சர்வதேச மல்யுத்த ஓபன் 'ரேங்கிங்' தொடர் குரோஷியாவின் ஜாக் ரெப் நகரில்நேற்று ஆண்களுக்கான பிரீஸ்டைல் போட்டிகள் நடந்தன. இந்தியாவின் சுஜீத், பிரான்சின் காம்ஜத்தை 65 கிலோ பிரிவில் காலிறுதியில் 10-0 என வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில் சுஜீத், அமெரிக்காவின் ஜோசப் கிறிஸ்டோபர் மோதினர். சுஜீத் 11-0 என வென்று பைனலுக்கு முன்னேறினார்.பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அமன் ஷெராவத், 61 கிலோ பிரிவில் பங்கேற்றார். இதில் 'ரவுண்டு ராபின்' முறையில் போட்டி நடந்தன. முதல் போட் டியில் தோற்ற அமன், அடுத்த போட்டியில் ஈரானின் ரேஜாவை 12-2 என வென்றார்.
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் ஆஸ்திரேலியாவில்,, 2026, மார்ச் 1-26ல் (12 அணிகள்) நடக்கவுள்ளது.இந்திய அணி தகுதிச்சுற்றில், முதன் முறையாக தகுதி பெற்று , முதல் போட்டியில் வியட் நாமை (மார்ச் 4, இடம் பெர்த்) சந்திக்க உள்ளது. தற்போது, இத்தொடருக்கு தயாராகும் வகையில் துருக்கி சென்றுள்ள இந்திய பெண்கள் அணி நட்பு கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளது. முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இந்திய அணி இரண்டாவது போட்டியில் ரஷ்யாவின் ஜிவெஸ்டா பெர்ம் அணியை சந்திக்க உள்ளது.
சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில், 'ஸ்டார் கன்டெண்டர்' தொடர் 2021 முதல் நடத்தப்படுகிறது. இத்தொடர் 2023, 2024 ஆண்டு கோவாவில் இருமுறை நடந்தது. முதன் முறையாக கடந்த ஆண்டு (2025) சென்னையில் நடந்தது.இரண்டாவது ஆண்டாக, 'ஸ்டார் கன்டெண்டர்' தொடர், சென்னையில் வரும் பிப் 10-15 ல் நடக்க உள்ளது. மொத்த பரிசுத் தொகை, ரூ.2.90 கோடி. இந்திய சார்பில் ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில், 23 பேர், பிரதான சுற்றில் பங்கேற்கின்றனர்.
பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் இந்தியாவில், நடக் கிறது.லீக் சுற்றில் பெங்களூரு அணி, 8ல் 6 வெற்றி பெற்ற பட்டியலில் முதலிடம் பெற்று, நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. வதோதராவில் நேற்று நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் புள்ளிப் பட்டியலில் 2, 3வது இடம் பிடித்த குஜராத், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஜெமிமா 'பீல்டிங்' தேர்வு செய்தார். குஜராத் அணி 20 ஓவரில் 168/7 ரன் எடுத்தது. டில்லி அணி 15.4 ஓவரில் 169/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. பெங்களூரு, டில்லி அணிகள் நாளை நடக்கும் பைனலில், மோத உள்ளன.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை(50 ஓவர்)16வது சீசன் ஜிம்பாப்வே, நமீபியாவில்நடக்கிறது. நேற்று புலவாயோவில் நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 50 ஓவரில் 277/7 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 250 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.
இத்தாலியின் மிலன் கோர் டினோவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி (பிப்ரவரி 6-22), 22,000 சதுர கி.மீ., பரப்பளவில் நடக்க உள்ளது. பனிச்சறுக்கு, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்."ஒலிம்பிக் போட்டிக்கானதிட்டங்களில் விரைவில் மாற்றங்களை எதிர் பார்க்கலாம். குளிர்கால ஒலிம்பிக், இளம் தலைமுறைக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்," என்று,சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் கிறிஸ்டி கவன்ட்ரி கூ றினார்.
டாடா ஸ்டீல் செஸ் தொடரின்88வது சீசன் நெதர்லாந்தில், மாஸ்டர்ஸ் பிரிவு13வது சுற்றில், இந்தியாவின் குகேஷ்(வெள்ளை), ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் (கருப்பு) மோதினர். இப் போட்டி 57வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.நெதர்லாந்தின் அனிஷ் கிரி, சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவ், இந்தியாவின் குகேஷ், தலா 6.5 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்தனர். பிரக்ஞானந்தா (5.5) 11வது இடம் பிடித்தார். அரவிந்த் சிதம்பரம், அர்ஜுன் தலா 4.5 புள்ளிகளுடன் 12வது இடத்தை பிடித்தனர்.
புரோ மல்யுத்த லீக்5வது சீசன் இந்தியாவில் நடந்தது.6 அணிகள் பங்கேற்றன.உ.பி.,யில் உள்ள நொய்டாவில் நடந்த பைனலில் ஹரியானா தண்டர்ஸ், டில்லி டங்கல் அணிகள் மோதின.டில்லி அணி, முதல்7 போட்டி முடிவில்4ல் வென்று ஹரியானாவை(3) முந்தியது.8வது போட்டியில் ஹரியானா வெற்றி பெற, ஸ்கோர் 4-4 என ஆனது. முடிவில் ஹரியானா 5-4 என ' வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. ரூ.1.5 கோடி பரிசு பெற்றது.
'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டனில் பெண்களுக்கான பைனலில், உலகின் 'நம்பர் -31' இந்தியாவின் அனாஹத் சிங்17. உலகின்'நம்பர்-10' இங்கிலாந்தின் ஜார்ஜினா கென்னடி28,மோதினர்.அனாஹத்3,0(1210,11-,5,117) என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டில்லியை சேர்ந்த அனாஹத், சீனியர் பிரிவில் தனது 15வது பட்டம் வென்றார்.
கடந்த2025ல் இந்திய ஹாக்கி அணி, சிறப்பாக செயல் படவில்லை. புரோ லீக் தொடரில்16 போட்டியில்10 புள்ளி மட்டும் பெற்று, வெளியேறியது. உலக கோப்பைக்கு(வரும் ஆக.14,30, பெல்ஜியம், நெதர்லாந்து) நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.ஐதராபாத்தில் நடக்க உள்ள உலக கோப்பை தகுதிச்சுற்றில்,புதிய பயிற்சியாளர் மரிஜ்னே தலைமையில்(மார்ச்8,14) பங்கேற்க உள்ளது.இதில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் உலக கோப்பை தொடருக்கு 'டாப்-3' இடம் பெறும் அணிகள் முன்னேறும். விளையாட்டில் ஏற்ற, இறக்கம் சகஜம் தான். கடந்த ஆண்டு எங்களுக்கு மோசமாக அமைந்தது. வீராங்கனைகளிடம் போதிய உடற்தகுதி ('பிட்னஸ்') இல்லாதது தான் முக்கிய காரணம். 'பிட்னஸ்' சரியாக இருந்ததால் தான், டோக்கியோ ஒலிம்பிக்கில் 4வது இடம் பெற்றோம்.மீண்டும் தற்போது சறுக்கி விட்டோம். உலக கோப்பை தகுதிச்சுற்று மிக முக்கியம் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். இதில் வெற்றி பெற்று, உலக கோப்பைக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தவிர அடுத்து வரும் ஆசிய விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம் என்று கோல்கீப்பர் சவிதா 35, கூறினார்.