25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


.பூசணிக்காய் அல்வா (காசி அல்வா)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.பூசணிக்காய் அல்வா (காசி அல்வா)

தேவையான பொருட்கள்:
வெள்ளை பூசணி: 300 கிராம் (துருவியது),
சர்க்கரை: 350 - 400 கிராம்,
நெய்: 100 - 150 மில்லி,
முந்திரி மற்றும் பாதாம்: தலா 10,
ஏலக்காய் தூள்: 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் (அல்லது ஆரஞ்சு) ஃபுட் கலர்: 2 சிட்டிகை,
எண்ணெய்/நெய்: 1 தேக்கரண்டி (முந்திரி வறுக்க),

செய்முறை:
பூசணியின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, துருவிக்கொள்ளவும். துருவிய
பூசணியை கைகளால் நன்றாகப் பிழிந்து சாற்றை தனியாக எடுத்துவைக்கவும்.
ஒரு கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், துருவிய பூசணிக்காயைச் சேர்த்து
10 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
பூசணி வதங்கியதும், பிழிந்து எடுத்த பூசணிச் சாற்றை ஊற்றி மூடி வேகவைக்கவும்.
தண்ணீர் வற்றி, பூசணி நன்றாக வெந்திருக்க வேண்டும்.
பிறகு, சர்க்கரை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கிளறவும். சர்க்கரை உருகி அல்வா தளர
ஆரம்பிக்கும்.
மிதமான தீயில் வைத்து, கலவை கெட்டியாகும் வரை கிளறவும். இடையில் கொஞ்சம்
கொஞ்சமாக நெய் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.
அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
மற்றொரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, பாதாம் வறுத்து அல்வாவில் சேர்த்து
இறக்கவும். இப்போது நாவில் கரையும் சுவையான பூசணிக்காய் அல்வா தயார்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News