புதுமனை குடியேற செய்ய வேண்டியது.
முதன் முதலாக வீட்டிற்கு செல்லும்போது நிறைகுடம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். நிறைகுடம் தண்ணீரில் சிறிது மஞ்சள் கலந்து பூ போட்டு பூஜை அறையில் வைக்கவும் .தண்ணீர் குடத்தில் விபூதி பட்டையிட்டு மஞ்சள் குங்குமம் வைக்கவும், பிறகு குத்து விளக்கு. சாமி படம், கல் உப்பு, விரலி மஞ்சள். புளி, வரமிளகாய், தாம்பூல தட்டு, கற்கண்டு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். சமையலறையில் அரிசி மாவு கோலம் போட்டு அங்கு நிறை செம்பு தண்ணீர் வைக்கவும். ஒரு பெரிய தாம்பாளத்தில் ஒன்பதுதொன்னைஅல்லதுகிண்ணம்எடுத்துகல்லுப்பு,மஞ்சள்தூள், குங்குமம், புளி,வரமிளகாய், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு,பச்சரிசி, சர்க்கரை, அனைத்தையும் கொட்டி வைத்து பூஜை அறையில் வைக்கவும்.
0
Leave a Reply