கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடர் மூன்றாவது சீசன் சென்னையில் இன்று துவங்குகிறது.
AUGUST 15ம் தேதி வரை நடக்கும் இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்தியாவின் முன்னணி வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, விதிக் குஜ்ராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜோர்டான் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் உட்பட 10 பேர் மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்கின்றனர்.
சர்வதேச தரவரிசையில் 2776 புள்ளியுடன், 6வது இடத்திலுள்ள அர்ஜுன், கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இதில் சாதிக்கும் வீரருக்கு ரூ. 25 லட்சம், 2, 3வது இடம் பெற்றால் ரூ. 15 லட்சம், ரூ. 10 லட்சம் பரிசு கிடைக்கும். தவிர, சாம்பியன் வீரர், 'பிடே' தரவரிசையில் 24.5 புள்ளி பெறலாம். இதனால், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக சாம்பியன் ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) வாய்ப்பை பங்கேற்கும் அதிகரிக்கலாம்.
,'சாலஞ்சர்' பிரிவில் இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் திறமை வெளிப்படுத்தும்வகையில் போட்டி நடக்க உள்ளன. இதில் கார்த்திகேயன் முரளி, லியோன் மென்யன், அபிமன்யு, ஆர் இனியன், டோன்கா, பிரனேஷ் அதிபன் பாஸ்கரன் என முன்னணி வீரர்களுடன், இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா களமிறங்க உள்ளனர்.
0
Leave a Reply