ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கும் 'ராமாயணா' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது, ஜூலை 30-ஆம் தேதி வெளியாகும் 'ஸ்பைடர்மேன்'திரைப்படத்துடன் திரையரங்குகளில் டிரைலர் திரையிடப்படவுள்ளது. அதன்பின்னர் யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா இசையமைத்து, எழுதிய 'பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்' ஆல்பத்தை பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் பாடியுள்ளார். இதன் வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, "1980-களில் திருவண்ணாமலையில் அடிக்கடி கிரிவலம் செல்வேன். அப்போது என்னைப் பார்த்து பலரும் கிரிவலம் செல்லத் தொடங்கியதாக கூறுவார்கள். திருவண்ணாமலையில் காலடி வைத்தவுடன் செருப்பு அணிய மாட்டேன். இந்தப் பாடல்களை இறைவனே எனக்கு அருளினார். இசை என்பது தெய்வீகமான கலை. ஆன்மிகம் என்பது வாழ்க்கையிலிருந்து தனியானது அல்ல; வாழ்க்கையே ஆன்மிகம்" என்று உருக்கமாகப் பேசினார்.
நடிகை சுகன்யா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்புகிறார். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிக்கும் 'வரவு'படத்தில் கன்னியாஸ்திரி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
90 வயதிலும் உற்சாகமாக இருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி, தனது ஆரோக்கிய ரகசியங்களை பகிர்ந்துள்ளார். "நான் எப்போதும் வீட்டில் சமைத்த சைவ உணவையே சாப்பிடுவேன். ஆடம்பர உணவுகளை விரும்புவதில்லை. உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாவிட்டாலும், இரவில் சீக்கிரம் உணவருந்துவேன். இதுவரை உடல்நலக் குறைவால் எந்த படப்பிடிப்பும் பாதிக்கப்படவில்லை. தற்போது குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக நடிப்பில் இருந்து விலகியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், சென்சார் நடைமுறைகள் மற்றும் இணைய கசிவு போன்ற சவால்களைத் தொடர்ந்து, ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஜூலை 19 முதல் முன்பதிவு தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், படத்தின் டைட்டில் கார்டில் 'முதல்வர் விஜய்' என்ற பெயர் இடம்பெற உள்ளது.'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளுக்கு சில முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிக்கெட்டுகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலேயே விற்பனை செய்ய வேண்டும் என்றும், 'ஏ' சான்றிதழ் பெற்ற படம் என்பதால் 18 வயதுக்குட்பட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் வெளியீட்டில் எந்தவித முறைகேடும் நடைபெறாமல் இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
'ராமாயணா' திரைப்படத்தில் சீதா தேவியாக நடித்துள்ள சாய் பல்லவி, இந்தக் கதாபாத்திரம் தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான அனுபவம் என தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், "சீதா தேவி போன்ற தெய்வீகமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. அந்த வேடம் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது. இது என் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவம்," என்றார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகத் தேர்தலில் இயக்குநர் சேரன் வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் பதிவான 432 வாக்குகளில் சேரன் 279 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது எதிரணி வேட்பாளர் வி.சி. குகநாதன் 155 வாக்குகள் பெற்றார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரியின் காதல் திருமணம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது மீண்டும் பேசப்படுகிறது. முஸ்தாக் ஷேக் எழுதிய 'Shah Rukh Can' நூலின்படி, குடும்பங்களின் சம்மதத்தைப் பெறுவதற்காக ஷாருக்கான் தற்காலிகமாக 'அபிநவ்' என்றும், கவுரி 'ஆயிஷா' என்றும் பெயரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தங்களது மதத்தை மாற்றாமல் திருமணம் செய்து கொண்டனர்
சாய் அபயங்கர் இசையில், ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து வெளியான தனிப்பாடல் 'பவழ மல்லி' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் கயாடு லோஹரும் நடித்துள்ளார். அதேபோல், கென் கருணாஸ் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த 'யூத்' படத்தின் 'முட்ட கலக்கி' பாடலும் இளைஞர்களை கவர்ந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இந்த இரண்டு பாடல்களும் தற்போது 250 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளன.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ஜூலை 17-ம் தேதி வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'தி ஒடிசி', உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. சுமார் ரூ.2,400 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம், முதல் வார இறுதிக்குள் ரூ.2,546 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.73 கோடி வசூல் செய்துள்ளது.