T20 உலக கோப்பை லிக் இச்சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடம் பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் ஜீன் 27-ல் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணிகள் ஜீன் 29-ல் பிரிட்ஜ்டவுனில் நடக்கும் பைனலில் மோதும்.சூப்பர் 8 சுற்றுக்கான பிரிவு 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பிரிவு 2-ல் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டில், தென் ஆப்பிரிக்கா, அணிகள் இடம் பெற்றுள்ளன.
பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
அமெரிக்காவில் போர்ட்லாந்து தடகளம் நடந்தது 5000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியா சார்பில் ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற குல்வீர் சிங் வயது 26 பங்கேற்றார். அமெரிக்க வீரர் ஜேக்கப்ஸ் முதலிடம் பிடித்தார். போட்டி தூரத்தை 13 நிமிடம் 18.92 வினாடி நேரத்தில் கடந்து இரண்டாவது இடம் பிடித்தார் இது புதிய தேசிய சாதனை ஆனது.போர்ட்லாந்து தடகளத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தேசிய சாதனை படைத்தார்.
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. கடைசி, 10வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 2 வீரர், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதினர். இத்தொடரில் இருவரும் ஏற்கனவே மோதிய போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்து இருந்தார். இம்முறை முதலில் கிளாசிக்கல் முறையில் நடந்த போட்டி டிரா ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய ஆர்ம கெடான் டை- பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, போட்டியின் 31 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் நார்வேயின் கார்ல்சன், அமெரிக்காவின் காருணாவை வென்றார்.
பெண்களுக்கான பிரிவில் 101 பேர் பங்கேற்கின்றனர். ஆறாவது சுற்றில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், அஜர்பெய்ஜானின் அயன் அலாவெர்தியேவா மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, போட்டியின் 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 2 தடகள போட்டி நேற்று சென்னையில் நடந்தது. பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா, (57.28 வினாடி) தங்கம் வென்றார், 400 மீட்டர் ஓட்டத்திலும் அசத்திய வித்யா (53.00 வினாடி) இரண்டாவது தங்கம் வென்றார் .தடகளத்தில் இரண்டு தங்கப்பதக்கங்களை வித்யா கைப்பற்றினார்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஓராண்டுக்கு விளையாடப் போகும் கிரிக்கெட் தொடர்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி வீரர்கள் ஜூன் மாதத்தில் துவங்கி, 2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை எந்தெந்த அணிகளுடன் கிரிக்கெட் தொடர்களில் மோதப் போகிறது ஜூன் 5ஆம் தேதி முதல் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளது. அதற்கு அடுத்து ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணியுடன் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஜூலை கடைசி வாரம் மற்றும் ஆகஸ்ட் துவக்கத்தில் இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் மோத உள்ளது.செப்டம்பர் மாதத்தில் வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோத உள்ளது. அக்டோபரில் நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளது.நவம்பர் கடைசி வாரம் முதல் ஜனவரி இரண்டாவது வாரம் வரை ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முக்கியமான தொடரில் பங்கேற்க உள்ளது ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி துவக்கத்தில் இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் மோத உள்ளது. மார்ச் மாதத்தில் 2025 சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த கிரிக்கெட் தொடர்கள் எல்லாம் ஆடி முடிக்கும்போது சரியாக 2025 ஐபிஎல் தொடர் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்திய அணி ஓய்வின்றி அடுத்த 10 மாதங்களுக்கு தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது
மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக் கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வரும் வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் எச். எஸ்.பிரனாய் மற்றும் லக்ஷயா சென். ஸ்ரீகாந்த், பிரியன்ஷூ ரஜாவத் இரட் டையர் நம்பர் ஒன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி உள்ளிட்ட இந்தியர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.கடந்த வாரம் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இறுதி சுற்றில் தோல்வி அடைந்த சிந்து அதற்கு பரிகாரம் தேடும் வகையில் ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிந்து முதல் சுற்றில் வினே ஹோஜ்மார்க்கிஜார்ஸ்பெல்டை (டென் மார்க்) சந்திக்கிறார். இதே போல் இந்திய இளம் புயல் லக்ஷயா சென் உலகின் நம்பர் ஒன் வீரரான விக்டர் ஆக்சல்செ னுடன் (டென்மார்க்) மல்லுக்கட்டுகிறார்.
26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற கொல்கத்தா, ஹதராபாத், அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் அணி 113/0, ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 114/2, ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக MITCHELL STARC தேர்ந்தெடுக்கப்பட்டார்.2024 IPL 17-வது போட்டியில் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
24-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஹதராபாத், ராஜஸ்தான், அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் 175/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 139/7 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 38 ரன்கள் வித்தியாசத்தில் ஹதராபாத் அணி வெற்றி பெற்று, Final, தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகனாக SHAHBAZ AHMED தேர்ந்தெடுக்கப்பட்டார்.