25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக பாரா வில்வித்தை: இந்தியாவுக்கு 2 தங்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக பாரா வில்வித்தை: இந்தியாவுக்கு 2 தங்கம்.

ஆமதாபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா வில்வித்தை சீரிஸ் ‘ஸ்டேஜ்-3’ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 109 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ரீகர்வ் பிரிவு அணிகளுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் - விஜய் ஜோடி, ஸ்லோவாக்கியாவின் டேவிட் - டெனிஸ் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை இந்திய ஜோடி 0-2 என்ற கணக்கில் இழந்தது. அதன்பின் சிறப்பாக செயல்பட்ட ஹர்விந்தர் சிங் - விஜய் ஜோடி தொடர்ந்து மூன்று செட்டுகளை கைப்பற்றியது.

முடிவில் இந்திய அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News