புதிய வரலாறு படைத்த உலக கோப்பை பைனலில் முதன் முறையாக முன்னேறிய இந்தியாவின் திவ்யா, ஹம்பி. , உலக சாம்பியன் ஷிப் தகுதிப் போட்டி யில்('கேண்டிடேட்ஸ்' செஸ்,2026) பங்கேற்கும் வாய்ப்பு பெற்றனர். உலக கோப்பை வெல்பவருக்கு ரூ. 43.23 லட்சம் பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெற்றால் ரூ.30.26 லட்சம் தரப்படும். திவ்யா 19, ஹம்பி 38, மோதும் பைனல் இன்று துவங்குகிறது. இதில் இன்று, நாளை என இரு போட்டிகள் நடக்கும். இதில் முதலில் 1.5 புள்ளி பெறுபவர் உலக கோப்பை கைப்பற்றலாம். மாறாக இரு போட்டியும் 'டிரா' (1.0-1.0) ஆகும் பட்சத் தில், ஜூலை 28ல் 'டை பிரேக்கர்' நடக்கும்.
ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் இந்தோனேஷியாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் தன்வி சர்மா, இந்தோனேஷியாவின் தலிதா ராமதானி வீர்யவான் மோதினர். மொத்தம் 35 நிமிடம் நீடித்த போட்டியில் தன்வி சர்மா 21,19,/21,14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் வெண்ணாலா கலகோட்லா 21-18, 17-21, 21-17 என தாய்லாந்தின் ஜான் யாபோர்ன் மீபந்தோங்கை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். 'சூப்பர் 1000' சர்வதேச ,சீன ஓபன் பாட்மின்டன். 'சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனாவில்,. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத் விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் யேவ் சின் ஆங், ஈ யி டியோ ஜோடியை சந்தித்தது. இந்திய ஜோடி 21-18, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் ஜெர்மனியில், வில்வித்தை 'காம்ப வுண்டு' பிரிவு கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் பர்னீத் கவுர், குஷால் தலால் ஜோடி, தென் கொரியாவின் பார்க்,எரின் ஜோடியை சந்தித்தது. முதல் இரு செட்டில் பின் தங்கிய இந்தியா(77,78), கடைசி இரு செட்டில் (80,76) சிறப்பாக செயல்பட்டது. முடிவில் இந்தியா,157,154 என வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது. இத் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம் .
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் எகிப்தில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில், ஆசிய ஜூனியர்(19 வயது) சாம்பியன், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்து வீராங்கனை நாடியன் எல்ஹம்மாமை சந்தித்தார்.முதல் செட்டை 6-11 என இழந்த அனாஹத், அடுத்த செட்டை 12-14 என போராடி நழுவவிட்டார். 3வது செட்டிலும் 10,12 என முடிவில், 03 என தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன்-சச்சின் டிராபி' தொடரில் இங்கிலாந்து அணி, 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட், மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந் தியா 358 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடி வில் இங்கிலாந்து 225/2 எடுத்து, 133 ரன் பின்தங்கியிருந்தது.நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய 'வேகங்கள்' தடுமாறினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 544/7 ரன் எடுத்து, 186 ரன் முன்னிலை பெற்றது.
'ஆண்டர்சன், சச்சின் டிராபி"ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி,2,1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 214/2 ரன் எடுத்து, 144 ரன் பின்தங்கியிருந்தது.
பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர்ஜார்ஜியாவில், நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் திவ்யா, சீனாவின் ஜோங்கியை வீழ்த்தி, முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார்.மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, சீனாவின் லெய்டிங்ஜீ மோதினர். இரண்டு போட்டிகளின் முடிவில் ஸ்கோர் 1.0,1.0 என சம நிலையில் இருந்தது.நேற்று,'டை பிரேக்கர்' நடந்தது. இதன் முதல் போட்டியில் விளையாடிய ஹம்பி, 65வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இரண்டாவது போட்டியில் களமிறங்கிய ஹம்பி, 39வது நகர்த்தலில் வெற்றி பெற, 2.0-2.0 என மீண்டும் சம நிலை வகித்தது.அடுத்த 4 போட்டியில்,3ல் ஹம்பி, முடிவில் 5.0,3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். நாளை துவங்கவுள்ள பைனலில் இந்தியாவின் ஹம்பி, திவ்யா மோதுகின்றனர். உலக கோப்பை பைனலுக்கு முதன்முறையாக இரண்டு இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் தொடர்சீனாவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து 30, உன்னதி ஹூடா 17,மோதினர். ஒரு மணி நேரம், 13 நிமிடம் நீடித்த போட்டியில் உன்னதி 21-16, 19-21, 23–21 என்ற, கணக்கில் வெற்றி பெற்று,'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற தொடரில் முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-19 என இந்தோனேஷியாவின் பகாஸ் மவுலானா, லியோ ரோலி கார்னாண்டோ ஜோடியை வீழ்த்தியது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரனாய்,21,18/,15,21/,8,21 என சீனதை பேயின் சோவ் டியென்-சென்னிடம் தோல்வியடைந்தார்.
உலக பல்கலை விளையாட்டு 32வது சீசன் ஜெர்மனியில், .ஆண்கள் அணிகளுக்கான வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவு காலிறுதியில் இந்திய அணி 236-229 என அமெரிக்காவை வீழ்த் தியது. அரையிறுதியில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. குஷால் தலால், சாஹில் ராஜேஷ் ஜாதவ், ஹிருத்திக் சர்மா அடங்கிய இந்திய அணி 235-233 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.நாளை நடக்கவுள்ள ஆண்களுக்கான தனி நபர் பிரிவு அரையிறுதியில் குஷால் தலால், சாஹில் ராஜேஷ் ஜாதவ் மோதுகின்றனர். இதனையடுத்து 'காம்பவுண்டு' பிரிவில் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியானது.பெண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு'பிரிவு காலிறுதியில் பர்னெத் கவுர், அவ்னீத் கவுர், மதுரை அடங்கிய இந்திய அணி 232,226 என இத்தாலியை வீழ்த்தியது.அரையிறுதியில் இந்திய அணி 230,233 என அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது. இனி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனை சந்திக்கவுள்ளது.தடகளம் 5000 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் ஆண்கள், பெண்களுக்கான இந்தியாவின் கிரண் மாத்ரே (14நிமிடம், 41.49 வினாடி), சீமா (15 நிமிடம், 30.70 வினாடி)பைனலுக்கு முன்னேறினர். தொடர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில்கலப்புஅணிகளுக்கான 4×400 மீ.,ஜெரோமிசஞ்சய்,ரூபால்,விஷால், தேவ்யானிபா அடங்கிய இந்திய அணி (3 நிமிடம், 19.21 வினாடி) பைனலுக்குள் நுழைந்தது. ஈட்டி எறிதல்ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் சாஹில் 71.60 மீ.,எறிந்த இந்தியாவின் சில்வால், பைனலுக்கு தகுதி பெற்றார்.
ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட்தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து, 2-1 என முன்னிலையில் உள்ளது. நேற்று, 4வது டெஸ்ட் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் துவங்கியது. தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 'பவுலிங்' தேர்வுசெய்தார். இந்தியஅணிமுதல்இன்னிங்சில், 4 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்திருந்தது. போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது.