'பிபா' சார்பில் பெண்களுக்கான சாம்பியன்ஸ் கோப்பை கிளப் கால்பந்து முதல் சீசன், லண்டனில் நடந்த பைனலில் ஆர்சனல் (இங்கிலாந்து), கொரிந்தியன்ஸ்(பிரேசில்) அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் போட்டி2,2 என சமநிலையில் இருந்தது. ஆர்சனல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சர்வதேச டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.ஆஸ்திரேலிய ஓபனில் முதன்முறையாக கோப்பை வென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஒற்றையர் பிரிவில், முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இத்தாலியின் ஜானிக் சின்னர் 2வது இடத்தில் நீடிக்கிறார்.ஆஸ்திரேலிய ஓபனல் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4 வது இடத்தில் இருந்து 'நம்பர் -3' இடத்தை கைப்பற்றினார்.
மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து பாங்காக்கில் நேற்று பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை தேவிகா சிஹாக், மலேசியாவின் கோ ஜின் வெய்யை சந்தித்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் தேவிகா 21-8, 6-3 என்று முன்னிலையில் இருந்த போது, 2 முறை ஜூனியர் உலக சாம்பியனான ஜின் வெய் தசைப்பிடிப்பால் பாதியில் விலகினார். இதையடுத்து தேவிகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. தேவிகா பேட்மிண்டன் உலகதரவரிசையில் 63-வது இடத்தில் உள்ளார் .
மெல்போர்ன் நகரில் கடந்த2 வாரமாக நடந்து வந்த'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் பெண்கள் பிரிவில் கஜகஸ் தானின் எலினா ரைபகினா வென்றார்.நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரசும் (ஸ்பெயின்), 4-ம் நிலை வீரரும், 10 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர் பியா) மோதினர் .ஆட்டத்தின் முடிவில் அல்காரஸ் 2-6,6-2,6-3,7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல்முறையாக வென்றார். அவருக்கு ரூ.26.75 கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.
திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நியூசிலாந்துக்கு எதிரான5வது மற்றும் கடைசி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி5 விக்கெட்டுக்கு271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன்103 ரன்களும்(6 பவுண்டரி,10 சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 63 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய நியூசிலாந்து 19.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய கேப்டன் சூர்யகுமார் (5 ஆட்டத் தில் 3 அரைசதம் உள்பட 242 ரன்) தொடர் நாயகன் விருது பெற்றார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில், பயர் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டனில்பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியில், உலகின்'நம்பர்-31' இந்தியாவின் அனாஹத் சிங்,23வது இடத்தில் உள்ள அமெரிக்காவின்3,1 சப்ரினா சோபி மோதினர். இதில் இந்தியாவின் அனாஹத் (11-9, 11-3, 9-11, 11-5) எனக் கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தார்.
வதோதராவில் பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் டில்லி, உ. பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஜெமிமா 'பீல்டிங்' தேர்வு செய்தார். டில்லி அணி 18.4 ஓவ ரில் 126/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. உ.பி., அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்தது, புள்ளிப் பட்டியலில் 3வது இடம் பிடித்த டில்லி அணி (8 புள்ளி) 'எலிமினேட்டர்' போட்டிக்குள் நுழைந்தது.நாளை நடக்கவுள்ள 'எலிமினேட்டர்' போட்டியில் டில்லி, குஜராத் அணிகள் மோதுகின்றன.
5 போட்டிகள் கொண்ட 'டி -20' தொடரில், முதல் மூன்றுதொடரை இந்தியா கைப்பற்றியது. நான்காவது போட்டியில் தோற்றது. இன்று ஐந்தாவது போட்டி, கேரளாவின்திருவனந்தபுரம், கிரீன் பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்க உள்ளது.இந்திய அணியினர் ஐந்தாவது 'டி-20' போட்டியில் பங்கேற்க திருவனந்தபுரம் வந்தனர். விமான நிலையத்தில் ,உள்ளூர் நாயகன் சாம்சனை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். சிலர் 'போட்டோ' எடுக்க முயன்றனர். கேப்டன் சூர்யகுமார், “சேட்டனை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள். அவருக்கு வழி விடுங்கள்," என கூறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்மெல்போர்னில், நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் 'நம்பர்-1' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 22, 'நம்பர்-3' வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 28, மோதினர்.முதலிரண்டு செட் களை அல்காரஸ் 6-4, 7-6 எனக் கைப்பற்றி னார். பின் எழுச்சி கண்ட ஸ்வெரேவ், 'டை பிரேக் கர்' வரை சென்ற அடுத்த இரு செட்களை 7-6, 7-6 என தன்வசப்படுத்தி. 5வது செட்டில் அல்காரஸ் 7-5 என போராடி வென்றார்.தசை பிடிப்பு காயத்தை பொருட்படுத்தால் ஐந்து மணி நேரம், 27 நிமிடம் நீடித்த போட்டியில், விளையாடிய அல்காரஸ் 6-4, 7-6, 6-7, 6-7, 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.
டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நெதர்லாந்தில்,. மாஸ்டர்ஸ் பிரிவில்இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம்,அர்ஜூன் எரிகைசி, நெதர் லாந்தின் அனிஷ்கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.இந்தியாவின் குகேஷ், துருக்கியின் யாகிஸ் கான் எர்டோக்மஸ் பத்தாவது சுற்றில், விளையாடிய 'நடப்பு உலக சாம் பியன்' குகேஷ் 50வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் குகேஷ், வின்சன்ட் கீமர் (ஜெர்மனி), விளாடிமிர், பெடோசீவ் (சுலோவேனியா) தலா 5 புள்ளிகளுடன் 7வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர் .