ஒடிசா அணி ஐ.எஸ்.எல்கால்பந்து லீக் போட்டியில் 4-1 என, வடகிழக்கு யுனைடெட் அணியை வென்றது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் லீக் போட்டியில் நேற்று, அசாமின் கவுகாத்தியில் வடகிழக்கு யுனைடெட், ஒடிசா அணிகள் மோதி, ஒடிசா அணி 4-1 கோல் கணக்கில் வென்றது. இதுவரை விளையா டிய 4 போட்டியில், ஒரு வெற்றி, 2 'டிரா', ஒரு தோல்வி என, 5 புள்ளிக ளுடன் ஒடிசா அணி 9வது இடத்துக்கு முன்னேறியது.
வடக்கு, மத்திய அமெரிக்கா, கரீபிய கிளப் அணிகள் பங்கேற்கும் 'கன்காகப்' சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில்,மொத்தம் 27 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டியில் ஒரு கோல் அடித்த மெஸ்ஸி, 38, சர்வதேச கால்பந்து அரங்கில் அதிவேகமாக 900 கோல் அடித்த வீரர் என சாதனை படைத்தார்.1142 போட்டியில் இம் மைல்கல்லை எட்டினார். இந்த இலக்கை அடைந்த இரண்டாவது வீரர் ஆனார். முதலிடத்தில் போர்ச்சுகலின் கிறிஸ்டி யானோ ரொனால்டோ 41, உள்ளார்.
இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் மும்பையில் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின்முன்னணி வீராங்கனை அனாஹத் சிங் 18, நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்று,. எகிப்தின் பரிதா வாலித்தை எதிர்கொண்டார்.அனாஹத் முதல் செட் 11-6 ,2 வது செட் 11-9 3வது செட் 11–5 என கைப்பற்றி., 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.இந்தியாவின் சீனியர் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 49, அயர்லாந்தின் பிராயான்னே பிளைனை இரண்டாவது சுற்றில் சந்தித்தார். இதில் ஜோஷ்னா 3-1 என்ற (12– 10, 11-4, 8-11, 11-9) செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
.ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், இரு பிரிவுகளாக 2வது சுற்றில் மோதும். இதில், 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (ஆக. 28)முன்னேறும். பைனல், ஆக. 30ல் நடக்கவுள்ளது.வேல்ஸ் (ஆக. 15), இங்கிலாந்து (ஆக. 17), பாகிஸ்தான் (ஆக. 19) அணிகளுடன் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.இந்திய அணி பங்கேற்ற 8 போட்டியில், இந்த ஆண்டுஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது. ஏழு போட்டியில் தோல்வியடைந்தது. உலக கோப்பை வெல்ல ,கடுமையாக இந்திய அணி போராட வேண்டும்.
, ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் பிரான்சில், .பெண்கள் ஒற்றையர்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா, அன்மோல் கார்ப் மோதினர்.தன்வி சர்மா 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி, ஸ்காட்லாந்தின் அலெக்சாண்டர் டான், ஆடம் பிரிங்கிள் ஜோடியை ஆண்கள் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16 போட்டியில் சந்தித்தது.ஹரிகரன், அர்ஜுன் ஜோடி 26-24, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர்ஒற்றையர்பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் மும்பையில், இந்தியாவின்சசிகுமார்முகுந்த், நெதர்லாந்தின் ஸ்டிஜ்ன் பெல் மோதினர். சசிகுமார் 4-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் சித்தார்த் ரவாத், தேவ் ஜாவியா மற்றொரு போட்டியில் மோதி. சித்தார்த் ரவாத் 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
வரும் 2028ல் உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டி புவனேஸ்வரில் நடக்கவுள்ளது.உலக உள்ளரங்கு சாம்பியன் ஷிப் தொடர்,சர்வதேசதடகள கூட்டமைப்பு சார்பில், 21வது சீசன் போலந்தில் இன்று துவங்குகிறது.இந்நிலையில் நேற்று போலந்தில், உலக தடகள கவுன்சில் கூட்டம் நடந்தது.இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஓட்டம் உள்ளிட்ட 13 வகையான போட்டிகள் இடம் பெற்றுள்ளன. வரும் 2028ல் உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப் 22வது சீசனை நடத்திட இந்தியாவுக்கு அனுமதி வழங்கப் பட்டது. இதனையடுத்து இப்போட்டி இந்தியாவில் முதன்முறையாக நடத்தப்படுகிறது.வரும் மார்ச் 24-25ல் கலிங்கா மைதானத்தில், தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்முதல்சீசன் நடக்கவுள்ளது.உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ் வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடக்கவுள்ளது.
பிரான்சில், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட் மின்டன் தொடர் பிரான்சில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, கிரண் ஜார்ஜ் மோதினர். ஆயுஷ் 21-10, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தியாவின் அன்மோல் கார்ப், துருக்கியின்நெஸ்லிஹான்ஆரின் பெண்கள் ஒற்றையர்பிரிவுமுதல்சுற்றில்மோதி ,அன்மோல் 21-12, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் பிரக்ஞானந்தா'வரும்கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெறுவார்.. உலக சாம்பியன்ஷிப்பில் குகேஷை எதிர்த்து களமிறங்குவார்," என ஆனந்த் தெரிவித்துள்ளார்.வரும் 28 முதல் ஏப்ரல் 16 வரை, மேற்காசியாவில் உள்ள சைப்ரஸ் தீவில் ''கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் (ஆண்கள், பெண் கள்) நடக்க உள்ளது. ஆண்கள் பிரிவில் இந்தி யாவின் பிரக்ஞானந்தா உட்பட 8 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர், உலக சாம்பியன் பட்டத்திற்காக, நடப்பு சாம்பியன், இந்தியாவின் குகேஷை எதிர்த்து களமிறங்கலாம்.கேண்டிடேட்ஸ் தொடரில் இந்தியாவின் அதிக அனுபவம் உள்ளபிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என உலக சாம்பியன் ஆன இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான (20 வயதுக்கு உட்பட்ட) ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 12வது சீசன், பிரிவிலும் வரும் ஏப்.1-18ல் தாய்லாந்தில் ,மொத்தம் 12 அணிகள் மூன்று பிரிவுக ளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முதல் இரு இடம் பெறும் 6 அணிகள், 3வது இடம் பிடித்த சிறந்த 2 அணிகள் சேர்த்து, 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இந்தியா 20 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது. இம்முறை ‘குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும் சி' பிரிவில், 6 முறை கோப்பை வென்ற, ஆசி யாவின் 'நம்பர்-1' அணி, நடப்பு சாம்பியன் ஜப்பான், வலிமையான ஆஸ்திரேலியா, சீன தைபே அணிகள் உள்ளன.இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜப்பானை ஏப்., 2ல் எதிர்கொள்கிறது. அடுத்து ஏப்., 5ல் ஆஸ்திரேலியா, ஏப்., 8ல் சீன தைபேவுடன் மோதுகிறது.