25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


ரவா இடியாப்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரவா இடியாப்பம்.

தேவையான பொருட்கள்:

வறுத்த அல்லது வறுக்காத வெள்ளை ரவை - 2கப்,

தண்ணீர் - 4கப்,

உப்பு தேவையான அளவு, 

தேங்காய் துருவல் – தேவையானஅளவு, 

சர்க்கரை – தேவையானஅளவு,

 இரண்டரை ஸ்பூன் எண்ணெய் ,

செய்முறை :

1கப் ரவைக்கு2கப் தண்ணீர் தான் அளவு.கடாயில்4கப் தண்ணீர் சேர்த்து,அதனுடன் உப்பு மற்றும்2ஸ்பூன் எண்ணெய் கலந்து கொதிக்க விடவும்.கொதிக்க ஆரம்பித்ததும்,சிறு தீக்கு மாற்றி,ஒரு கையால் ரவை சேர்த்து,மறு கையால் கிளறவும்.

சில நிமிடங்களில் ரவை தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும்.2-3 நிமிடங்களில் நன்றாக வெந்து,கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும்.இனி,அடுப்பை அணைத்து,மூடி போட்டு 3 நிமிடங்களுக்கு வைக்கவும்.

பின் கையில்1/2ஸ்பூன் எண்ணெய் தடவி1 நிமிடத்திற்கு மாவை(கையால் அல்லது கரண்டியால் அழுத்திவிட்டு)நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

உருட்டிய உருண்டைகளை அதே கடாயில்(சூடாக இருக்கும்) போட்டு மூடி வைக்கவும்.ஆறும் முன் இடியாப்ப அச்சில் போட்டு பிழியவும்.ஆறினால், பிழிய கடினமாகும் வாய்ப்பு உள்ளது.

இட்லிகுக்கரில்2டம்ளர்தண்ணீர்விட்டுகொதிக்கவிடும்நேரத்தில்,உருண்டைகளை அச்சில் விட்டுப் பிழியவும்.பின் குக்கரில் வைத்து 7-10 நிமிடங்கள் வேக வைக்கவும்.ஆறிய பின் எடுத்தால் பூப்பூவாக வரும்.சுவையான, மெது மெதுவான ரவா இடியப்பம் ரெடி.எப்பொழுதும் போல், தேங்காய் துருவல் மற்றும் சர்கரை அல்லது தேங்காய்ப் பால் கலந்து சாப்பிடலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News