25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அயோத்தி  ராமர் கோவிலில் மைசூரு சிற்பி வடித்த விக்ரகம் பிரதிஷ்டை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அயோத்தி  ராமர் கோவிலில் மைசூரு சிற்பி வடித்த விக்ரகம் பிரதிஷ்டை

 கர்நாடகாமாநிலம் மைசூருவை சேர்ந்த சிற்பக் கலைஞர் அருண் யோகிராஜ் வடித்த குழந்தை ராமர் விக்ரகம், அயோத்திராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ல் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுசெயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம்நேற்று கூறியதாவது:
கும்பாபிஷேகத்துக்கான சடங்குகள் இன்று முதல் துவங்கி ஜன.21 வரை நடக்கின்றன. கோயில்கருவறையில் பிரதிஷ்ட்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் விக்ரகம் ஜன.18ல் கருவறையில் வைக்கப்பட்ட து.கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த சிலை 150 - 200 கிலோ எடை உடையது. கருவறைக்குள் வைக்கப்படும் விக்ரகத்திற்கான சடங்குகள் முடிந்து ஜன. 22 மதியம் 12:20 மணிக்கு ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் சடங்கு துவங்கி1:00 மணிக்குநிறைவடையும்.தற்போது வழிபாட்டுக்காக கோயில் வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ளராமர் விக்ரகமும்,கருவறைக்குள் இடம் பெறும், என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News