25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


விளையாட்டு (SPORTS)

Oct 28, 2025

இந்திய வீராங்கனை சிந்து காலில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால்  இந்த ஆண்டுக்கான மீதமுள்ள பாட்மின்டன் போட்டிகளில் இருந்து விலகினார்.

இந்திய பாட்மின்டன் வீராங்கனை  சிந்து ,ஒலிம்பிக் (ஒரு வெள்ளி, ஒரு வெண் கலம்), உலக சாம்பியன் ஷிப் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.  இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப், இந்திய ஓபன், சீன மாஸ்டர்ஸ் தொடர்களில் காலிறுதி வரை சென்ற இவர், ஒரு சாம்பியன் பட்டம் கூட வெல்லவில்லை. கடைசியாக, கடந்த டிசம்பரில் நடந்த சையது மோடி சர்வதேச தொடரில் கோப்பை வென்றிருந்தார்.காலில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள  சிந்து, இந்த ஆண்டு நடக்கவுள்ள மீத முள்ள பி.டபிள்யு.எப்., டூர் தொடர்களில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். சிந்து கூறுகையில், "காயம் முழுமையாக குணமடையாததால், நடப்பு சீசனில் இருந்துபாதியில் விலக நேரிட்டது. எனது பயிற்சியாளர்கள், மருத்துவ குழுவினருடன்ஆலோசித்து இம்முடிவை எடுத்துள்ளேன்.காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு தேவையான பயிற்சியை ஏற்கனவே துவக்கிவிட் டேன். முழு உடற்தகுதியுடன் புதிய சீசனில் கள மிறங்குவேன்," என்றார்.

Oct 27, 2025

யூத் விளையாட்டு பளுதுாக்குதலில்,தங்க பதக்கத்தை வென்றார் இந்தியாவின் பிரிதீஸ்மிதா போய்.

ஆசிய யூத் விளையாட்டு பஹ்ரைனின் மனாமா நகரில் ,40 நாடுகளின் 8000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான பளுதுாக்குதல் 44 கிலோ பிரிவில் இந்தியாவின்  பிரி தீஸ்மிதா போய் 16, பங்கேற்றார். பிரி தீஸ்மா 'ஸ்னாட்ச்' பிரிவில் 66 கிலோ துாக்கி, 2வது இடம் பிடித்துவெள்ளி வென்றார். யூத் பிரிவில் தனது தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன்காமன்வெல்த் சாம் பியன்ஷிப் போட்டியில் 63 கிலோ தூக்கி இருந்தார்.ஒடிசா வீராங்கனை பிரிதீஸ்மிதா, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் அதிகபட்சமாக 92 கிலோ தூக்கி, தங்க பதக்கத்தை வென்று உலக  சாதனை படைத்தார்.ஏற்கனவே கடந்த ஆண்டு யூத் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான 40 கிலோ பிரிவில் உலக சாதனை (76 கிலோ) படைத்தி ருந்தார். ஒட்டுமொத்தமாக 158 கிலோ துாக்கிய இவர், முதலிடத்தை கைப்பற்றினார்.இந்தியாவின் பூமிகா  பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில், இலக்கை 24.43 வினாடியில் கடந்து,   3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண் கலம் என, 20 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. முதலி டத்தில் சீனா (28 தங்கம், 19 வெள்ளி, 8 வெண்கலம்) தொடர்கிறது.

Oct 27, 2025

ஆசிய ஜூனியர் பாட்மின்டனில் தங்கப்பத்தை வென்ற  இந்திய வீராங்கனைகள் திக் ஷா, ஷைனா .

ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பி யன்ஷிப் சீனாவின் செங்டு நகரில், (15, 17 வயது) பெண்கள் ஒற்றையர் பிரிவு (17 வயது) பைனலில் இந்தியாவின் லக்சயா, திக்ஷா மோதினர்.மொத்தம் 27 நிமிடம் நீடித்த போட்டியில் திக் ஷா 21-16, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பத்தை வென்றார். லக்சயா வெள்ளி வென்றார். இப்பிரிவில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் திக் ஷா.இந்தியாவின் ஷைனா, பெண்கள் ஒற்றையர் பிரிவு (15 வயது) பைனலில், ஜப்பானின் சிஹாரு டோமிடா மோதினர். இதில் ஷைனா 21-14, 22-20 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கம் கைப்பற்றினார்.இப்பிரிவில் ஷைனா தங்கம் வென்ற, 4வது இந்திய வீராங்கனையானார் .இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண் கலம் என, 5 பதக்கம் கிடைத்துள்ளது. 

Oct 27, 2025

பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர்.

பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் சென்னையில்,இன்று துவங்குகிறது.இந்தியா சார்பில் மாயா, ரேவதி, சஹாஜா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா என மூவருக்கு ஒற்றையர்  பிரிவில் சிறப்பு அனுமதி ('வைல்டு கார்டு) வழங்கப்பட்டுள்ளது. இவர்கள்சொந்த மண்ணில் அசத்தினால், கோப்பை வென்று சாதிக்கலாம். . இந்தியாவின் வைஷ்ணவி-மாயா ரேவதி, லட்சுமி–தியா ஜோடிக்கு ,இரட்டையரில் 'வைல்டு கார்டு' சிறப்பு அனுமதி   வழங்கப்பட்டுள்ளது.'நடப்புசாம்பியன், செக்குடியரசின் லிண்டா புருக்விர்ட்டோவா, போலந்தின் மாக்டா லினெட்டே, குரோஷியாவின் டோன்னா வெகிச், ஜெர்மனியின் டாட்ஜனாமரியா,உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

Oct 25, 2025

சத்யன், தியா, சர்வதேச டேபிள் டென்னிசில், இரண்டாவது சுற்றில் …..

டபிள்யு.டி.டி., ஸ்டார் கன்டெண்டர் தொடர்இங்கிலாந்தின் லண்டனில். ஆண் கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சத்யன், பெல்ஜியத்தின் அட்ரியனை சந்தித்தார்.  சத்யன் முதல் செட்டை 11-4 , 2  வதுசெட்  11-6 ,  மூன்றாவது செட்  , 11-8 என  வெற்றி பெற்றார்.இந்தியாவின் ஹர்மீத் தேசாய்,  மற்றொரு போட்டியில் 3-1 என (5-11, 12-10, 11-8, 14-12) சக வீரர் மனுஷ் ஷாவை வென்றார். இந்தியாவின் தியா, யாஷஸ்வினி பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் மோதினர். இதில் தியா 3-2 (11-9, 5-11, 8-11, 11-3, 12-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தியாவின் மானவ் தக்கார், மணிகா பத்ரா நேரடியாக இரண் டாவது சுற்றில் பங்கேற்க உள்ளனர். கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் தியா, மனுஷ் ஜோடி, 2-3 என யூகியா (ஜப்பான்), யூபின் (தென் கொரியா) ஜோடியிடம் தோல்வியடைந்தது. 

Oct 25, 2025

லக்சயா  ஆசிய ஜூனியர் பாட்மின்டன் அரையிறுதியில் ….

.ஆசிய ஜூனியர் (15, 17 வயது) பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்சீனாவின் செங்டு நகரில்,  நேற்று, காலிறுதி போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையரில் (17 வயது) இந்தியாவின் லக்சயா, தாய்லாந்தின் லலிதா மோதினர்.இதில் லக்சயா 11-21, 21-16, 21-19 என்ற கணக் கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் திக் ஷா மற்றொரு போட்டியில் 21-17, 21-8 என, இந்தோனே ஷியாவின் ரைசியாவை தோற்கடித்தார்.இந்தியாவின் ஷைனா பெண்கள் ஒற்றையர் பிரிவு (15 வயது) போட் டியில் 21-14, 21-16 என, ஜப்பானின் யூபிகி அஜுமாயாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.  இந் தியாவின் அதிதி, பொன்னம்மா விருத்திஜோடி ,பெண்கள்இரட்டையர் பிரிவில் (17 வயது) 17-21, 14-21 என சீனா வின் லின் லின் ஜியாங், யூ ஜின் ஜியாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது. 

Oct 25, 2025

23 வயதுக்கு உட்பட் டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன் ஷிப்தொடரில் பிரியா மாலிக் , வெண்கலப் பதக்கம் வென்றார்..

 23 வயதுக்கு உட்பட் டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன் ஷிப் தொடர் செர்பியாவில் ,பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடக்கின்றன. 76 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக், மெக்சிகோவின் ஜிமனெசை எதிர்கொண்டார். இதில் பிரியா 8-1 என வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.உலக சாம்பியன்ஷிப்பில் இவர் வென்ற 6 வது பதக்கம் இது. ஏற்கனவே 17 வயது (2 தங்கம்), 20 வயது (1 தங்கம், 2 வெள்ளி) பிரிவில் 5 பதக்கம் வென்று இருந்தார். இந் தியாவின் ஸ்ரீஷ்டி துருக்கியின் 68 கிலோ பிரிவு அரையிறுதியில் 6-8 என துருக்கியின் நெஸ்ரினிடம் வீழ்ந்தார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஹங் கேரியின் கரோலினாவை சந்திக்க உள்ளார். மற்றொரு அரையிறுதியில் (65 இந்தியாவின் புல்கிட், 6-9 என ரஷ்யா வின் எலிசவெட்டாவிடம் வீழ்ந்தார். 55 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நிஷூ, 4-6 என துருக்கியின் டெமிரி டம் தோல்வியடைந்தார். புல்கிட், நிஷூ என இருவரும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர். 

Oct 25, 2025

இந்தியர்கள் .ஆசிய யூத் விளையாட்டில் ஆறு பதக்கங்கள்  வென்றனர்.

 ஆசிய யூத் விளை யாட்டுபஹ்ரைனின் மனாமா நகரில்40 நாடுகளின் , 8000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 100 மீ., தடை  ஓட்டத்தில் ,இந்திய வீரர் ஷவுரியா அவினாஷ், 13.73 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இந்தியாவின் ஓஷின், ,பெண்களுக்கான வட்டு எறிதலில், அதிகபட்சம் 43.38 மீ., துாரம் எறிந்து, வெள்ளிப்பதக்கம்  வென்றார்.இந்தியாவின் மண்டல் பலாஷ் ஆண்களுக்கான 5000 மீ., நடைப் பந்தயத்தில் (24 நிமிடம், 48.93 வினாடி) வெண்கலம் வென்றார்.இந்தியாவின் ஜாஸ் மின் கவுர், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி யில் 14.86 மீ., துாரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். பெய்த் வான் ஜாய் (14.53) 6வது இடம் பிடித்தார். இந்தியாவின் வீர் பஹது, ஆண்களுக்கானமிக்ஸ்டு ஆர்ட்ஸ்' மரிட்சியல் போட்டியில், தாய்லாந்தின் டெச்சா சோட்டை வீழ்த்தி, வெண்கலம் கைப்பற்றினார். இப் பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது.இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என 12 பதக்கம் வென்று, பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. 

Oct 24, 2025

இந்திய பெண்கள் அணிஉலக கோப்பை லீக்கிரிக்கெட்  13வது சீசன் போட்டியில்ஸ்மிருதி மந்தனா, பிரதிகா சதம்!

  ஸ்மிருதி மந்தனா, பிரதிகா உலககோப்பை லீக் போட்டியில் சதம் எடுத்து, இந்திய அணி 340 ரன் குவித்தனர்.. பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்  இந்தியா, இலங் கையில், நடக்கிறது. நேற்று, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட் டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சோபி டெவின் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.இந்திய அணி 48 ஓவரில் 329/2 ரன் எடுத் திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப் பட்டது.மழை நின்ற பின், 49 ஓவர் போட்டியாக நடந்தது. இந்திய அணி 49 ஓவரில் 340/3 ரன் எடுத்தது. 

Oct 24, 2025

இந்தியாவின் விஸ்வ ஜித் உலக மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

உலக மல் யுத்தம் சாம்பியன்ஷிப் தொடர்செர்பியாவில் 23 வயதுக்கு உட்பட் டோர்ஆண்களுக்கான கிரிகோ ரோமன்' 55 கிலோ பிரிவில் போட்டி நடந்தது.வெண்கலப் பதக்கத்துக் கான போட்டியில் இந் தியாவின் விஸ்வஜித், கஜகஸ்தானின்சிலை சந்தித்தார். இதில் 5-4 என வெற்றி பெற்ற  விஸ்வஜித், வெண்கலம் வென்றாரர்.உலக மல்யுத்தத்தில் ,வென்ற இரண்டாவது வெண்கலம் இது. பிரீஸ்டைல்' பெண்களுக்கான ' போட்டி நடக்கின்றன. 55 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் நிஷு, முன்னாள் உலக சாம்பியன் ஜப்பானின் மோ கியூகாவை,  6-2 என வீழ்த்தினார். ரஷ்யாவின் கிராவை 10- 1 என வீழ்த்திய நிஷூ அரையிறுதிக்குள் நுழைந்தார். 

1 2 ... 14 15 16 17 18 19 20 ... 93 94

AD's



More News