25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


விளையாட்டு (SPORTS)

Aug 18, 2025

பெகா ஓபன் ஸ்குவாஷ் தொடரில் அனாஹத் சிங் 2வது இடம்

ஆஸ்திரேலியாவில் நடந்த பெகா ஓபன் ஸ்குவாஷ் தொடர் ,பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங் 17, எகிப்தின் ஹபிபா ஹனி மோதினர்.அரையிறுதி போட்டியின் போது கணுக்காலில் காயமடைந்த அனாஹத், முதல் செட்டை 11-9 என வென்றார். அடுத்த இரு செட்களை 5-11, 8-11 என இழந்த அனா ஹத், 4வது செட்டில் 4-10 என பின்தங்கி இருந்த போது காயத்தால் பாதியில் விலகினார்.எகிப்து வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். உலக தரவரிசையில் 53வது இடத்தில் உள்ள அனாஹத், 2வது இடத்துடன் ஆறுதல் அடைந்தார்.

Aug 18, 2025

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 'ஏ' பெண்கள் அணி, கோப்பை வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா சென்ற இந்தியா 'ஏ' பெண்கள் அணி, பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. நேற்று, பிரிஸ்பேனில் 3வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்தியா 'ஏ' அணிக்கு 47.4 ஓவரில் 216 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா 'ஏ' அணி 27.5 ஓவரில் 222/1 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.  இந்தியா 'ஏ' அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

Aug 18, 2025

சர்வதேச பாட்மின்டன் தொடரில் தான்யா ஹேம்நாத் சாம்பியன் .

சர்வதேச பாட்மின்டன் தொடர் வடக்கு மரியானா தீவுகளில் உள்ள சாய்பன் நகரில் நடந்தது. உலக பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் சோதனை முயற்சியாக, 21க்குப் பதில், 15 புள்ளி கொண்ட செட் முறை அறிமுகம் செய்யப்பட்டது.பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் தான்யா ஹேம்நாத், அரையிறுதியில் ஜப்பானின் ரிரினா ஹிராமோட்டோவை வென்றார்.பைனலில் தான்யா 21, மற்றொரு ஜப்பான் வீராங்கனை கனே சகாயை எதிர்கொண்டார். முதல் செட்டை 15-10 கைப்பற்றி ,அடுத்த செட்டையும் 15-8 என எளிதாக கைப்பற்றினார்.  முடிவில் தான்யா 15-10, 15-8  என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பை வென்றார்.  

Aug 18, 2025

ஜெர்மன் சூப்பர் கோப்பை கால்பந்து தொட ரில் பேயர்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

ஜெர்மன் சூப்பர் கோப்பை கால் பந்து 16வது சீசனுக்கான பைனல் ஜெர்மனியின் ஸ்டட் கர்ட் நகரில் நடந்தது. இதில் ஸ்டட்கர்ட், பேயர்ன் முனிக் அணிகள் மோதின.துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பேயர்ன் முனிக் அணிக்கு 18வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். பேயர்ன் முனிக் அணிக்கு 77வது நிமிடத்தில் லுாயிஸ் டியாஸ் ஒரு கோல் அடித்தார். ஸ்டட் கர்ட் அணிக்கு 'ஸ்டாப்  பேஜ்' நேரத்தில் (90+3வது நிமிடம்) ஜேமி லெவெ லிங் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் பேயர்ன் முனிக் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 11வது முறையாக கோப்பை வென்றது. 

Aug 16, 2025

வாழ்வின் பெருமை மிக்க தருணமாக இந்திய ஆண்கள் அணி கேப்டன் பிரதிக் வைகர், பெண்கள் அணியின் நிர்மலாசுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்திய 'கோ கோ' நட்சத்திரங்கள் கருதுகின்றனர்.

 டில்லியில், 'கோ கோ' உலக கோப்பை முதல்சீசன் சமீபத்தில் இந்திய ஆண் கள், பெண்கள் அணியினர் நுாறு சதவீத வெற்றியுடன் உலக கோப்பை வென்று வரலாறு படைத்தனர். இவர்களை கவுரவிக்கும் விதமாக, இன்று டில்லியில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை சந்தித்தனர்.  இந்தியாவில் பிறந்த 'கோ கோ' விளையாட்டு, பள்ளி முதல் கல்லுாரி வரை ஆர்வமாக விளையா டப்படுகிறது. ஆசிய (2026), விளையாட்டு ஒலிம்பிக்கில் (2036) 'கோ  கோ' சேர்க்கப்பட வேண்டுமென மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்மன்சுக்  மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.இந்திய ஆண்கள் அணி கேப்டன் பிரதிக் வைகர் கூறுகையில், "டில்லி செங்கோட்டையில் இன்று நடக்கும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றது வாழ்வின் பெருமைமிக்க தருணமாக கருதுகிறேன். எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது,”என்றார். இந்திய பெண்கள் அணியின் நிர்மலா கூறுகையில் குடியரசு சுதந்திர தின கொண்டாட்டங்களை 'டிவி'யில் தான் பார்த்துள்ளேன். சிறப்பான உணர்வைதந்தது முதல் முறையாக சக வீராங்கனைகளுடன் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டது என்றார்.  

Aug 16, 2025

உலகபாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ் தொடரில் பவினா ஜோடி வெண்கலம் .

உலகபாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில்,. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் பவினா பென் படேல், தங்கப்பதக்கம் கைப்பற்றி இருந்தார். அடுத்து இரட்டையர் பிரிவு போட்டிகள் நடந்தன. கலப்பு இரட்டையரில் இந்தியாவின் பவினா பென், சுபம் வாத்வா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.இதில் இந்திய ஜோடி தென் கொரியாவின் கிம் ஜங் கில், லீ மில் கியு ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 12-10 என போராடி வென்ற இந்திய ஜோடி, (2-11, 3-11, 3-11) .முடிவில் இந்திய ஜோடி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, வெண்கலப் பதக்கம் பெற்றது.பவினா வென்ற இரண்டாவது பதக்கம். 

Aug 16, 2025

அனாஹத் சிங். ஆஸ்திரேலிய ஸ்குவாஷ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார்.

'பெகா' ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் ஆஸ்திரேலியாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங், நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்றார். ஆஸ்திரேலியாவின் கார்டுவெல் சாராவை சந்தித்து ,அனாஹத், சிங்  3-0 (11-3, 11-3, 11-4) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

Aug 16, 2025

செஸ் கிராண்ட் செஸ் ,நான்காவது தொடரில், குகேஷ், 4 வது இடம் பிடித்தார்.

 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) கிராண்ட் செஸ் தொடரின், ,நான்காவது தொடர் அமெரிக்காவின் மிசவுரியில் நடக்கிறது. முதலில் ரேபிட் முறையில் போட்டி நடந்தன. நேற்று நடந்த 7வது சுற்றில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின், லெய்னியரிடம் தோல்வியடைந்தார்.குகேஷ், 8வது சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லேயுடன் மோதிவிளையாடி45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 9வது, கடைசி சுற்றில் அமெரிக்காவின் பேபியானோவை சந்தித்தார்.இம்முறை குகேஷ், 89 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.ரேபிட் பிரிவில் நடந்த 9 சுற்று முடிவில் 10.0 புள்ளி (4 வெற்றி, 2 'டிரா', 3 தோல்வி) பெற்ற குகேஷ், 4 வது இடம் பிடித்தார். 

Aug 16, 2025

சாலஞ்சர்ஸ் பிரிவு 9வது சுற்றில்சென்னை செஸ் தொடரில் பிரனேஷ், வின்சென்ட் 'சாம்பியன்'

சென்னை செஸ் தொடரில் இந்தியாவின் பிரனேஷ் (சாலஞ் சர்ஸ் பிரிவு), ஜெர்மனியின் வின் சென்ட் கீமர் (மாஸ்டர்ஸ்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.சென்னையில், கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்,மாஸ்டர்ஸ் பிரிவு 9வது சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் ரே ராப்சன் மோதினர். கீமர், 41வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு 9வது சுற்றில் இந்தியாவின் நிஹால் சரின் (வெள்ளை), 55வது நகர்த்தலில் சகவீரர் பிரனவை தோற்கடித்தார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (வெள்ளை), முரளி கார்த்திகேயன் (கருப்பு ) மோதிய மற்றொரு 9வது சுற்றுப் போட்டி 49வது நகர்த்த லில் 'டிரா' ஆனது.இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அமெரிக்காவின அவோன்டர் லியாங் மோதிய போட்டியும் 'டிரா' ஆனது.நெதர்லாந்தின் அனிஷ் கிரி, சக வீரர் ஜோர்டான் வான் பாரீஸ்ட்டை வீழ்த்தினார்.ஒன்பது சுற்றுகளின் முடிவில் 7.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த வின்சென்ட் கீமர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அடுத்த நான்கு இடங்களை அனிஷ் கிரி (5.0 புள்ளி), அர்ஜுன் (5.0), முரளி   கார்த்திகேயன் (5.0), நிஹால் சரின் (4.5) உறுதி செய்தனர்.இந்தியாவின் பிரனேஷ் ,ஹர்ஷ்வர்தன்  சாலஞ்சர்ஸ் பிரிவு 9வது சுற்றில் மோதினர். இதில் பிரனேஷ் 46வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்ற 9வது சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் ஆர்யன் சோப்ரா (எதிர்: ஹரிகா), திப்தயன் கோஷ் (எதிர்: வைஷாலி), இனியன் (எதிர்: அபி மன்யு புரானிக்), அதிபன் (எதிர்: லியோன் மென்டோன்கா) வெற்றி பெற்றனர்.ஒன்பது சுற்றின் முடிவில், 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பிரனேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். 

Aug 16, 2025

ஆனந்த் குமார், உலக விளையாட்டு 'ஸ்கேட்டிங்கில்'வெண்கலம் வென்றார் .

உலகவிளையாட்டு 12வதுசீசன்சீனாவில், இந்தியாசார்பில் 17பேர்(10வீரர்,7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட்பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர். 'இன்லைன் ஸ்பீடு ஸ்கேட்டிங்' ஆண்களுக்கான 1000 மீ., 'ஸ்பிரின்ட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார், ஆர்யன்பால் சிங்குமன் அரையிறுதிக்குள் நுழைந்தனர். இதில் 2வது இடம் பிடித்த ஆனந்தகுமார், பைனலுக்கு முன்னேறினார். ஆர்யன் குமார் 7வது இடம் பிடித்து வெளியேறினார்.அடுத்து நடந்த பைனலில் இலக்கை ஒரு நிமிடம், 22.482 வினாடியில் கடந்த ஆனந்த்குமார் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். உலக விளையாட்டில், ஒரு சீசனில் இந்தியாவுக்கு இம்முறை அதிக பதக்கம் (3) கிடைத்துள்ளது.. உலக விளையாட்டு அரங்கில் இதுவரை இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்துள்ளது.

1 2 ... 40 41 42 43 44 45 46 ... 96 97

AD's



More News