25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Dec 29, 2025

வாக்காளர் பட்டியல் பார்வையாளர், தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் தலைமையில்) அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்.

2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு கட்டமாக கணக்கெடுப்புப் பணி முடிக்கப்பட்டு கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2025 வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்கள் அளிக்கலாம். பொதுமக்கள் இம்மனுக்களை எளிதில் அளிப்பதற்காக 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் மரு. ஏ. அருண் தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை (28.12.2025) காலை 9 மணி முதல் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களை ஆய்வு செய்யவுள்ளார். மேலும், மதியம் 03.00 மணிக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார்.இவர் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு செய்யவுள்ள 28.12.2025 ஞாயிற்றுக் கிழமையன்று வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக கருத்துக்கள் அல்லது குறைகள் தெரிவிக்க விரும்புபவர்கள் இவரிடம் நேரிலோ அல்லது 7358150776 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 01.01.2026 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு படிவம் 6 -ல் விண்ணப்பங்களை சிறப்பு முகாம்களில் அளிக்கலாம். அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-8 ல் விண்ணப்பம் அளிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவரது பெயரை நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-7 ல் விண்ணப்பம்அளிக்கலாம். மேலும், 2026 -ம் ஆண்டில் ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய எதிர்வரும் தகுதி ஏற்படுத்தும் நாட்களில் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தற்போதே படிவம்-6 -ல் முன்கூட்டிய விண்ணப்பத்தை அளிக்க இயலும். இவ்விண்ணப்பங்கள் அந்தந்த தகுதி ஏற்படுத்தும் நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.மேலும், இந்த விண்ணப்பங்களை 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரிலும் மற்றும் அஞ்சல் மூலமாகவும் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை https://voters.eci.gov.in என்ற வலைதளத்தின் மூலமும், Voters Helpline என்ற ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் ஆன்லைன் விண்ணப்பமாக பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 29, 2025

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள் நேரில் சென்று ஆய்வு .

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி,  முத்துராமலிங்கபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புல்லா நாயக்கன்பட்டி இந்து நாடார் சத்திரிய வித்யாசாலா தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் (27.12.2025)வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றதைமாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு கட்டமாக கணக்கெடுப்புப் பணி முடிக்கப்பட்டு கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2025 வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்கள் அளிக்கலாம். பொதுமக்கள் இம்மனுக்களை எளிதில் அளிப்பதற்காக 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.அதன்படி, (27.12.2025) மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.அருப்புக்கோட்டை வட்டம், தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி,  முத்துராமலிங்கபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புல்லா நாயக்கன்பட்டி இந்து நாடார் சத்திரிய வித்யாசாலா தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் இன்று(27.12.2025)வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றதைமாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 01.01.2026 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு படிவம் 6 -ல் விண்ணப்பங்களை சிறப்பு முகாம்களில் அளிக்கலாம். அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-8 ல் விண்ணப்பம் அளிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவரது பெயரை நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-7 ல் விண்ணப்பம்அளிக்கலாம். மேலும், 2026 -ம் ஆண்டில் ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய எதிர்வரும் தகுதி ஏற்படுத்தும் நாட்களில் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தற்போதே படிவம்-6 -ல் முன்கூட்டிய விண்ணப்பத்தை அளிக்க இயலும்.இவ்விண்ணப்பங்கள் அந்தந்த தகுதி ஏற்படுத்தும் நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த விண்ணப்பங்களை 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரிலும் மற்றும் அஞ்சல் மூலமாகவும் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை https://voters.eci.gov.in என்ற வலைதளத்தின் மூலமும், Voters Helpline என்ற ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் ஆன்லைன் விண்ணப்பமாக பதிவு செய்யலாம்.எனவே, இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி விண்ணப்பங்களை அளித்து, தகுதியான அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளுமாறுமாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 27, 2025

குல்லூர்சந்தை மற்றும் மல்லாங்கிணறு ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை, காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் திரு.மா.வள்ளலார்,I A S., அவர்கள் இன்று(26.12.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். முகாம்களின் அடிப்படைவசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற தமிழ்நாடு சட்டப் பேரவைவிதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, பொறியியல்/வேளாண்/முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும்  சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு இணைப்புகள் உள்ளிட்ட  பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மையங்களில் பல்வேறு கட்டங்களாக புதிய வீடுகள் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை, காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, புதிதாக கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளையும், சாலை மற்றும் குடிநீர் இணைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.மேலும் முகாமில் உள்ள அடிப்படை வசதிகள், வழங்கப்படும் குடிநீர் மின்சாரம், சாலை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் குறித்து, முகாம் வாழ் தமிழர்களிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், தனி வட்டாட்சியர்(அயலகத் தமிழர் நலன்) திருமதி கார்த்திகேயினி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Dec 27, 2025

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளில்  வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளிலும், அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும். 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக் கொண்டு சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.மேலும், வாக்காளர்கள் இணையவழியாகவும் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/  என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line” என்ற கைபேசி செயலி மூலம் விண்ணப்பம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண் 044-1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம்.மேற்படி இணையவழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை 19.12.2025 (வெள்ளி) முதல் 18.01.2026 (ஞாயிறு) வரை வரை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலங்களிலும் அளிக்கலாம்.மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிறுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிறுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 27, 2025

அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இன்று(26.12.2025) அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (B.E / B.Tech) சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு கையேடுகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையிலும், சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்கள் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, இந்திய அளவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (B.E / B.Tech) சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த உண்டு உறை விட பயிற்சியானது 15 நாட்கள் வரை வழங்கப்படும். மாணவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களிலிருந்தும், பள்ளிகளிலிருந்தும் இப்பயிற்சி வகுப்பிற்கு வந்திருக்கலாம். போட்டி என்பது இங்கிருக்கும் உங்களுக்குள் அல்லாமல் போட்டித் தேர்விற்கு தயாராகும் அனைவருடனான ஒரு போட்டியாக இருக்க வேண்டும்.மாணவர்கள் பாடத்திட்டங்களை புரிந்து கொண்டு தங்களுக்குள்ளே கலந்துரையாட வேண்டும். நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும்.இன்றைய காலத்தில் நாம் அறியாமலே பல்வேறு கல்லூரிகள் உள்ளன.  அக்கல்லூரிகளில் நுழைவதற்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் பல்வேறு அரசுத்துறை மூலம் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளுக்கு எவ்வாறு தங்களை தயார்படுத்தி கொள்வது? எவ்வாறு விண்ணப்பிப்பது போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.ஒரு பாடத்தில் எவையெல்லாம் முக்கியமான தலைப்புகள் என்று ஆராய்ந்து படிக்க வேண்டும். இனிவரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் முக்கியமானவை. மேலும், மாணவர்களுக்கு தேவையான உரிய வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும்.இதனை உரிய வழியில் பயன்படுத்தி மாணவர்களாகிய நீங்கள் பயனடைய வேண்டும். மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தினை உணர்ந்து இப்பயிற்சி வகுப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.ஆசிரியர்கள் பயிற்சியினை வழங்கலாம். ஆனால், மாணவர்களாகிய நீங்கள் நல் ஒழுக்கத்துடன் நன்றாக படிக்க வேண்டும். மாணவர்களின் இந்த நேரம் தான் தங்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே மாற்றக்கூடிய தருணம். மதிப்பெண்களை பொறுத்து மாணவர்கள் எதிர்பார்த்த கல்லூரியில் மாணவர் சேர்க்கையும் அமையும். எனவே, மாணவர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும் எனத் தெரிவித்தார். அரசுப்பள்ளியில் பயிலும் எங்களுக்கும், இந்திய அளவிலான தலைசிறந்த கல்லூரிகளில் பயில்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், அதற்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகளையும்  வழங்கும் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்ஃபான், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் 80 அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dec 25, 2025

அரசு மற்றும் தன்னார்வ குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்காக நடைபெற்ற அரசு சேவைகள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டங்கில் (24.12.2025) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், அரசு மற்றும் தன்னார்வ குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்காக நடைபெற்ற ஆதார், பிறப்பு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு துவக்கம் உள்ளிட்ட அரசு சேவைகள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.அதன்படி, இம்முகாமில் அரசு மற்றும் தன்னார்வ குழந்தைகள் இல்லங்களில் உள்ள 29 குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ்களும், 26 நபர்களுக்கு பிறப்பு சான்றிதழ்களும், 5 நபர்களுக்கு ஆதார் அட்டைகளும், 5 நபர்களுக்கு வங்கி கணக்குகளும் என  மொத்தம் 65 நபர்களுக்கு அரசு சேவை உதவிகள் வழங்கப்பட்டது.பின்னர்,  மாவட்ட நூலக அலுவலகம் சார்பில் குழந்தைகளுக்கான வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்க்கப்பட்டது.மேலும், அரசு மற்றும் தன்னார்வ குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S.,  மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிரதெளஸ் பாத்திமா, மாவட்ட குழந்தை நல அலுவலர் திருமதி இல.மீனாட்சி, குழந்தைகள் இல்லங்களில் உள்ள சுமார் 160 குழந்தைகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dec 25, 2025

கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.

கால்நடை வளர்ப்பின் மூலம் கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பால் மனிதர்களின் உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால், மாமிசம், உரோமம்  மற்றும் பிற உபபொருட்களின் மூலம் நாட்டிற்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டி கொடுப்பதால் நாட்டின் பொருளாதாரத்தில் கால்நடை வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. கோமாரி நோய் நம் நாட்டில் கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து  காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 29.12.2025 முதல் 18.01.2026 வரை 21 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.கோமாரி நோய்  கால்நடை வளர்ப்போருக்கு அதிகப்படியான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்  கோமாரி நோய் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. பொதுவாக இந்நோய் பசு மற்றும் எருமைகளை அதிகம் பாதிக்கிறது.  இந்த நோய் தாக்குதலால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைகிறது. எருதுகளின் வேலை  செய்யும் திறன் குறைகிறது. கறவை மாடுகள் சினை பிடிப்பது தடைபடுகிறது.இளம் கன்றுகளில் இறப்பு நேரிடுகிறது. கோமாரி நோயினால் இறப்புகள் குறைவாக  இருந்த போதிலும், மேற்கண்ட பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம். நோய் பரவ சாதகமான சூழ்நிலைகள் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம். நோய் பாதித்த இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாதிருத்தல்,  நோய் பாதித்த கால்நடைகளை பிரித்து பராமரிக்காமல் இருத்தல். கலப்பின கால்நடைகளில் இந்நோயின் பாதிப்பு அதிகம் காணப்படும் .நோய் பரவும் விதம் :-இந்நோய் பாதித்த மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து தீவனம், தீவனத்தட்டுகள், தண்ணீர் வைக்கோல், கால்நடைகளின் இதர உபகரணங்கள் மற்றும் மனிதர்கள் மூலமூம் பரவும் . இந்த நச்சுயிரி மாட்டுக்கொட்டகைகளில் சுமார் 15 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். இந்நோய் விரைவாக காற்றின் மூலமூம் பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் இந்த நோய் அதிகமான கால்நடைகளுக்கு பரவுகின்றது.நோய் அறிகுறிகள் :காய்ச்சல் , தீவனம் உட்கொள்ளாத மந்த நிலையில் இருக்கும். அசை போடாது. அதிகமான நீர் தாகம் இருக்கும். பால் உற்பத்தி குறையும். வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நூல் போல் ஒழுகிய வண்ணம் இருக்கும். வாயின் உட்பகுதி, நாக்கு மற்றும் கால் குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றும் . பின்பு அவை உடைந்து ரணமாகிவிடும். அசை போடும் போது மாடு சப்பை கொட்டுவது போல் சப்தம் உண்டாகும். சினை மாடுகளில் கருசிதைவு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட மாடுகளில் மலட்டுத்தன்மையும், இரத்த சோகையும் ஏற்படும். பாதிக்கப்பட்ட பசுக்களில் கன்றுகளை பால் குடிக்க விடக்கூடாது. அவ்வாறு குடித்தால் கன்றுகள் உடனடியாக இறக்க நேரிடும்.தடுப்பூசி பணி :-சிறந்த பராமரிப்பும், தடுப்பூசி போடுவதும் இந்நோயினை தடுக்க உகந்த வழி. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 58 குழுக்கள் அமைக்கப்பட்டு, வருகின்ற 29.12.2025 முதல் 18.01.2026 வரை 21 நாட்களுக்கு தடுப்பூசிபணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தடுப்பூசிப்பணி நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும் மற்றும் நிறை மாத  சினை இல்லாத மாடுகளுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போடப்பட்டு வருகிறது.உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மக்களுக்கு இத்தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் வரும் பொழுது முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும், விவசாயிகளுக்கு தங்களது கிராமத்தில் எந்த நாட்களில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விவரம் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால் அக்கிராமத்திற்கு தெரிவிக்கப்படும் அல்லது பொது மக்கள் தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளை  நிலையத்தை தொடர்பு  கொண்டு தெரிந்து கொள்ளலாம். கோமாரி நோய் தடுப்பூசி முகாம் போடும் நாளில் விவசாயிகள் கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தவறாது தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 25, 2025

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஆர்வம் உள்ள ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் தொடர்பு கொள்ளலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் இராஜபாளையம் தேவதானம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்ராப், கோவிலார் அணை, பெரியார் அணை, கூமாபட்டி, விராகசமுத்திரம், விருதுநகர் குல்லூர் சந்தை, அருப்புக்கோட்டை, உலக்குடி, இருக்கண்குடி, வெம்பக்கோட்டை அணை, சங்கரபாண்டியபுரம், கோட்டையூர், தாயில்பட்டி, சங்கரபாணடியபுரம், தாயில்பட்டி கோட்டையூர் உள்ளிட்ட 21 இடங்களில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதன் வாயிலாக விருதுநகர் மாவட்டத்தில் காணப்படும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள், விருதுநகர் மாவட்டத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகள் வந்து உள்ளனாவா என்று அறியலாம். பறவைகள் கணக்கெடுப்பில் ஆர்வம் உள்ள ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண். 04563-260565 மற்றும் சிவகாசி வனச்சரக அலுவலர் திரு.பூவேந்தன் 84890-54853 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் கணக்கெடுப்பில் கலந்துக் கொள்வதற்கு பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கு பெறுபவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும் என துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 24, 2025

சிறப்பு கல்வி கடன் முகாம் .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.12.2025) மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில் 155 மாணவர்களுக்கு ரூ.6.72 கோடி கல்விக்கடனுக்கான ஆணைகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இம்முகாமில் மாவட்டத்திலுள்ள 200 தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி கிளைகளின் மாவட்ட அளவிலான வங்கி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அனைத்து வங்கிகள் சார்பாகவும் அரங்குகள் அமைக்கப்பட்டு கல்விக்கடன் சம்பந்தமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டனர்.மேலும் மாணவர்களிடம் நேரடியாக கல்விக்கடன் விண்ணப்பங்கள் வங்கிகளின் மூலம் பெறப்பட்டன. இந்த முகாமின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிக்கிளைகளில் பரிசீலனை செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.நடப்பு நிதி ஆண்டிற்கு கல்வி கடன் இலக்காக ரூ.38.11 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் நமது மாவட்டத்திலுள்ள வங்கிகள் செப்டம்பர் மாதம் வரை 576 மாணவர்களுக்கு ரூ.27.61 கோடி கல்விக்கடனாக வழங்கியுள்ளன.  மேலும் தனியார் துறை வங்கிகள் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிக்கும் தகுதியான மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் கல்விக்கடன் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிச்செல்வன், அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Dec 24, 2025

வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளிலும், அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும். 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக் கொண்டு சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.மேலும், வாக்காளர்கள் இணையவழியாகவும் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/  என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line” என்ற கைபேசி செயலி மூலம் விண்ணப்பம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண் 044-1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம்.மேற்படி இணையவழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை 19.12.2025 (வெள்ளி) முதல் 18.01.2026 (ஞாயிறு) வரை வரை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலங்களிலும் அளிக்கலாம்.மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிறுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிறுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.எனவே, பொது மக்கள் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை வாக்குச்சாவடி மையங்களிலும், தேர்தல் பதிவு அலுவலகத்திலும், இணையவழியாகவும் சரிபார்த்துக் கொள்ளவும், புதியதாக பெயர் சேர்த்தல்,  நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1 2 ... 53 54 55 56 57 58 59 ... 140 141

AD's



More News