கிரிக்கெட் பெண்கள் அணிகள் இந்தியா- இங்கிலாந்து கடைசி ஒரு நாள் போட்டி.இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 20 ஓவர் தொடரை 3,2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய பெண்கள் அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும்,2வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் இன்று நடக்கிறது.
ஜார்ஜியாவின் பதுமி நகரில் பெண்கள் உலகக்கோப்பை செஸ் போட்டி கால் இறுதியில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை கோனெரு ஹம்பி 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் யுக் சின் சாங்கை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் அரைஇறுதியை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். இன்று நடைபெறும் அரைஇறுதியில் ஹம்பி, சீனாவின் லீ டிங்ஜியை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஆர். வைஷாலி 0.5-1.5 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் டான் ஜோங்யிடம் தோற்று வெளியேறினார். இன்னொரு கால்இறுதியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், சகநாட்டவர் ஹரிகாவை எதிர்கொண்டார். முதல் நாளில் இரு ஆட்டமும் 'டிரா' ஆன நிலையில் நேற்று டைபிரேக்கரில் திவ்யா தேஷ்முக் 2-0 என்ற கணக்கில் ஹரிகாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். அரைஇறுதியில் திவ்யா தேஷ் முக், முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜோங்யிடன் சந்திக்கிறார். ஹம்பி, திவ்யா அரைஇறுதிக்கு வந்திருப்பதன் மூலம் இவர்களில் ஒருவர் குறைந்தது பெண்கள் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெறுவர்.
வாலிபால் சாம்பியன்ஷிப் (16 வயது) தாய்லாந்தில் நடக்கிறது.இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் (தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சீனா) வென்றது. அடுத்து வலிமையான உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி,உலக வாலிபால் சாம்பியன்ஷிப் தொடருக்கு (2026, பல்கேரியா) முதன் முறையாக தகுதி பெற்றது.வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, ஜப்பானை சந்தித்தது. முதல் செட்டை இந்தியா 25-21 என கைப்பற்றியது.அடுத்த செட்டை 12-25 என இழந்த போதும், 3வது செட்டை 25-23 என கைப்பற்றியது. 4வது செட்டை 18-25 என நழுவவிட்டது. வெற்றியாளரை முடிவு செய்யும் 5வது, கடைசி செட்டில் இந்திய அணியினர் 15-10 என கைப்பற்றினர் .முடிவில் இந்திய அணி 3-2 என்ற செட் கணக்கில்'வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றது.
ஜார்ஜியாவில் பெண் களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக் கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா வெற்றி பெற்றனர். இதையடுத்து முதன் முறையாக இந்தியாவின் நான்கு வீராங்கனைகள், உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறி, வரலாறு படைத்தனர். நேற்றுகாலிறுதிசுற்றுதுவங்கின.நடக்கும்இருபோட்டியில்.நேற்றுநடந்தமுதல்போட்டியில்இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை, உலகின் 'நம்பர்-5', கோனேரு ஹம்பி, சீனாவின் யூஜின் சாங் ('நம்பர் -36') மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி துவக்கத்தில் இருந்து ,சிறப்பாக செயல்பட்டு 53வதுநகர்த்தலில் வெற்றி பெற்றார்..இவர் 1.0-0 என முன்னிலையில் உள்ளார்.. நேற்று 2வது போட்டி நடந்தது. இதில் ஹம்பி, கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறு விறுப்பான இப்போட்டி 53வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் ஹம்பி1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஹரிகா, திவ்யா தேஷ்முக் மோதி னர். முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டியில் 60வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் போட்டி 1.0 - 1.0என சமநிலையில் உள்ளது. இன்று 'டை பிரேக்கர்' நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறும் வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறலாம்..
100 மீ., 'பிரீஸ்டைல்' ஆண்கள் நீச்சல் போட்டி பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் பங்கேற்றார். 'ஹீட்-6ல்' களமிறங்கிய இவர், 49.46 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். ஸ்ரீஹரி நடராஜ், அரையிறுதிக்குள் நுழைந்தார். இவர், 100 மீ. 'பிரீஸ் ஸ்டைல்' பிரிவில் பந்தயதுாரத்தை அதிவேகமாக கடந்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். 10வது இடம் பிடித்த ஸ்ரீஹரி நடராஜ் (25.59 வினாடி), ஆண்களுக்கான 50 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவு தகுதிச்சுற்றில் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் வைஷ்ணவி, அதர்வா சர்மா ஜோடி ,டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் 2-0 (6-1, 6-4) கொலம்பியாவின் ரெய்னா கேசிலோ, கான்சலஸ் டோரஸ் ஜோடியை வென்றனர்.
'வேர்ல்டு கான்டினென் டல் டூர்' சர்வதேச தடகள போட்டி போர்ச்சுகலில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 26, பங்கேற்றார்.கேரளாவை சேர்ந்த இவர், தனது முதலிரண்டு வாய்ப்புகளில் 7.63, 7.75 மீ., தாண்டினார். மூன்றாவது வாய்ப்பை 'பவுல்' செய்த ஸ்ரீசங்கர், அடுத்த இரு வாய்ப்புகளில் 6.12, 7.58 மீ. தாண்டினார். ஸ்ரீசங்கர் 7.75 மீ., தாண்டி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
114 நாடுகள் பங்கேற்கும் உலக பல்கலை., விளை யாட்டு 32வது சீசன் ஜெர்மனியில்,நடக்கிறது.. இந்தியாவின் 90 பல்கலை., யில் இருந்து 300க்கும் மேற் பட்டோர் விளையாடுகின்றனர்.பாட்மின்டன் கலப்பு அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியா, சீனதைபே மோதின. ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சதிஷ்குமார் கருணாகரன்1-2எனசீனதைபேயின்சுலியாங்கிடம் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையரில் தேவிகா சிஹாக் (இந்தியா) 2-0 என சிங் பிங் ஹுவாங்கை (சீனதைபே) தோற்கடித்தார். இரட்டையரில் இந்தியாவின் சனீத் தயானந்த்-சதிஷ், தஸ்னிம் மிர்-வர்ஷிணி ஸ்ரீ ஜோடி தோல்வியடைந்தன. முடிவில் இந்திய அணி 1-3 என தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றியது. இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெண்கலம் பதக்கம்.
ஆசிய ஜூனியர் பாட்மின்டன் (கலப்பு அணி) இந்தோனேஷியாவில், சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. அணிகளுக்கு இடையிலான லீக் சுற்றில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, கலப்பு இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் விஷ்ணு கேதர், ரெஷிகா ஜோடி 11-5 என இலங்கையின் கெனத், இசுரி ஜோடியை வீழ்த்தியது. பெண்கள் இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் காயத்ரி, மான்சாரவாத் ஜோடி 11-9 என இலங்கையின் இசுரி, சிதுமி டி சில்வா ஜோடியை வென்றது. இந்தியாவின் தன்வி சர்மா 11-7 என பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் இலங்கையின் சிதுலி ரணசிங்கேவை வென்றார். இந்தியாவின் பிரனவ் ராம் 11-7 என ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ,இலங்கையின் திடாசாவை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் ராஜுலு ராமு 11-9 என இலங்கையின் ரணித்மா லியனகேவை வென்றார்.இந்திய அணி 110-69 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி, தனது 2வது போட்டியில் இன்று ஐக்கிய அரபு எமிரேட்சை (யு.ஏ.இ.,) சந்திக்கிறது.
பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் ,46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற் கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம் பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையி லான இத்தொடரின் நான்காவது சுற்று நடந்தது. இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் பங்கேற்றனர். 19 வயது திவ்யா, உலகின் 'நம்பர்-2' வீராங்கனை, சீனாவின் ஜூ ஜினரை சந்தித்தார். முதல் இரு சுற்று முடிவில் 1.0-1.0 என சமன் ஆனது. நேற்று 'டை பிரேக்கர்' நடந்தது.இதன் முதல் போட்டியில் வென்ற திவ்யா, அடுத்த போட்டியை 'டிரா' செய்தார். முடி வில் திவ்யா 2.5-1.5 என வெற்றி பெற்று, காலிறு திக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஹம்பி, சுவிட்சர்லாந்தின், அலெக்சாண்ட்ரா மோதினர். இதில் ஹம்பி 2.5-1.5 என வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் வைஷாலி, கஜகஸ்தானின் கமலிடெனோவாவை 4.5-3.5 என வெற்றி பெற்றார். இந்தியாவின் ஹரிகா, உக்ரைனின் கேத்தரினாவை போட்டி முடிவில், ஹரிகா 3.5-2.5 என வென்றார்.