தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் மற்றும் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 23.04.2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் 15.03.2026 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் மற்றும் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்ற பின்னர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிக்கப்படும். பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுவதற்கென, மனுப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply