25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Jul 25, 2025

மான்செஸ்டரில் கிரிக்கெட் போட்டி.

'ஆண்டர்சன், சச்சின் டிராபி"ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி,2,1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 214/2 ரன் எடுத்து, 144 ரன் பின்தங்கியிருந்தது. 

Jul 25, 2025

பெண்களுக்கான உலக கோப்பை செஸ்: பைனலில் ஹம்பி!

 பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர்ஜார்ஜியாவில்,  நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் திவ்யா, சீனாவின் ஜோங்கியை வீழ்த்தி, முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார்.மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, சீனாவின் லெய்டிங்ஜீ மோதினர். இரண்டு போட்டிகளின் முடிவில் ஸ்கோர் 1.0,1.0 என சம நிலையில் இருந்தது.நேற்று,'டை பிரேக்கர்' நடந்தது. இதன் முதல் போட்டியில் விளையாடிய ஹம்பி, 65வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இரண்டாவது போட்டியில் களமிறங்கிய ஹம்பி, 39வது நகர்த்தலில் வெற்றி பெற, 2.0-2.0 என மீண்டும் சம நிலை வகித்தது.அடுத்த 4 போட்டியில்,3ல் ஹம்பி, முடிவில் 5.0,3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். நாளை துவங்கவுள்ள பைனலில் இந்தியாவின் ஹம்பி, திவ்யா மோதுகின்றனர். உலக கோப்பை பைனலுக்கு முதன்முறையாக இரண்டு இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். 

Jul 25, 2025

சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் .

 சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் தொடர்சீனாவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து 30, உன்னதி ஹூடா 17,மோதினர். ஒரு மணி நேரம், 13 நிமிடம் நீடித்த போட்டியில் உன்னதி 21-16, 19-21, 23–21 என்ற, கணக்கில் வெற்றி பெற்று,'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற தொடரில் முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-19 என இந்தோனேஷியாவின் பகாஸ் மவுலானா, லியோ ரோலி கார்னாண்டோ ஜோடியை வீழ்த்தியது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரனாய்,21,18/,15,21/,8,21 என சீனதை பேயின் சோவ் டியென்-சென்னிடம்  தோல்வியடைந்தார்.  

Jul 25, 2025

உலக பல்கலை விளையாட்டு 32வது சீசன்....

 உலக பல்கலை விளையாட்டு 32வது சீசன் ஜெர்மனியில்,  .ஆண்கள் அணிகளுக்கான வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவு காலிறுதியில் இந்திய அணி 236-229 என அமெரிக்காவை வீழ்த் தியது. அரையிறுதியில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. குஷால் தலால், சாஹில் ராஜேஷ் ஜாதவ், ஹிருத்திக் சர்மா அடங்கிய இந்திய அணி 235-233 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.நாளை நடக்கவுள்ள ஆண்களுக்கான தனி நபர் பிரிவு அரையிறுதியில் குஷால் தலால், சாஹில் ராஜேஷ் ஜாதவ் மோதுகின்றனர். இதனையடுத்து 'காம்பவுண்டு' பிரிவில் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியானது.பெண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு'பிரிவு காலிறுதியில் பர்னெத் கவுர், அவ்னீத் கவுர், மதுரை அடங்கிய இந்திய அணி 232,226 என இத்தாலியை வீழ்த்தியது.அரையிறுதியில் இந்திய அணி 230,233 என அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது. இனி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனை சந்திக்கவுள்ளது.தடகளம் 5000 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் ஆண்கள், பெண்களுக்கான இந்தியாவின் கிரண் மாத்ரே (14நிமிடம், 41.49 வினாடி), சீமா (15 நிமிடம், 30.70 வினாடி)பைனலுக்கு முன்னேறினர். தொடர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில்கலப்புஅணிகளுக்கான 4×400 மீ.,ஜெரோமிசஞ்சய்,ரூபால்,விஷால், தேவ்யானிபா அடங்கிய இந்திய அணி (3 நிமிடம், 19.21 வினாடி) பைனலுக்குள் நுழைந்தது.  ஈட்டி எறிதல்ஆண்களுக்கான  ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் சாஹில்  71.60 மீ.,எறிந்த இந்தியாவின் சில்வால், பைனலுக்கு தகுதி பெற்றார். 

Jul 24, 2025

கிரிக்கெட்'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட்தொடர்.

ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட்தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து, 2-1 என முன்னிலையில் உள்ளது. நேற்று, 4வது டெஸ்ட் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் துவங்கியது. தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 'பவுலிங்' தேர்வுசெய்தார். இந்தியஅணிமுதல்இன்னிங்சில், 4 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்திருந்தது. போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. 

Jul 24, 2025

ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் ஷ்ரேயாசிஜோஷி தங்கம் வென்ற முதல் இந்தியர்.

 தென் கொரியாவில் 20வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. முதல் நாளில் சீனியர் பெண்களுக்கான 'பிரீஸ்டைல் கிளாசிக்' ஸ்ல லோம் பிரிவில் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் ஷ்ரேயாசி ஜோஷி களமிறங்கினார்.தேசிய சாம்பியன்ஷிப்பில் 10 முறை கோப்பை வென்றதால், இவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற் கேற்ப சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாசி, அனைத்து பிரிவிலும் முதலிடம் பிடித்து, 83.33 புள்ளி எடுத்து தங்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான சீனியர் 200 மீ., டியூவல் டைம் டிரையல் பிரிவில் இந்தியாவின் தனுஷ் பாபு, 17.592 புள்ளி எடுத்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் ஆர்யன் பால் சிங் (17.731) 5-வது இடம் பிடித்தார். 

Jul 24, 2025

24 TH JULY விளையாட்டு போட்டிகள்

சர்வதேச பாட்மின்டன் பிரிவு தொடர் சீனாவில், 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் பிரிவு தொடர் சீனாவில், நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலக தரவரிசையில் 15வது இடத்தில் உள்ள இந்தியாவின் சிந்து, உலகின் 'நம்பர்–6' ஜப்பானின் டோமோகா மியாசகி மோதினர். இதில் சிந்து 21-15, 8-21, 12-7  என வெற்றி பெற்றார்.மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-11, 21-16 என ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் சிந்து, உன்னதி ஹூடா மோதுகின்றனர்.ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-9 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஒகமுரா, மிட்சஹாஷி ஜோடியை வென்றது.  பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர்பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3’ இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண் டிடேட்ஸ்' 'செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஹம்பி, திவ்யா என இரு வீராங்கனைகள், முதன் முறையாக முன்னேறி, வரலாறு படைத்தனர். தற்போது அரையிறுதி நடக்கின்றன. உலகத் தரவரிசையில் 'நம்பர்-5' வது இடத்திலுள்ள ஹம்பி, ‘நம்பர்-3', சீனாவின் லெய் டிங்ஜீ மோதிய மற்றொரு அரையிறுதி 'டிரா' ஆனது. ஸ்கோர் 1.0-1.0 என சமனில் உள்ளது.இன்று 'டை பிரேக்கர்' நடக்கிறது.    இங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி,  மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிஇங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி, மூன்று ஒருநாள் போட்டியில் முதல் இரு போட்டி முடிவில் தொடர் 1-1 என சமனில் இருந்தது. 3வது, கடைசி போட்டி செஸ்டர் லீ ஸ்டீரீட்டில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்தியா, பேட்டிங் செய்தது. இந்திய அணி 50 ஓவரில் 318/5 ரன் குவித்தது. இங்கிலாந்து அணி, 49.5 ஓவரில் 305 ரன்னில் ஆல் அவுட்டானது. 13 ரன்னில் வென்ற இந்தியா 2-1 என தொடரை  கைப்பற்றியது. 14-20 தொடரை (3-2) வென்ற இந்தியா, 2 கோப்பையுடன் திரும்புகிறது. 

Jul 23, 2025

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடரின் அரையிறுதியின் முதல் போட்டியில் ஹம்பி, திவ்யா 'டிரா' செய்தனர்.

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் 46 நாடுகளில் இருந்து107 பேர் பங்கேற்கின்றனர்.'டாப்-3' இடம் தகுதிப் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் போட்டியில்('கேண் டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஹம்பி, திவ்யா என இரு வீராங்கனைகள் முதன் முறையாக முன்னேறி, வரலாறு படைத்தனர்.நேற்று தலா இரு போட்டி கொண்ட அரையிறுதி சுற்று துவங்கின. முதல் உலகத் போட்டியில் தரவரிசையில்'நம்பர்-5' வது இடத்திலுள்ள ஹம்பி,'நம்பர்-3' வீராங்கனை சீனாவின் லெய் டிங்ஜீ மோதினர்.17 வது நகர்த்தலில் சற்று பின்தங்கிய ஹம்பி, பின் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார்.38 வது நகர்த்தலில் இப் போட்டி‘டிரா’ஆனது. இருவரும் 0.5-0.5 என சம புள்ளியில் உள்ளனர்.மற்றொரு அரையிறுதியில் உலகத் தரவரிசையில்18வது இடத்திலுள்ள,19 வயது வீராங்கனை திவ்யா,'நம்பர்-8' ஆக உள்ள சீனாவின் வலிமையான ஜோங்இயை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் திவ்யா.இப்போட்டி30வது நகர்த்தலில்'டிரா' ஆக, இருவரும்0.5,0.5 என சம புள்ளி பெற்றனர்.இன்று அரையிறுதி இரண்டாவது போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் வீராங்கனைகள் பைனலுக்கு செல்லலாம். மாறாக, மீண்டும் 'டிரா' ஆனால், நாளை 'டை பிரேக்கர்' முறையில் வெற்றியாளர் முடிவு செய்யப்படுவர் .

Jul 23, 2025

பல்கலை விளையாட்டு 32வது சீசன் போட்டிகள்

பல்கலை விளையாட்டு32வது சீசன் ஜெர்மனியில்,நடக்கிறது. இந்தியா சார்பில்90 பல்கலை., யில் இருந்து300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.இந்தியா20 வயது வீராங்கனை வைஷ்ணவி, பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் காலிறுதியில் ,ஜெர்மனியின் சினா ஹெர்மானை எதிர்கொண்டார். இதில் வைஷ்ணவி, 6-1, 6-4 என நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு  முன்னேறினார். கலப்பு இரட்டையரில் இந்தியாவின் வைஷ்ணவி, அதர்வாஜோடி6,2,7,5 என அமெரிக்காவின் ஒலிவியா, ஜெர்ரி ஜோடியை வென்றது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மான்கேஷர்வானி, 6,2, 5,7, 4,10 என தாய்லாந்தின் ஸ்ரீராட்டிடம் தோல்வியடைந்தார்.பெண்களுக்கான100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அபிநயா(தமிழகம்),5வது தகுதிச்சுற்றில் களமிறங்கினார். இவர்11.88 வினாடி நேரத்தில் வந்து 2வது இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீரர் அபிமன்யு, 52.85மீ., துாரம் எறிந்து 12வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினார்.பெண்கள் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஆன்சி சோஜன் (6.20 மீ.,), 10 வது இடம் பிடித்து பைனலுக்கு தகுதி  பெற்றார்.

Jul 23, 2025

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர்

சென்னை, ஹயாத் ஓட்டலில்,வரும் ஆகஸ்ட்6 முதல்15 வரை, சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடரின் மூன்றாவது சீசன், நடக்க உள்ளது.தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ், சாலஞ்சர்ஸ் என இரு பிரிவுகளில் 20 பேர் பங்கேற்க உள்ளனர்.மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜோர்டான் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் பிரனவ், கடந்த 2024ல் சாலஞ்சர் பிரிவில் கோப்பை வென்றதால், இம்முறை மாஸ்டர்ஸ் பிரிவில் களமிறங்குகிறார்.இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான சாலஞ்சர் பிரிவில் கார்த்திகேயன் முரளி, லியோன் மென் டோன்கா, வைஷாலி, ஹரிகா, அபிமன்யு, ஆர்யன், அதிபன் பாஸ்கரன், இனியன், பிரனேஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றால் ரூ.25 லட்சம்,2,3வது இடம் பெற்றால் ரூ.15 லட்சம்,ரூ.10 லட்சம் பரிசு கிடைக்கும், சாம்பியன் வீரர்,'பிடே' தரவரிசையில்24.5 புள்ளி பெறலாம். இதனால் அடுத்த ஆண்டு நடக்கும் உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில்('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.சாலஞ்சர்ஸ் பிரிவில் வென்றால் ரூ.7 லட்சம்,2026ல் மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.  

1 2 ... 109 110 111 112 113 114 115 ... 158 159

AD's



More News