தமிழ்நாட்டில் சமீபகாலங்களில் நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள் .விருதுநகர் மாவட்டத்தில் கோடைகாலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கோடை விடுமுறையில் மாணவ/மாணவிகள் எவ்வித பாதுகாப்புமின்றி நீர்நிலைகள் அருகிலோ அல்லது குளிக்கவோ கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. கல்குவாரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பிய குட்டைகள் அருகே குழந்தைகளை விட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.இடி மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் அதிகமாக ஏற்படுகின்றன. மழைபெய்யும் போது இடி மின்னல் நேரங்களில் பொதுமக்கள் கைபேசி ஃ தொலைபேசியினை உபயோகிக்க வேண்டாம். இடி சப்தம் கேட்கும் போது முற்றிலும் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின்னல் ஏற்படும் போது கால்நடைகளை மரத்தடியில் கட்டுவதை தவிர்க்க வேண்டும். உயர் மின்தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறைந்தபட்ச 50 அடி தூரத்தில் இருப்பது நல்லது. வெட்ட வெளியில் உலோக பொருட்களை மின்னல் ஏற்படும் போது பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சிறிய அளவு மின்சாரத்தை உணரும் போதோ, உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்க்கும் போதோ அல்லது உடல் கூச்சம் ஏற்படும் போதோ மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகளாகும். எனவே அச்சமயம் தரையில் உடனடியாக அமர்ந்திட வேண்டும் எனவும், இது தொடர்பாக பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலிகளையும் கண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிடவும் பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I.A.S. அவர்கள் கேட்டுக் கொள்கிறார்;.
தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையிலும், சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியின் போது மாதம் ரூ.1000/- உதவித்தொகை பெறும் விதமாக புதுமைப்பெண் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் ஆகியவை புதுமை பெண் திட்டத்தின் நோக்கமாகும்.இத்திட்டத்தின் கீழ் மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ம் ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளான ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர், சீர்மரபினப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலப்பள்ளிகள், சமூகப் பாதுகாப்பு துறை பள்ளிகள் ஆகியவற்றில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற பின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர்.இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேர்ந்த 2.73 இலட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000ஃ- உதவித்தொகை வழங்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக மாவட்டத்தில் உள்ள 30 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 மருத்துவப்பிரிவு கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 12 பாலிடெக்னிக் கல்லூரிகள், 6 தொழிற்பயிற்சி நிலையங்கள், 1 செவிலியர் கல்லூரி, 2 இதர பிரிவு கல்லூரிகள் என மொத்தம் 70 கல்லூரிகளில் பயிலும் 5781 மாணவிகளுக்கு மாதந்தோறும்; 1000/- வீதம் அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. பெயர் அபிநயா. எனது தந்தை ஒரு விவசாயி. அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று, தற்போது அரசின் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறேன். பெண்கள் முன்னேற்றத்தின் அளவை வைத்துத்தான், சமுதாயத்தின் முன்னேற்றம் முழுமையடையும். பெண்களின் கல்வி அறிவு பெறுவதற்கு பல்வேறு தடைக்கற்கள் இருந்தாலும், பொருளாதார தடைக்கல்லும் முக்கியமானதாகும். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ள புதுமை பெண் என்ற திட்டம் மூலம் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகையினை வங்கி கணக்கு மூலம் பெற்றுக் கொள்ளும் திட்டம் மிகவும் பயனுள்ளதாகும். இத்திட்டம் மூலம் பெண்கள் உயர்கல்வி பயின்று, வேலைவாய்ப்பை பெற்று தங்கள் சொந்தக்காலில் நிற்க முடியும். இத்திட்டம் மூலம் பயனடைந்து, ஒரு சிறந்த மருத்துவராகி என்னால் இயன்ற மக்கள் சேவையில் ஈடுபடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற திட்டங்கள் மூலம் பெண் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றிகள்.எனது பெயர் சௌமியா. நான் 3-ம் வருடம் பி.ஏ படித்துக் கொண்டிருக்கிறேன். எனது தாய், தந்தை தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்திய இந்த புதுமை பெண் திட்டம், எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னை போன்ற வசதி இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளுக்கு, இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் கிடைக்கும் ரூ.1000/- ஊக்கத்தொகையை கொண்டு, படிப்பிற்கு தேவையான செலவுகளை செய்ய முடியும். எனது பெற்றோர்கள் சம்பாதிக்கும் தொகை, குடும்ப செலவிற்கே போதாத நிலையில், சின்ன சின்ன படிப்பு செலவிற்காக பெற்றோர்களை கஷ்டப்பட வைக்காமல், இந்த தொகை மூலம் பூர்த்தி செய்ய முடியும். இந்த ஊக்கத்தொகையினை அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி 2024-ம் ஆண்டு கடந்த மார்ச் மாதம் இராஜபாளையம், விருதுநகர் மற்றும் காரியாபட்டி அரசு மருத்துவமனைகளில் குடி மற்றும் போதை சிகிச்சைக்கான உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது.அரசு மருத்துவமனை, இராஜபாளையத்தில் 6 படுக்கை வசதியுடனும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருதுநகரில் 5 படுக்கை வசதியுடனும் மற்றும் அரசு மருத்துவமனை, காரியாபட்டியில் 4 படு;க்கை வசதியுடனும் செயல்பட்டு வருகிறது. இதில் உள்நோயாளிகளாக தற்போது வரை 95 நோயாளிகள் மனநல மருத்துவர்கள் மூலம் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர்.உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்ற அனைவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் மாவட்ட மனநலத் திட்டத்தின் கீழ் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள குடி மற்றும் போதை தொடர்பான சிகிச்சை தேவைப்படுவோர் போதை சிகிச்சை பிரிவினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் பொதுமக்கள் மனநலம் சம்பந்தமான ஆலோசனைக்கு மாவட்ட மனநல ஆலோசனை மையம் கைபேசி எண்:8300263423 –ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி சேர்க்கை ஆலோசனை மையத்தில், உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உயர்கல்வியில் சேர்வதில் உள்ள தங்களுக்கான சந்தேகங்கள் குறித்து வல்லுனர்களுடன் கேட்டு தெரிந்து கொண்டு, ஆலோசனை உதவிகளை பெற்று வருகின்றனர்.2024-25 ஆம் கல்வியாண்டிற்கான உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை அலுவலகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம். மேலும் 8072918467, 7598510114, 8838945343 மற்றும் 9597069842 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் கேட்டுக் கொள்ளலாம்.இது தவிர, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், ஒவ்வொரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு 8754271045 எண்ணிலும், காரியாபட்டி ஒன்றியத்திற்கு 9789560011 எண்ணிலும், நரிக்குடி ஒன்றியத்திற்கு 9488501938 எண்ணிலும், இராஜபாளையம் ஒன்றியத்திற்கு 9788396946 எண்ணிலும், சாத்தூர் ஒன்றியத்திற்கு 7010762308 எண்ணிலும், சிவகாசி ஒன்றியத்திற்கு 9500205414 எண்ணிலும், திருவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு 8220846444 எண்ணிலும், திருச்சுழி ஒன்றியத்திற்கு 9944762424 எண்ணிலும்,வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு 9443669462 எண்ணிலும், விருதுநகர் ஒன்றியத்திற்கு 9488988222 எண்ணிலும் தொடர்பு கொண்டு உயர்கல்வி சேர்க்கையில் சந்தேகங்கள், ஆலோசனை உதவிகள் ஆகிய விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதனை மாவட்டத்தில் உள்ள 12 ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் 2024-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18 வயது உட்பட்ட (Under 18) மாணவ / மாணவியர்களுக்கு 29.04.2024 முதல் 13.05.2024 வரை 15 நாட்கள் காலை 6.30 முதல் 9.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.அதனை தொடர்ந்து, இப்பயிற்சி முகாமில் வளைகோல்பந்து, டென்னிஸ், தடகளம், கால்பந்து, மற்றும் குத்துச்சண்டை, போன்ற விளையாட்டுகளில் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் முட்டை/ பிஸ்கட் வழங்கப்பட்டது.13.05.2024 அன்று நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.சே.குமரமணிமாறன் அவர்களால் 76 மாணவர்கள் மற்றும் 22 மாணவிகள் என மொத்தம் 98 நபர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் மற்றும் டி.சர்ட் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைகளை ஏற்று பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு 16.05.2024 முதல் தண்ணீர் திறந்து விட அரசாணை (அரசாணை எண். (வாலாயம்) 254 நாள். 15.05.2024) வெளியிடப்பட்டுள்ளது.பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் முறையே 13.90 சதுர மைல் 9.57 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதி கொண்டவை. 192.00 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில் தற்பொழுது 62.27 மில்லியன் கனஅடி நீரும், 133 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கோவிலாறு அணையில் தற்பொழுது 81.96 மில்லியன் கனஅடி நீரும் இருப்பில் உள்ளது. மேலும், பெரியாறு அணைக்கு வினாடிக்கு 8.53 கனஅடி நீரும், கோவிலாறு அணைக்கு 4.13 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. பிளவுக்கல் பாசன திட்டத்தின் பயன்பெறும் பாசன பரப்பு மொத்தம் 8531.17 ஏக்கர் (3452.515 ஹெக்டேர்) ஆகும்.தற்பொழுது இரண்டாம் போக பாசனத்திற்காக பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து 16.05.2024 முதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இத்தண்ணீர் திறப்பினால் பிளவுக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 5 கண்மாய்களின் 926 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையவுள்ளன. இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், வத்திராயிருப்பு, கூமாபட்டி ஆகிய 4 வருவாய் கிராமங்கள் பயனடையவுள்ளது.விவசாயிகள் அனைவரும் அதிக மகசூலைப் பெறும் நோக்கத்துடன் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அளப்பறிய பங்களிப்பினை மேற்கொண்ட தனிநபர்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்றோருக்கு ஆண்டுதோறும் 100 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதினை வழங்க கடந்த 26.10.2021 அன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டது. இவ்விருதில், விருதுநகர் மாவட்டத்திற்கு 3 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில், 2023-24 ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதிற்கு விண்ணப்பிக்க வேண்டி கடந்த 29.12.2023 அன்று நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டு,இது தொடர்பாகதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில், இவ்விருதினைப் பெற 10 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவைகளிலிருந்து,பசுமை முதன்மையாளர் விருதிற்கு 3 நபர்கள் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட விருது தேர்வுக்குழு கூட்டம் 13.05.2024 அன்று நடைபெற்று, 3 நபர்களை தேர்வு செய்துதமிழக அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், IAS., அவர்கள் (14.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, ரோசல்பட்டி முத்தால் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அரசு பள்ளிகளின் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்தமாக தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ. 8.65 இலட்சம் மதிப்பில் பள்ளி கட்டடம் புணரமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,அதனை தொடர்ந்து; ரோசல்பட்டி ஊராட்சி முத்தால் நகரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பில் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்
விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் /ஏப்ரல் 2024 -ல் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 223 பள்ளிகளைச் சேர்ந்த 98 தேர்வு மையங்களில் 10,441 மமாணவர்களும், 11,887 மாணவியர்களுமாக மொத்தம் 22,328 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 9656 மாணவர்களும், 11,568 மாணவியர்களும் என மொத்தம் 21,224 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விழுக்காடு 95.06 சதவீதம் பெற்று தேர்ச்சி சதவீதத்தில் தமிழ்நாட்டில் 4-ஆவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.மேலும், அரசுப் பள்ளிகள் 7, சமூக நலப்பள்ளிகள் 1, உதவி பெறும் பள்ளிகள் 16, பதின்மப் பள்ளிகள் 37 என மொத்தமாக 61 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாவட்ட அளவில் எம்.லோகேஷ் என்ற மாணவர் 596/600 மதிப்பெண்களும் அதனைத் தொடர்ந்து ஆர்.மணீஷ் என்ற மாணவர் 593/600 மதிப்பெண்களும் அதனை தொடர்ந்து வி.ஸ்ரீசக்திகோமதி, கே.அபர்ணா, எம்.சஷ்சித்ராம், கே.லக~னா ஆகிய மாணவர்கள் 592/600 மதிப்பெண்களும் பெற்று இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.இயற்பியல் பாடத்தில் 24 மாணவர்கள், வேதியியல் பாடத்தில் 7 மாணவர்கள், கணித பாடத்தில் 14 மாணவர்கள், கணினி அறிவியல் பாடத்தில் 121 மாணவர்கள், உயிரியல் பாடத்தில் 1 மாணவர்,வரலாறு பாடத்தில் 2 மாணவர்கள், பொருளியல் பாடத்தில் 16 மாணவர்கள், வணிகவியல் பாடத்தில் 10 மாணவர்கள், கணக்குப் பதிவியல் பாடத்தில் 9 மாணவர்கள், வணிக கணிதம் பாடத்தில் 7 மாணவர்கள், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 12 மாணவர்கள், அடிப்படை மின் பொறியியல் பாடத்தில் 7 மாணவர்கள், அடிப்படை இயந்திரவியல் பாடத்தில் 35 மாணவர்கள், செவிலியல் பாடத்தில் 63 மாணவர்கள், ஆடை வடிவமைப்பு பாடத்தில் 58 மாணவர்கள், வேலைவாய்ப்புத் திறன்கள் பாடத்தில் 6 மாணவர்கள், தட்டச்சு பாடத்தில் 42 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (13.05.2024) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.வான் குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் – யாம் பெரிதும்வல்லோமே என்று வலிமை சொல் வேண்டாங்காண்எல்லார்க்கும் ஒவ்வான்று எளிது.என்ற பாடலில் தூக்கணாங்குருவி கூடு, தேன்கூடு, கரையான் புற்று உள்ளிட்ட சிறிய உயிரினத்தின் கூடுகள் தனிச்சிறப்பானவை என ஒவ்வையார் குறிப்பிடுகிறார்.ஒரு உயிரி செய்யக்கூடிய செயலை, மற்றொரு உயிரி செய்ய முடியாது என்பதுதான் இயற்கையோடு படைப்பு. ஒவ்வொரு சிறிய உயிரினங்கள் முதல் பெரிய உயிரினங்கள் வரை அனைத்து உயிரினங்களுக்கும் தனிப்பண்புகள் உள்ளன. அது போல் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு தனித்திறமைகள் உள்ளன.யாரோ ஒருவர் நல்ல மதிப்பெண் எடுத்து விட்டார்கள் என்பதற்காக பெரிதாகவும், தேர்ச்சி பெற முடியாதவர்களை சிறியதாகவும் எண்ண வேண்டாம். ஏனென்றால் ஒவ்வொரு உயிரிக்கும், ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமான பண்புகள் இருக்கின்றன.ஆனால், உங்களுக்கு என்ன திறமை இருந்தாலும் அந்த திறமையை இந்த உலகத்திற்கு வெளிக்காட்டவும், அந்த திறமையின் மூலமாக பணம் சம்பாதித்து, உங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்தவும், அந்த திறமையின் மூலமாக புகழ் அடைய வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை கல்வியறிவு மிக மிக அவசியம்.நடிகர், நடிகை, கிரிக்கெட் வீரர் என நமக்கு பிடித்த புகழின் உயரத்தில் இருக்கக்கூடிய யாராக இருந்தாலும், அவர்கள் பின்புலத்தை பார்த்தோம் என்றால், அந்த வெற்றிக்காக அவர்கள் பல தோல்விகளை கண்டிருப்பார்கள்.உங்களால் தற்போது பெற்றுள்ள மதிப்பெண் பட்டியலை மாற்ற முடியாது. அதை மறந்து விட வேண்டும். அதற்கு அடுத்ததாக வேறு என்ன செய்ய வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக நடத்தப்படும் தனித்தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த நடப்பு கல்வி ஆண்டிலேயே 11 ஆம் வகுப்பில் சேரலாம். வருகின்ற மாதங்களில் கொஞ்சம் முயற்சி செய்தால், நீங்கள் தேர்ச்சி பெற முடியும். பெற்றோர்களும்; குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.எனவே 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இது வாழ்க்கையின் தொடக்கமே என்பதை மனதில் கொண்டு தற்போதை விட எதிர்வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.