25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


.நாட்டின் மிகப்பெரும் பணக்காரராக , கஞ்சத்தனமாக இருந்தஐதராபாத் நிஜாம் நவாப் மிர் உஸ்மான் அலி கானின் மரண பயம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.நாட்டின் மிகப்பெரும் பணக்காரராக , கஞ்சத்தனமாக இருந்தஐதராபாத் நிஜாம் நவாப் மிர் உஸ்மான் அலி கானின் மரண பயம்

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்புஐதராபாத் நிஜாம் நவாப் மிர் உஸ்மான் அலி கான் (MirOsmanAliKhan).நாட்டின் மிகப்பெரும் பணக்காரராக இருந்தவர் 77 ஆண்டுகளுக்கு முன்பே இவரது சொத்து மதிப்பு ரூ.17.5 லட்சம் கோடி இருந்தது .அரண்மனை முழுக்க தங்கம், வைரம்.. இருந்தாலும் விஷம் வைத்து கொன்றுவிட்டு செல்வத்தை எல்லாம் பறித்து விடுவார்களோ என்ற பயம் எப்போதும் இவருக்கு இருந்தது

பிரபல டைம் இதழானது 1937ம் ஆண்டு பிப்ரவரியில் இதழில் முதல் பக்கத்தில் இவருக்கு இடம் அளித்து உலகின் மிகப் பெரிய பணக்காரராக அறிவித்ததுஇவரது அரண்மனை மேசை டிராயரில் புகழ்பெற்ற ஜேக்கப் வைரம் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். எலுமிச்சை அளவு கொண்ட இந்த வைரம் 280 காரட் இருந்தது. ஆனால் நிஜாம் இதனை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இவரது தோட்டத்தில் தங்க செங்கற்கள் ஏற்றப்பட்ட லாரிகள் புதர்களுக்கு நடுவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், அரண்மனையில் வைரம், நகைகள் வைக்க இடமில்லாத நிலை இருந்ததாகவும் கூறியுள்ளனர்.நிஜாம் பெரிய பணக்காரராக இருந்தாலும் கஞ்சத்தனமாக இருப்பார். அது எப்படி என்றால் இவரிடம் நூற்றுக்கணக்கில் தங்க தட்டுகள் இருந்தாலும் டின் பாத்திரங்களில் உணவை சாப்பிடுவார். அழுக்கு துணிகளை தான் அணிவார்.குறிப்பாக இவரை சந்திக்க வந்தவர் ஆஷ்டிரேயில் அணைந்த சிகரெட்டை விட்டுச் சென்றாலும் அதனை மீண்டும் பயன்படுத்துவார்.

இதனிடையே, தன்னை யாராவது விஷம் வைத்து கொன்றுவிட்டு தன் செல்வத்தை கைப்பற்றி விடுவார்களோ என்ற பயம் எப்போதும் இவரிடம் உள்ளது. இதனால், சாப்பிடும் முன்பு அதை முதலில் சாப்பிட்டு பார்ப்பதற்கு ஒரு குழுவை அழைத்துச் செல்வார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News