குஜராத் மாநிலம் காந்திநகரில் ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 30 நாடுகளைசேர்ந்த காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி சுற்றாக விளங்கும் 178 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 3-வது நாளானநேற்று நடந்த பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந் திய வீராங்கனைஞானேஸ்வரி யாதவ் 'ஸ்னாட்ச்' முறையில் 88 கிலோவும், 'கிளீன் அண்ட் 3 ஜெர்க் முறையில் 106 கிலோவும் என மொத்தம் 194 கிலோ எடை தூக்கினார். அவர் ஸ்னாட்ச்முறையில் வெள்ளிப்பதக்கமும், ஒட் டுமொத்தத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார். தொடக்க நாளில் இந்திய வீராங்கனை ககன் கோகம் கோஹர் (48கிலோ) ஒரு வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். சீனாவின் ஜின்லான் ஜாவ் 'ஸ்னாட்ச்' முறையில் 95 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 121 கிலோவும் என மொத்தம் 216 கிலோ எடை 1 தூக்கி தங்கப்பதக்கத்தைவென்றார். வியட்நாம் வீராங் கனை ஹோய்ஹூயோங்'ஸ்னாட்ச் ‘ஸ்னாட்ச் முறையில் 87கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 108 கிலோவும் எனமொத்தம் 195 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்த போட்டி தொடரில் இந்தியா இதுவரை 3 பதக்கம் வென்றுள்ளது..
56-வது லீக் ஆட்டத்தில் குஜராத், ஐதராபாத் அணிகள் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு மோதின. 'டாஸ்'ஜெயித்தஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது, 20 ஓவர்களில் குஜராத் அணி 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது, 14.5 ஓவர்களில் ஐதராபாத் அணியின் விக்கெட்டுகள் மளமள வென்று 86 ரன்னில் சரிந்தன. குஜராத் அணி 82ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தர்மசாலாவில் நேற்று இரவு நடந்த 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ,55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப், டெல்லி அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது, 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. டெல்லி அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் இந்தியன்தடகள சீரிஸ்-6 போட்டி பெண்களுக்கான குண்டு எறிதலில், தமிழக வீராங்கனை கிருஷ்ணாஜெயசங்கர் மேனன் 16.96 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். உத்தர பிரதேச வீராங்கனை விதி 15.77 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கமும், அரியானா வீராங்கனை அன்ஷூ 15.52 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர். வட்டு எறிதலில் அரியானாவின் நந்தினி ராணி (58.82 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.கிருஷ்ணா (53.37 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் வென்றார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்று, ஆசிய பளுதூக்குதல் சாம்பியன் ஷிப்போட்டி தொடங்கியது. 17-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த 179 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் . பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் முதல் நாளில் இந்திய வீராங்கனை கோமல் கோஹர் மொத்தம் 177 கிலோ எடை தூக்கி (ஸ்னாட்ச்-78, கிளீன் அண்ட் ஜெர்க் 99) வெண்கலப்பதக்கம் பெற்றார். சீன தைபேயின் ஷூயாங் யி சென் (193 கிலோ) தங்கப்பதக்கமும், பாங் வான்லிங் (192 கிலோ) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.
லண்டன் மாரத்தானில் கென்ய வீரர் சபாஸ்டியன் சாவே புதிய உலக சாதனை.2 மணி நேரம் 35 வினாடிகளில் கடந்ததே முந்தைய சாதனையாக இருந்த நிலையில், 42 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 59 நிமிடங்களில் எட்டி வரலாறு படைத்தார்.
சென்னை, லக்னோ அணிகள் சேப்பாக்கத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ், 'பவுலிங்' தேர்வு செய்தார். லக்னோ அணி 20 ஓவரில் 203/8 ரன் எடுத்தது, சென்னை அணி 19.2 ஓவரில் 208/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு, மும்பை அணிகள் நேற்று, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதர், 'பீல்டிங்' தேர்வு செய்தார். மும்பை அணி 20 ஓவ ரில் 166/7 ரன் எடுத்தது. பெங்களூரு அணி 20 ஓவரில் 167/8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கொல்கத்தா, டெல்லி அணிகள்நேற்று, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில், மோதின. 'டாஸ்' வென்ற கொல்கட்டா கேப்டன் ரஹானே, 'பவுலிங்' தேர்வு செய்தார். டில்லி அணி 20 ஓவரில் 142/8 ரன் எடுத்தது. கொல்கத்தா அணி 14.2 ஓவரில் 147/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான, சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் தொடர், சுலோவேனியாவில் லாஸ்கோ நகரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சோனல்பென், தாய்லாந்தின்இடானனை எதிர் கொண்டார்.முதல்செட்டை என கைப்பற்றிய 11-3 சோனல்பென்தொடர்ந்து, விளையாடி, ஐந்தாவது, கடைசி செட்டில் இவர், 12-14 என ,முடிவில் சோனல்பென் 2–3 என்ற கணக்கில் தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.