ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் 52 வது விளையாட்டு தின விழா.
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 52 வது விளையாட்டு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இயக்குனர் முனைவர் சி.ரமேஷ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், சமூகத்தில் மாணவர்கள் சிறப்பான ஒரு இடத்தை பெற வேண்டும் என்றால் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே சமுதாயத்தில் சாதித்து காட்ட முடியும். திறமையை வளர்த்துவதற்கு வெளிப்படையாக விளையாட்டுத் திறமையை முன்னிறுத்தி தனது உடல் நலத்தையும் எதிர்கால வாழ்க்கையும் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும் எதிர்கால வாழ்க்கை குறித்தும் ,உடல் நலம் பேணுதலின் அவசியம் குறித்தும், தன்னம்பிக்கை குறித்தும், வாழ்வியலுக்குத் தேவையான நெறிகாட்டுதல்கள் குறித்தும் பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறி சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கினார்.
கல்லூரிச் செயலர் திரு.கே.ஜி.பிரகாஷ் அவர்கள் தலைமையுரையாற்றினார். தலைவர் திரு.கே.ஆர்.தர்மகிருஷ்ணராஜா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் சி.ஆர்.ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். விளையாட்டு நிகழ்வு ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர் முனைவர் எல். முத்துக்குமார் வாசித்தார்.
ஒட்டுமொத்த சேம்பியன் கோப்பையை மாணவர் பிரிவில்நேரு அணியும், மாணவியர் பிரிவில் காவேரி அணியும் பெற்றனர். 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடைபெற்றன. நிறைவாக உடற்கல்வி உதவி பேராசிரியை திருமதி அபிநயா நன்றியுரை கூறினார். கல்லூரி ஆட்சி என்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகிய கலந்து கொண்டனர்.
0
Leave a Reply