின் உடற்தகுதிச்சான்று, 6.தம்பதியரின் புகைப்படம், 7.குடும்ப ஆண்டு வருமானச்சான்று, 8.அரசு/தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான சான்று, 9.நண்பர்/உறவினரால் வழங்கப்படும் ஆளறிச்சான்றுகளை பதிவேற்றம் செய்யவேண்டும்.மேலும், விபரங்களுக்கு “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5, வ.உ.சி. நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626003, தொலைபேசி எண். 04562 293946 அல்லது அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம்அல்லது சிறப்பு தத்தெடுப்பு மையங்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 06, 2024

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (05.06.2024) பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்.  I A S,  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை, அவர்களின் மறுவாழ்வு, இழப்பீடு பெற்று தருதல், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை குழந்தைகள் பாதுகாப்பில் திறம்பட பயன்படுத்துவது மற்றும் வழக்குகளில் விரைவான நீதியை பெற்று தருதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலமாக குழந்தைகளை கண்காணித்தல், அவர்களை முன்பருவ கல்வியில் விடுதல் இன்றி சேர்த்தல்,சமூக நலத்துறையின் மூலம் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆற்றுப்படுத்துதல், அவர்களுக்கு சட்ட உதவியை பெற்று தருதல் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு நிதியினை வழங்குதல், குழந்தை திருமணம் நடைபெறா வண்ணம் குழந்தைகளை கல்வி பயில்வதை ஊக்குவிக்கவும், குழந்தை திருமணம் நடைபெற்றால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.பின்னர், சுகாதாரத்துறையின் மூலம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் கண்டறிதல் குறித்தவிழிப்புணர்வை மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் மூலமாக ஏற்படுத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டது.மகளிர் திட்டம் மூலமாக சுய உதவி குழுவினருக்கு கடன்களை பெற்றுதருதலில் இலக்குகளை எட்டுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி பேச்சியம்மாள்,  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு சூரியமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி விசாலாட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி தனலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி அருள்செல்வி மாவட்ட செயலாளர். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் திருமதி ராசாத்தி, குழந்தைகள் நலக்குழு தலைவர் திருமதி கெங்கா, அரசு வழக்கறிஞர்கள்இ சுகாதாரத் துறை அலுவலர்கள்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 06, 2024

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

விருதுநகர் மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 2024 ஜுன் 10-ஆம் தேதி முதல் ஜீலை 10-ஆம்  தேதி வரை நடைபெற உள்ளதால் கால்நடை வளர்ப்போர் இதனை பயன்படுத்திக்  கொள்ளவேண்டும்.கோமாரி நோய்கோமாரி நோய் ஒரு வைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும்.  இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு வாய் மற்றும் குழம்பு பகுதிகளில் புண்களும், காய்ச்சல் மற்றும் தீவனம் உண்ணாமை ஆகிய அறிகுறிகளோடு சினையுற்ற கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதோடு, சினையின் தன்மை குறைந்து காணப்படும்.  இந்நோய் கொடிய தொற்று நோயாகும்.  காற்று மூலம் பரவுவதோடு ஒரு பண்ணையில் ஒரு மாட்டிற்கு காணப்பட்டால் அனைத்து கால்நடைகளுக்கும் உடனடியாக பரவ நேரிடும்.எனவே, இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு உடனடி இறப்பு ஏற்படாவிட்டாலும் உற்பத்தி திறன் அதிக பாதிப்பு ஏற்படும்.  கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு.  எருதுகளின் வேலைத்திறன் குறைவு கறவை மாடுகளில்  சினை பிடிப்பு தடைபடுவது இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.  இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின்  சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.தடுப்பூசிவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 4-வது சுற்று தடுப்பூசி போடும் பணி  நிறைவு பெற்றுள்ளது.தற்போது 5-வது சுற்று தடுப்பூசி போடும் பணி வருகிற 2024 ஜுன் 10-ஆம் தேதி முதல் ஜுலை 10ஆம்  தேதி வரை நடைபெற உள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1.79 இலட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு இந்த தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள் மற்றும் எருதுகள் எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் முன் அறிவிப்போடு நடைபெறும் கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசியை தங்களது கால்நடைகளுக்கு போட்டுக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 05, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று  ஆய்வு

விருதுநகர் மாவட்டம், மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரியில்  (04.06.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருவதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Jun 05, 2024

வாக்கு எண்ணிக்கையில், அதிக வாக்குகள் பெற்று, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற திரு. ப.மாணிக்கம்தாகூர் அவர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்

விருதுநகர் மாவட்டம், மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக் கல்லூரியில்  (04.06.2024) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், அதிக வாக்குகள் பெற்று, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற திரு. ப.மாணிக்கம்தாகூர் அவர்களுக்கு தேர்தல் பொதுப்பார்வையாளர் திருநீலம் நம்தேவ் எக்கா I A S அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் சான்றிதழ் வழங்கினார். உடன்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ். எஸ். ராமச்சந்திரன் அவர்கள்,  நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு  அவர்கள்,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், விருதுநகர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஏ. ஆர். ஆர். சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர்  திரு.இரா.ராஜேந்திரன் ஆகியோர் உள்ளார்கள்.

Jun 04, 2024

விருதுநகர் பாராளுமன்ற மக்களவைத்தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியே 6 பிரிவுகளாக அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் காலை 08.00 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.வாக்கு எண்ணிக்கையின் போது முதலாவதாக காலை 8.00 மணிக்கு தபால் வாக்குகளும், அதன் தொடர்ச்சியாக காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். வாக்கு எண்ணும் பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் சீரற்ற தெரிவு முறையில் தேர்வு செய்யப்பட்டு, 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 102 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் 102  நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 306 வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் போதும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக 19 முதல் 23 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.அதன்படி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில், 195-திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 304 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளிலும்,196-திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 311 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளிலும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 286 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளிலும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள 277 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளிலும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 256 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளிலும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 255 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.மேலும் வாக்கு  எண்ணும் மையத்திற்கு செல்லும் அனைவரும் பரிசோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைப்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவிதமான மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்வதற்கு கட்டாயம் அனுமதி இல்லை.எனவே வாக்கு எண்ணிக்கையின் போது இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 04, 2024

வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு, (04.06.2024)  வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பொதுப்பார்வையாளர் திருநிலம் நம்தேவ் எக்கா,I A S, அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S, அவர்கள் முன்னிலையில்  (03.06.2024) நடைபெற்றது.

Jun 03, 2024

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்  (01.06.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் களத்தூர் கிராமத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ்,  தலா ரூ.2.78 இலட்சம் மதிப்பில் 64 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மூவரைவென்றான் ஊராட்சியில் அயோத்தி தாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருவதையும், துலுக்கப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.20 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், முத்துக்குமாரபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.80 இலட்சம் மதிப்பில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டு வருவதையும்,ராமசந்திராபுரம் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா பெருமளவு மரக்கன்றுகள் நடப்படும் திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சம்; மதிப்பில் 800 மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும், 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ், ரூ.3.46 இலட்சம் ஆழ்துளைக் கிணறு மற்றும் பைப்லையன் அமைக்கப்பட்டு வருவதையும்,வலையபட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.

Jun 03, 2024

முத்துக்குமாரபுரம் கிராமத்தில் 'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டு வருவதை ஆய்வு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முத்துக்குமாரபுரம் கிராமத்தில் 'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.80 இலட்சம் மதிப்பில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்  I A S., அவர்கள்  (01.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Jun 03, 2024

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் வரையபட்ட ஓவியக் கண்காட்சி

மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் (01.06.2024) விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற நுண்கலை பயிற்சி முகாமில்  அரசு /அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் வரையபபட்ட ஒவியங்களின் கண்காட்சியினை, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ சங்கீதா, I A S அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய அரசு / அரசு பெறும் பள்ளி மாணவர்களுக்கான, மாவட்ட அளவிலான உண்டு உறைவிட  கோடைகால பயிற்சி முகாம்கள் நடைபெற்றது.இந்த பயிற்சி முகாமில் விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களில் ஆர்வமும், திறனும் உள்ள 100 மாணவர்களை தேர்வு செய்து,  மாணவர்களின்  தனித்திறமைகளை மேம்படுத்தும் விதமாக இசை, தலைமைப்பண்பு, ஸ்போக்கன் இங்கிலீஸ், நுண்கலை, திருக்குறள் முற்றோதல் ஆகிய பயிற்சி முகாம்கள் 02.05.2024 முதல் 11.05.2024 வரை நடைபெற்றது.அதனை தொடர்ந்து, கோடை கால நுண்கலை பயிற்சி முகாமில் சிறந்த ஓவிய ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் தங்களுடைய திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு படைப்புகளை மாணவர்கள் உருவாக்கினர். அதில்  அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் வரையப்பட்ட சிறந்த  எண்ணெய் வண்ண ஓவியங்கள், நீர் வண்ண ஓவியங்கள், பழங்குடி ஓவியங்கள்(றுயசடi Pயiவெiபெ)இ துணி ஓவியங்கள், காகித அச்சுக்கலை ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள், கோடுகளால் வரையபட்ட ஓவியங்கள் என மொத்தம் 300க்கும்  மேற்பட்ட ஒவியங்கள்  பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்காக மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஒவியக்கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.இந்து ஒவியக் கண்காட்சியானது 01.06.2024 முதல் 15.06.2024 வரை 15 நாட்களுக்கு நடைபெறும். எனவே, இந்த அருமையான படைப்புகளை படைத்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில்,அனைத்து பொதுமக்களும், மாணவ / மாணவியர்களும் இந்த ஓவியக்கண்காட்சியினை பார்வையிட வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர்கள்  அவர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி வளர்மதி, பயிற்சி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 50 51 52 53 54 55 56 ... 69 70

AD's



More News