உலக கோப்பை செஸ் பெண்கள் தொடர்.
பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் ,46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற் கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம் பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.
'நாக் அவுட்' முறையி லான இத்தொடரின் நான்காவது சுற்று நடந்தது. இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் பங்கேற்றனர். 19 வயது திவ்யா, உலகின் 'நம்பர்-2' வீராங்கனை, சீனாவின் ஜூ ஜினரை சந்தித்தார். முதல் இரு சுற்று முடிவில் 1.0-1.0 என சமன் ஆனது. நேற்று 'டை பிரேக்கர்' நடந்தது.
இதன் முதல் போட்டியில் வென்ற திவ்யா, அடுத்த போட்டியை 'டிரா' செய்தார். முடி வில் திவ்யா 2.5-1.5 என வெற்றி பெற்று, காலிறு திக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஹம்பி, சுவிட்சர்லாந்தின், அலெக்சாண்ட்ரா மோதினர். இதில் ஹம்பி 2.5-1.5 என வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
இந்தியாவின் வைஷாலி, கஜகஸ்தானின் கமலிடெனோவாவை 4.5-3.5 என வெற்றி பெற்றார்.
இந்தியாவின் ஹரிகா, உக்ரைனின் கேத்தரினாவை போட்டி முடிவில், ஹரிகா 3.5-2.5 என வென்றார்.
0
Leave a Reply