சர்வ தேச தடகள போட்டி போலந்தில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் அன்னு ராணி 32, பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 60.95 மீ.,துாரம் எறிந்தார். அடுத்த வாய்ப்பில் அதிகபட்சம் 62.59 மீ., தூரம் எறிந்தார். முதலிடம் (62.59) பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். துருக்கியின் எடா (58.36), ஆஸ்திரேலியாவின் லியான்னா (58.24) அடுத்த இரு இடம் பெற்றனர். கடந்த 2023 ஆசிய விளையாட்டில் 62.92 மீ.,துாரம் எறிந்து, தங்கம் வென்றார், அன்னு ராணி. தற்போது சிறந்த செயல் பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா,2 நிமிடம்,02.95 வினாடி நேரத்தில் வந்து, மூன்றாவது இடம் பிடித்தார். 400 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜிஸ்னா மாத்யூ(54.12 வினாடி) 6வது இடம் பெற்றார். ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தென்னரசு (45.82, தமிழகம்), 5வது இடம் பெற்றார். ஆமோஜ் ஜெக்கப் (46.18), ராஜேஷ் ரமேஷ் (46.94), 8, 12 வது இடம் பிடித்தனர்
சென்னையில் 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ்(10), சாலஞ்சர்ஸ்(10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர்.மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரி கைசி, விதித் குஜ்ராத்தி, நிஹால் சரின், கார்த்திகேயன் முரளி களமிறங்கினர். நேற்று முதல் சுற்றில் அர்ஜுன், அமெரிக்காவின் அவாண்டர் லியாங்கை சந்தித்தார். அர்ஜுன்,49 வது நகர்த்தலில் அர்ஜுன் வெற்றி பெற்றார்.வைஷாலி, ஹரிகா இரு வீராங்கனைகள்,8 வீரர்கள் எனசாலஞ்சர்ஸ் பிரிவில் 10 இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் அனுபவ ஹரிகா 34, திப்தயன் கோஷை 26,சந்தித்தார். ஹரிகா,44வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். பிரனேஷ், ஆர்யன் சோப்ராவை வென்றார். லியான் மெடோன்கா, வீழ்த்தினார். வைஷாலி-இனியன், ஹர்ஷவர்தனை அபிமன்யு- அதிபன் பாஸ்கரன் மோதிய போட்டி 'டிரா' ஆகின.
'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் ஒவ்வொரு ஆண்டும்சென்னையில்நடத்தப்படுகிறது. வரும் 15ம் தேதி வரை நடக்கும் இத்தொடரில்மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்க உள்ளனர்இந்தியாவின்முன்னணிவீரர்கள் மாஸ்டர்ஸ்பிரிவில்அர்ஜுன்எரிகைசி, விதித்குஜ்ராத்தி, நிஹால்சரின், நெதர்லாந்தின் அனிஷ்கிரி, ஜோர்டான் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், இந்தியாவின் பிரனவ் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் திறமை வெளிப்படுத்தும் வகையில், இந்தியாவில் 'சாலஞ்சர்' பிரிவில் போட்டி நடக்க உள்ளன. கார்த்திகேயன் முரளி, லியோன் மென் டோன்கா, அபிமன்யு, ஆர் யன், அதிபன் பாஸ்கரன் இனியன், பிரனேஷ் என முன்னணி வீரர்களுடன், இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா களமிறங்குகின்றனர்.
இங்கிலாந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய அணியினர் தாயகம் திரும்பினர். இந்திய வேகப்பந்துவீச் சாளர் முகமது சிராஜ் 31, பீல்டிங் பயிற்சியாளர் திலிப் உடன் லண்டனில் இருந்து மும்பை வந்தார். அங்கிருந்து, தனது சொந்த ஊரான ஐதராபாத் சென்றார் சிராஜ். ஐதராபாத் விமான நிலையத்தில் இந்திய ரசிகர்கள் சிராஜுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்டில் இந்தியாவின் முகமது சிராஜ், இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் (4+5) சாய்த்து, 9 ஆட்ட நாயகன் விருது வென்றார்.இத்தொடரில் 5 போட்டியிலும் விளையாடிய சிராஜ், 1113 பந்துகள், 185.3 ஓவர் வீசி, 23 விக்கெட் கைப்பற்றினார் இதனிடையே டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரர்களுக்கான ஐ.சி.சி., தரவரிசை பவுலர்கள் பட்டியலில் (674 புள்ளி), 27வது இடத்தில் இருந்து முதன் முறையாக 15வது இடத்துக்கு முன்னேறினார் இந்தியாவின் சிராஜ்.
ஆசிய கோப்பை (தாய்லாந்து), உலக கோப்பை (போலந்து) கால்பந்து பெண்களுக்கான(20 வயதுக்குட்பட்ட) தொடர்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்று நேற்று மியான்மரில் துவங்கியது. மொத்தம் 33 அணிகள் 8 பிரிவுகளாகபிரிக்கப்பட்டுள்ளன.இந்தியபெண்கள்அணி 'டி' பிரிவில், மியான்மர், இந்தோனேஷியா, துர்க் மெனிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் 8 அணிகள், புள்ளிகளுக்கு ஏற்ப, தரவ ரிசையில் 'டாப்-3' இடம் பெறும் 3 அணிகள், பிரதான தொடருக்கு தகுதி பெறும். நேற்று, இந்திய அணி தனது முதல் போட்டியில் இந்தோனேஷியாவை சந்தித்தது. கடந்த முறை 6-0 என வென்ற இந்தியா, இம்முறை கோல் அடிக்க திணறியது. கடைசி வரை போராடிய போதும். இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. முடிவில் போட்டி என 'டிரா' ஆனது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன.பெண்கள் ஒற்றையரில் இத்தொடரின் ‘நம்பர்–5’, உலகத் தரவரிசையில் 126வது இடத்திலுள்ள இந்தியாவின் தான்வி கன்னா, 99 வது இடத்தி லுள்ள, இத்தொடரின் ‘நம்பர்-2' வீராங்கனை, எகிப்தின் மென்னா வாலித்தை எதிர்கொண்டார்.இதில் சிறப்பாக செயல்பட்ட தான்வி, 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் 114வது இடத்திலுள்ள மலேசிய வீராங்கனை கோ ஜி ஜூவானை சந்திக்க உள்ளார்.இந்தியாவின் அஞ்சலி, மலேசியாவின் கோ ஜி ஜுவானிடம் 1-3 மற்றொரு காலிறுதியில் என தோல்வியடைந்தார்.இந்தியாவின் பூஜா ஆர்த்தி, எகிப்தின் நுார் ககபியிடம் 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சுராஜ் குமார், திவாகர் சிங், ஆர்யவீர், சந்தேஷ் ரிவிகுமார், சுற்றில் இரண்டாவது முறை தோல்வியடைந்தனர்.
புதிய தரவரிசை பட்டியல் சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் வெளியானது. கலப்பு இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ் ஜோடி,2065 புள்ளி பெற்று 3 இடம் முன்னேறி,7 வது இடம் பெற்றது.இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ் ஜோடி,2205 புள்ளியுடன் 3 இடம் முன்னேறிஆண்கள் இரட்டையரில்,7வது இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் பிரேசிலில் நடந்த வேர்ல்டு கன்டெண்டர் தொடரில் இரு பிரிவிலும் இந்திய ஜோடி பைனலுக்கு முன்னேறின. உலகத் தரவரிசையில் எப்போதும் இல்லாத வகையில் இந்த முன்னேற்றம் கிடைத்தது. அதிகபட்சம் 43வது இடம்ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் மானவ் தக்கார், பிடித்தார்.இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா,10 இடம் பின் தங்கி,பெண்கள் ஒற்றையரில் 47வது இடத்தில் உள்ளார். தரவரிசையில் சிறந்த இடம் பெற்ற இந்திய வீராங்கனையாக உள்ளார். மற்ற இந்திய வீராங்கனைகள் மணிகா பத்ரா (52), யாஷஸ்வினி (76) பின் தங்கினர்.
துாரந்த் கோப்பை இந்தியாவின் பாரம்பரிய கால்பந்து தொடரின் 134 வது சீசன் தற்போது நடக்கிறது. 24 அணிகள், 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் மொத்தம் முறையில் போட்டி நடக்கின்றன.ஜாம்ஷெட்பூரில்நேற்று நடந்த 'சி' பிரிவு லீக் இந்தியன் போட்டியில்ஆர்மி அணி, நேபாளத்தை சேர்ந்த திரிபுவன் ஆர்மி அணிகள் மோதின. போட்டியின் 27வது நிமிடத்தில் கிறிஸ்டோபர் கமேய், ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்தியன் ஆர்மி அணி 1/0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'சி' பிரிவில் 3 புள்ளி யுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் ஜாம்ஷெட்பூர் (6 புள்ளி) அணி உள்ளது.
AUGUST 15ம் தேதி வரை நடக்கும் இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் முன்னணி வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, விதிக் குஜ்ராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜோர்டான் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் உட்பட 10 பேர் மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்கின்றனர். சர்வதேச தரவரிசையில் 2776 புள்ளியுடன், 6வது இடத்திலுள்ள அர்ஜுன், கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இதில் சாதிக்கும் வீரருக்கு ரூ. 25 லட்சம், 2, 3வது இடம் பெற்றால் ரூ. 15 லட்சம், ரூ. 10 லட்சம் பரிசு கிடைக்கும். தவிர, சாம்பியன் வீரர், 'பிடே' தரவரிசையில் 24.5 புள்ளி பெறலாம். இதனால், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக சாம்பியன் ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) வாய்ப்பை பங்கேற்கும் அதிகரிக்கலாம்.,'சாலஞ்சர்' பிரிவில் இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் திறமை வெளிப்படுத்தும்வகையில் போட்டி நடக்க உள்ளன. இதில் கார்த்திகேயன் முரளி, லியோன் மென்யன், அபிமன்யு, ஆர் இனியன், டோன்கா, பிரனேஷ் அதிபன் பாஸ்கரன் என முன்னணி வீரர்களுடன், இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா களமிறங்க உள்ளனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன் சச்சின் டிராபி) இங்கிலாந்து சென்ற இந்திய அணி பங்கேற்ற,ஐந்தாவது டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன்,. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 396 எடுத்தது. இங்கிலாந்துக்கு 374 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 367 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. 57 நிமிடங்களில் இங்கிலாந்தின் எஞ்சிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணி வெற்றியை 2/2 என சமன் செய்தனர் . கோப்பையைஇரு அணிகளும் பகிர்ந்து கொண்டனர். மொத்தம் 9 விக்கெட்(4+5)வீழ்த்திய சிராஜ், ஆட்டநாயகன் விருதை வென்றார். இத்தொடரில் அதிக ரன்குவித்த பேட்டர் வரிசையில் இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலிடம் பிடித்தார். இவர், 5 டெஸ்டில், 4 சதம் உட்பட 754 ரன்எடுத்தார். 'வேகத்தில்' மிரட்டிய முகமது சிராஜ், வெற்றிக்கு கைகொடுத்தார்.