சென்னை, ஐதராபாத் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற சென்னைகேப்டன் ருதுராஜ், 'பேட்டிங்' தேர்வு செய்தார். சென்னை அணி 20 ஓவரில் 180/7 ரன் எடுத்தது. ஐதராபாத் அணி, 19 ஓவரில் 181/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ரோம் நகரில் நடந்த இத்தாலி ஓபன் சர்வதேசடென்னிஸ் போட்டி நேற்று முன்தினம்இரவு ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர்ஜானிக் சினெர் (இத் தாலி), கேஸ்பர் ரூட்டுடன் (நார்வே) மோதினார். சினெர் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ரூட்டை தோற்கடித்து முதல் முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார். இத்தாலி ஓபனை இத்தாலி வீரர் ஒருவர் வெல்வது 1976-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். அவருக்கு ரூ.11% கோடியும், 2-வது இடம் பிடித்த கேஸ்பருக்கு ரூ.6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.இதற்கு முன்புசெர்பியாவின்நோவக்ஜோகோவிச் 2018ம்ஆண்டுமாஸ்டர்ஸ்பட்டத்தைமுழுமையாகவென்றுசாதனை படைத்திருந்தார். இச்சாதனையை நிகழ்த்திய 24 வயதான இளம் வீரர் சினெர் 'இத்தாலி ஓபனை 50 ஆண்டுக்கு பிறகு வென்ற இத்தாலி வீரர் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.
இமாசலம் பிரதேசம் தர்மசாலா மைதானத்தில் நேற்று பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பவுலிங்' தேர்வு செய்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 222/4 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி, 20 ஓவரில் 199/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெற்றது.
டில்லி, ராஜஸ்தான் அணிகள் நேற்று டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், 'பீல்டிங்' தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 193/8 ரன் எடுத்தது. டில்லி அணி, 19.2 ஓவரில் 197/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ரோம் நகரில் களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகதரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் 31 வயது உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும் பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான கோகோ காப்புடன் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்தினார். ஸ்விடோலினா 6-4, 6-7 (3-7), 6-2 என்ற செட் கணக்கில் கோகோ காப்பை வென்று சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்விடோலினாவுக்கு 1,000 தரவரிசை புள்ளியுடன், ரூ.11% கோடி பரிசாக கிடைத்தது. 2-வது இடம் பெற்றகோகோ காப்புக்கு ரூ.6% கோடி கிட்டியது.வெற்றிக்கு பிறகு 'இங்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் இருந்து நிறைய பாடங்களை கற்றேன். இது அடுத்து நடைபெறும் பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு உத்வேகம் அளிக்கும்' என்று ஸ்விடோலினா கூறினார்.
கை, கால் இழந்த உலகின் முதல் இளம் வீராங்கனையான பாயல் நாக் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ந்துள்ளார். பாங்காக்கில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்றார். 8 வயதில் மின்சாரம் தாக்கியதில் கை கால்களை இழந்த பாயல், வாயைக் கொண்டு வரைந்த ஒவியம் 2022-ல் வைரலானது. இதையடுத்து, பாராலிம்பிக் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி பயிற்சியாளர் குல்தீப், பாயலுக்கு பயிற்சியளித்து சாதிக்க வைத்துள்ளார். சர்வதேச அளவில் தங்கம் வென்று, 'Para Archer of the Year 2025' விருதை வென்றுள்ளார்
இந்தியாவின் செஸ் பிரக்ஞானந்தா 'சூப்பர் செஸ் கிளாசிக்' தொடரின் முதல் சுற்றை 'டிரா' செய்தார். 11வது சீசன் 6 தொடர்களாக 'கிராண்ட் செஸ் டூர்' நடக்கிறது. ருமேனியாவின் புக்காரெஸ்ட் நகரில் இதன் 2வது தொடரான 'சூப்பர் செஸ் கிளாசிக்', நடக்கிறது.இந்தியாவின் பிரக்ஞானந்தா உஸ்பெகிஸ்தானின், சின்டாரோவ், ஜெர்மனியின் வின்சன்ட் , கீமர், அமெரிக்காவின் சோவெஸ்லே உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரேசாபிரூஸ்ஜா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 60வது நகர்த்தலில் போட்டியை 'டிரா' செய்தார்.
லக்னோ, வாஜ்பாய் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை, லக்னோ அணிகள் மோதின. . 'டாஸ்' வென்ற லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட், 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணி 20 ஓவரில் 187/5 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி 188/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லீக் போட்டி இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. மும்பை அணிக்கு கேப்டனாக பும்ரா முதன் முறையாக களமிறங்கினார். 'டாஸ்' வென்ற இவர், பீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 200/8 ரன் எடுத்தது. மும்பை அணி 205/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
57-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, கொல்கத்தா அணிகள் ராய்ப்பூரில் நேற்றிரவு மோதியது. 'டாஸ்' ஜெயித்த பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது கொல்கத்தா அணி 20 ஓவரில் 192/4 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி 19.1 ஓவரில் 194/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.