25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கதிர்காமம் முருகன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கதிர்காமம் முருகன்.

முருக வழிபாட்டின் பழமையை பறை சாற்றும் தலம் கதிர்காமம்.இலங்கையின் தென்கிழக்குக் கரையில் ஊவா மாகாணத்தில் இக்கோயில் உள்ளது கப்புறாளைமார் என்னும் சிங்களர்கள் தங்களின் வாயைக் கட்டி திரைக்குப் பின்புறம் நின்று இங்கு பூஜை செய்கிறார்கள். இதை விட ஆச்சர்யம் என்ன என்றால் கருவறையில் முருகன் சிலை கிடையாது. அங்குள்ள பெட்டிக்கே பூஜை நடக்கும். அதை பக்தர்கள் காண முடியாது.

சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்த முருகன் இங்கு வள்ளியை காதல் மணம் புரிந்ததால் இத்தலம் 'கதிர் காமம்' எனப் பெயர் பெற்றது. இவரை கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி,கந்தக்கடவுள் என அழைக்கின்றனர். வள்ளியை திருமணம் புரிந்த முருகன் தனக்கு விருப்பமான இடம் கதிர்காமம் என இங்கு கோயில் கொண்டார்.

இன்னொரு வரலாற்றின்படி சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகன் கதிர்காமத்திற்கு வந்தார். இங்கு ஓடும் மாணிக்க கங்கை நதியின் அருகில் பாசறை அமைத்தார். சூரனுடன் போரிட்டு வெற்றி பெற்ற பின் நவகங்கைத் தீர்த்தத்தை உருவாக்கி தேவர்கள் வழிபடுவதற்காக இங்கு எழுந்தருளினார்.

காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல் என நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துகின்றனர். கதிர்காம மலையிலிருந்து கிடைக்கும் வெண்ணிறக் கட்டியை திருநீறாக தருகின்றனர்.

இங்குள்ள பழங்குடி வேடுவர்கள் ,முருகனைத் தங்களின் மாப்பிள்ளையாக கருதுகின்றனர்.

அருணகிரிநாதர் 'வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே' என பாடியுள்ளார். கதிர்காமத்தில் பூஜை செய்யும் கப்புறாளைமார் என்னும் சிங்களர்கள் தங்களை வள்ளியின் வழித்தோன்றல்கள் என்கின்றனர்.

எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி பெற விரும்பிய துட்டகெமுனு என்ற சிங்கள மன்னன் கதிர்காமத்து முருகனிடம் வேண்டுதல் வைத்து விரதமிருந்தான். அதன்படி வெற்றி பெற்றதால் 2100 ஆண்டுகளுக்கு முன் கோயில் எழுப்பினான்.

விநாயகர், பெருமாள், தெய்வானை சன்னதிகள் உள்ளன. கதிர்காமர் (முருகன்) சன்னதி தெற்கு நோக்கியும், வள்ளி சன்னதி வடக்கு நோக்கியும்எதிரெதிரில்உள்ளன.இங்கு முருகனின்கருவறைவண்ணத்திரையால்மூடப்பட்டிருக்கும்.அதில்வள்ளி, தெய்வானையுடன் முருகனின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். பக்தர்கள் தரும் அர்ச்சனைப் பொருட்களை 'கப்புறாளைமார்' திரைக்குள் சென்று முருகனுக்கு சமர்ப்பிப்பர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News