25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Mar 06, 2025

தேசிய மாஸ்டர்ஸ் தடகளத்தில் தமிழக அணிக்கு வெள்ளி .

தேசிய மாஸ்டர்ஸ் தட கள சாம்பியன்ஷிப் தொட ரின் 45 வது சீசன் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணை யத்தின் நேதாயத்தின் நேதாஜி சுபாஷ் மைதானத்தில் நடக்கிறது. இதில் சிறப்பாக செயல் படுபவர்கள், இந்தோனே ஷியாவில் நடக்கவுள்ள ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டிக்கு தகுதி பெறுவர். கடந்த சில ஆண்டு களாக தமிழக அணியினர்  சிறப்பாக செயல்பட்டனர். தேசிய மாஸ்டர்ஸ் தடகளத்தின் 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் தமிழக அணியினர் வெள்ளி வென்றனர். தேசிய மாஸ்டர்ஸ் தடகளத்தின் 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற தமிழகத்தின் பாலசுப்ரமணியன், ரகுநாத், கணேசன்,  ஜெயச்சந்திர பாண்டி. 

Mar 05, 2025

ஸ்னூக்கர்:பங்கஜ் அத்வானி வெற்றி .

 மும்பையில், சி.சி.ஐ.. ஸ்னுாக்கர் கிளாசிக்தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் (ரவுண்ட் 32)  பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (பி.எஸ். பி.பி.,) அணியின் பங்கஜ் அத்வானி, தெலுங்கானா வின் ஹிமான்ஷு ஜெயின் மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு சாம்பியன்' பங்கஜ் அத்வானி 4-1 (43-77, 72-35, 80-33, 80-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 

Mar 05, 2025

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர். நியூசிலாந்துஅணி, தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. நேற்று நடந்தஇரண்டாவது அரையிறுதியில் 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்ரிக்கா, 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற நியூசிலாந்தை எதிர்கொண்டது.  நியூசிலாந்து அணி 50 ஓவரில்362/6 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 312/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.  சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனல், மார்ச் 9ல் துபாயில் நடக்க உள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி, ஏற்கனவே நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது. 

Mar 04, 2025

சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி .

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடக்கின்றன.நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதின. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதில் கூப்பர் கொனாலி, தன்வீர் சங்கா இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 264 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. துவக்கத்தில் திணறிய இந்திய அணி சுப்மன் கில் (8) ஏமாற் றினார். இரண்டு முறை 'கேட்ச்' வாய்ப்பில் இருந்து தப்பிய கேப்டன் ரோகித் சர்மா (28), கொனாலி வலையில் சிக்கினார். இந்தியா 8 ஓவரில் 42/2 ரன் எடுத்தது.  கோலி, ஸ்ரேயாஸ் சேர்ந்து , 'ரிஸ்க்' எடுக்காமல் அழகாக ரன் சேர்த்தனர். ஜாம்பா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கோலி 53 பந்தில், ஒருநாள் அரங்கில் 74வது அரைசதம் எட்டினார்.கடைசி கட்டத்தில் ராகுல், ஹர்திக் பாண்ட்யா மிரட்டினர். ஜாம்பா ஓவரில் வரிசையாக இரண்டு இமாலய சிக்சர் விளாசிய பாண்ட்யா பதட்டத்தை தணித்தார். பாண்ட்யா28 ரன் எடுத்தார். மேக்ஸ் வெல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ராகுல், வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 48.1ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Mar 04, 2025

விராட் கோலியின் சாதனைகள்

 ஐ.சி.சி., ஒருநாள் தொடரில் (உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ) அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர்களில் சச்சினை (23) முந்தினார் கோலி. இவர் 24 அரைசதம் அடித்துள்ளார். ரோகித் (18) 3வது இடத்தில் உள்ளார்.நேற்று அரைசதம் விளாசிய கோலி, ஒருநாள் அரங்கில் 'சேஸ்' செய்யும் போது 8000 ரன் (159 இன்னிங்ஸ்) எட்டிய உலகின் 2வது வீரரானார். சராசரி 64.54 வைத்துள்ள ஒரே வீரர் இவர் தான். முதலிடத்தில் சச்சின் (8,720 ரன், சராசரி 42.33, 232 இன்னிங்ஸ்)) உள்ளார்.ஒருநாள் அரங்கில் சேஸ் செய்த போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் சச்சினுடன் (242 போட்டி, 69 அரைசதம்) இணைந்து முதலிடம் பிடித்தார் கோலி. ஒருநாள் அரங்கில் அதிக 'கேட்ச்' பிடித்த பீல்டர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் கோலி (161 கேட்ச், 301 போட்டி). நேற்று 2 கேட்ச் பிடித்த இவர், ஆஸ்திரேலியாவின் பாண்டிங்கை (160, 375 போட்டி) முந்தினார். முதலிடத்தில் ஜெயவர்தனா (இலங்கை, 218, 448 போட்டி) உள்ளார்..ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று 50வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார் கோலி. சச்சின் (71), தோனிக்கு (55) அடுத்து இம்மைல் கல்லை எட்டிய மூன்றாவது இந்திய வீரரானார்.  

Mar 03, 2025

இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா.

இந்திய அணி வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்தை வீழ்த்தி 'ஏ' பிரிவில் முதலிடம் (6 புள்ளி) பிடித்தது.நுாறு சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங் பலமாக உள்ளது.வங்கதேசத்திற்கு எதிராக கேப்டன் ரோகித் (41), சுப்மன் கில் (101) பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த கோலி சதம் அடித்தார். வேகப்பந்துவீச்சில் ஷமி, ஹர்ஷித் மிரட்டலாம். ராணா நியூசிலாந்துக்கு எதிராக நான்கு 'ஸ்பின்னர்'களுடன் இந்தியா களமிறங்கியது. இதில் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி, வெற்றிக்கு வித்திட்டார். துபாய் 5  சுழலுக்கு கை கொடுத்தஆடுகளம் , இன்றும் அதிக 'ஸ்பின்னர்'கள் இடம் பெறுவது உறுதி. ஒட்டுமொத்தமாக இந்திய அணி வலுவாக இருப்பதால், பைனலுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உண்டு. இம்முறை இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை வீழ்த்த 'ஸ்பின்னர்' களை நம்பி களம் இறங்குகிறது. 

Mar 03, 2025

இந்தியாவின் இனியன் செஸ் விளையாட்டு போட்டியில் சாம்பியன்

பிரான்சில், கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் 38வது சீசன் நடந்தது. இதில் 25 நாடுகளை சேர்ந்த, 6 கிராண்ட்மாஸ்டர்ஸ், 21 சர்வதேச மாஸ்டர்ஸ் உட்பட 147 பேர் பங்கேற்றனர். இதன் 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் இனியன், பிரனேஷ் மோதினர். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய இனியன், 61வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.இந்தியாவின் ஆராத்யா கார்க், பிரான்சின் பியர் பார்போட் மோதிய 9வது சுற்றுப் போட்டி 52வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.ஒன்பது சுற்றுகளின் முடிவில் 6 வெற்றி, 3 'டிரா' என, 7.5 புள்ளிகளுடன் இனியன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்தியாவின் ஆராத்யா கார்க், நடப்பு ஜூனியர் உலக சாம்பியன் கஜகஸ்தானின் காசிபெக் நோடர்பெக் தலா 7.0 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். பின், ‘டை பிரேக்கரில்' ஆராத்யா 2வது, நோடர்பெக் 3வது இடம் பிடித்தனர்.

Mar 03, 2025

கால்பந்து சென்னை அணி தோல்வியடைந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது.நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. சென்னை அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.   வடகிழக்கு யுனைடெட் அணி சார்பில் நெஸ்டர் அல்பியாச் (7வது நிமிடம்), ஜித்தின் சுப்ரான் (26வது), அஜாரை (38வது) தலா ஒரு கோல் அடித்தனர்.இதுவரை விளையாடிய 23 போட்டியில், 6 வெற்றி, 6 'டிரா', 11 தோல்வி என 24 புள்ளிகளுடன் சென்னை அணி 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது. வடகிழக்கு யுனைடெட் அணி 35 புள்ளிகளுடன் (9 வெற்றி, 8 'டிரா', 6 தோல்வி) 5வது இடத்துக்கு முன்னேறி, 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி.. 

Mar 02, 2025

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் தரவரிசை பட்டியல்.

 நார்வேயின் கார்ல்சன் (2833 புள்ளி) முதலிடத்தில் உள்ளார்.உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ் 'நம்பர்-3' ஆக உள்ளார்.பேபியானோ காருணா  4வது இடத்துக்கு சென்றார்.அர்ஜுன் எரிகைசி , 5வது இடம் பெற்றார்.பிரக்ஞானந்தா , 8வது இடம் பிடித்துள்ளார். பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஹம்பி 'டாப்-10' பட்டியலில் உள்ளார். வைஷாலி (2484, 14), ஹரிகா (2483, 16) அடுத்து உள்ளனர். 

Mar 02, 2025

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனல் விதர்பா அணி 3வது முறையாக ரஞ்சி கோப்பை வென்றது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனல் நடக் கிறது. இதில் விதர்பா, கேரளா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் விதர்பா 379, கேரளா 342 ரன் எடுத்தன.நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை துவக்கிய விதர்பா அணிக்கு ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்து, 286 ரன் முன்னிலை பெற்றிருந்தது. விதர்பா அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 375 ரன் எடுத்திருந்த போது, இரு அணி கேப்டன்களும் கடைசி நாள் ஆட்டத்தை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். தர்ஷன் (51), யாஷ் தாக்கூர் (8) அவுட்டா காமல் இருந்தனர். கேரளா சார்பில் ஆதித்யா சர்வதே 4 விக்கெட் கைப்பற்றினார்.இதனையடுத்து போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் 37 ரன் முன் னிலை பெற்ற விதர்பா அணி 3வது முறையாக ரஞ்சி கோப்பை வென்றது. ஆட்ட நாயகன் விருதை விதர்பா அணியின் டேனிஷ் மலேவர்.  வென்றார். தொடர் நாய கன் விருதை விதர்பா சுழற்பந்துவீச்சாளர் ஹர்ஷ் துபே (69 விக்கெட்) கைப்பற்றினார். 

1 2 ... 155 156 157 158 159 160 161 ... 171 172

AD's



More News