25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


விளையாட்டு (SPORTS)

Mar 16, 2025

சச்சின் அணி சாம்பியன் சர்வதேச மாஸ்டர்ஸ் தொடரில், வெற்றி பெற்றது.

இந்தியாவில், சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ('டி-20') முதல் சீசன் நடந்தது. இதில் ஓய்வு பெற்ற வீரர் கள் பங்கேற்றனர்.நேற்று, சட்டீஸ்கர் மாநிலம் மாநிலம் ராய்ப் பூரில் நடந்த பைனலில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.முதலில் 'பேட்' செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன் எடுத்தது.இந்திய அணிக்கு கேப்டன் சச்சின் (25) நல்ல துவக்கம் கொடுத்தார். அம்பதி ராயுடு (74) அரைசதம் கடந்தார். பின் இணைந்த யுவராஜ் சிங் (13*), ஸ்டூ வர்ட் பின்னி (16) ஜோடி வெற்றிக்கு கைகொடுத்தது. இந்திய அணி 17.1 ஓவரில் 149/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Mar 16, 2025

இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) பாலா தேவி கோல்.

இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) பாலா தேவி கோல்இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) 8வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த 8வது சுற்று லீக் போட்டியில் ஸ்ரீபூமி, சேது அணிகள் மோதின. இதில் ஸ்ரீபூமி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்ரீபூமி அணி சார்பில் பாலா தேவி 'கோல் (39, 49, 65வது நிமிடம்) அடித்தார். சேது அணிக்கு ஹதிஜா நந்தகோ (37 வது நிமிடம்), லிஷாம்பாபினா தேவி (89வது) தலா ஒரு கோல் அடித்து ஆறு தல் தந்தனர்.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த மற்றொரு போட் டியில் நிடா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹோப்ஸ் அணியை வென்றது. ஸ்பெஷல் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டில் இந்தியாவுக்கு 33 பதக்கம். இத்தாலியில், அறிவு சார் குறைபாடுள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடந்தது. இதன்  கடைசி நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளி, 6 வெண்கலம் என, 9 பதக்கம் கிடைத்தது. இந்திய நட்சத்திரங்கள், 8 தங்கம், 18 வெள்ளி, 7 வெண்கலம் என, மொத்தம் 33 பதக்கம் வென்றனர். ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ராஷ்மிகா-வைதேகி 'சாம்பியன்' தாய்லாந்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர். இரட்டையர் பிரிவு பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, வைதேகி சவுத்ரி ஜோடி, 'நம்பர்-2' ஆக உள்ள தாய்லாந்தின் புனின், ஜாப்பானின் யூகி நைட்டோ ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம், 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. கால்பந்து  'ஐ-லீக்' போட்டி  'ஐ-லீக்' போட்டி  ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் அணி 4-0 என ஷில்லாங் லஜோங் அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் 27 புள்ளியுடன் (7 வெற்றி) 5வது இடத்துக்கு முன்னேறியது.  பாட்மின்டன்சீனாவின் ஜின் வா குவோ, பாங் ஹுய் சென் ஜோடி ,ஆல் இங்கிலாந்து ஓபன் பைனலில் 21-16, 10-21, 23-21 என சக நாட்டை சேர்ந்த யான் ஷே பெங், யா ஜின் வெய் ஜோடியை வென்றது. T20 கிரிக்கெட் பெண்கள். மும்பையில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) 3வது சீசனுக்கான பைனலில் மும்பை அணி (149/7), 8 ரன் வித்தியாசத்தில் டில்லியை (141/9) வீழ்த்தி, கோப்பை வென்றது. இது, உலகின் பல்வேறு பகுதி களில் நடக்கும் 'டி-20' லீக் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த 12வது கோப்பை.

Mar 14, 2025

விளையாட்டு போட்டிகள்.15th MARCH

சைக்கிளிங்: இந்தியா தேசிய சாதனை. துருக்கியின் கொன்யா நகரில் யு.சி.ஐ., டிராக் நேஷன்ஸ் கோப்பை சைக்கிளிங் தொடர் நடக்கிறது. முதல் நாளான நேற்று ஆண்கள் அணிகளுக்கான டீம் ஸ்பிரின்ட் பிரிவில் தகுதிச்சுற்று நடந்தது.இதில் 16 அணிகள் பங்கேற்றன. டேவிட் பெக்ஹாம், எசோவ் ஆல்பன், ரோஜித் சிங் இடம் பெற்ற இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி 44.187 வினாடி நேரத்தில் வந்து, 11வது இடம் பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தது. எனினும் இந்திய ஆண்கள் அணிக்கு இது புதிய தேசிய சாதனை(43.302) ஆனது. முன்னதாக இந்திய அணி,44.451 வினாடி நேரத்தில் வந்து இருந்தது. ஸ்பெஷல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 13 பதக்கம். இத்தாலியில், அறிவு சார் குறைபாடுள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடக்கிறது. நேற்று நான்கா வது நாள் போட்டி நடந்தன .ஆல்பைன் ஸ்கீயிங் 'எம் 04' பிரிவில் இந்தியாவின் தீபக் தாகூர் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இப்பிரிவில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் ஆனார். ஆல்பைன் ஸ்கீயிங் 'எம் 05' பிரிவில் கிரிதர், தங்கம், வசப்படுத்தினார். இந்த இரு பிரிவிலும் இந்தியா வின் அபிஷேக் குமார், ராதா தேவி வெள்ளி வென்றனர்.நேற்று 'ஸ்னோஸ்ஷூ யிங்(பனிச்சறுக்கு) போட் டிகளில் இந்தியாவுக்கு 2 தங்கம்,3 வெள்ளி,1 வெண்கலம் என 6 பதக்கம் கிடைத்தன.50 மீ., எம் 03 பிரிவில் வாசு திவாரி தங்கம் வென்றார். 200 மீ., எம் 12 பைனலில் அசத்திய அனில் குமார், தங்கம் வசப்படுத்தினார். இதுவரை இந்தியாவுக்கு 8 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கம் கைப்பற்றியுள்ளது.பாட்மின்டன் இந்தியா ஏமாற்றம், இங்கிலாந்தின் பர்மிங் ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண் கள் ஒற்றையர் காலிறுதி யில், உலக தரவரிசையில் 15வது இடத்திலுள்ள இந்தியாவின் லக்சயா சென்.'நம்பர் -6' வீரரான சீனாவின் ஷி பெங்லியுடன் மோதினார்.முதல் செட்டை லக் சயா சென், 10-21 என இழந்தார்.இரண்டாவது செட்டில் போராடிய போதும், 16,21 என கோட்டை விட்டார். முடிவில் லக்சயா சென் 10–21, 16–21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். 

Mar 14, 2025

100 வது ஆண்டு ஹாக்கி இந்தியா

100 வது ஆண்டு ஹாக்கி இந்தியா(எச்.ஐ.,) அமைப்பு 1925, நவ. 7ல், குவாலியரில் துவங்கப்பட்டது. இந்தி யாவில் துவக்கப்பட்ட முதல் தேசிய விளையாட்டு அமைப்பு இது. தற்போது நுாற்றாண்டு கொண்டாட்டம் துவங்கி யுள்ளது.இதை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் பல்வேறு புதிய தொடர் கள் நடத்தப்பட உள்ளன. ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் திலிப் டிர்கே கூறுகையில்,"திறமையானவர்களை கவுரவிக்க உள்ளோம். நமது வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு விருதுகள் ஊக்கம் அளிக்கும்.இந்திய ஹாக்கி வரலாற்றில் முதல் முறையாக ரூ.12 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.சர்வதேச ஹாக்கி அமைப்பின் உறுப்பி னராக 1925ல் இந் தியா சேர்ந்தது. இதன் நுாற்றாண்டு விழாவையும் கொண்டாட உள்ளோம்," என்றார்.   ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 13 பதக்கம் வென்றது. 8 / (1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980) கைப்பற்றியது.1960 வெள்ளி, 1968, 1972, 2021, 2024 என நான்கு முறை வெண்கலம் வென்றது.

Mar 13, 2025

விளையாட்டு போட்டிகள் 14th MARCH

 இங்கிலாந்தின் பர்மிங் ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் காலிறுதியில் லக்சயா சென். இங்கிலாந்தின் பர்மிங் ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் தர வரிசையில் 15வது இடத்திலுள்ள இந்தியாவின் லக்சயா சென்,'நம்பர்-2'வீரரான இந் தோனேஷியாவின் ஜோனா தன் கிறிஸ்டியுடன் மோதினார்.முதல் செட்டை லக்சயா 21,13 எனகைப் பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டையும் 2110 என எளிதாக வசப்படுத்தினார். 36 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் லக்சயா 21,13,21,10 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.ஜோனாதன் கிறிஸ்டிக்கு எதிராக லக்சயா பெற்ற 3வது வெற்றி (4 தோல்வி)   இது. அடுத்து காலிறுதியில் சீனாவின் ஷி பெங்லியை ('நம்பர்-6) சந்திக்க உள்ளார்.   மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக பாராதடகளத்தில் இந்தியா கலக்கல், மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக பாராதடகள சாம்பியன்ஷிப், வரும் செப்டம்பர் மாதம் டில்லியில் நடக்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளம், முதன் முறையாக டில்லியில் நடந்தது. 19 நாடுகளில் இருந்து 280 பேர்பங்கேற்றனர். இந்தியா சார்பில் 145 பேர்களமிறங்கினர். நேற்று கடைசி நாள்போட்டி நடந்தது. ஆண்களுக்கான 800 மீ., வீல் சேர்ரேசிங் 'டி 54) பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் ரமேஷ் சண்முகம், ஒரு நிமிடம், 50.85 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித் தார். தமிழகத்தை சேர்ந்த இவர், தங்கம் வென்றார். இந்தியா 45 தங்கம், 40 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 134 பதக்கம் கைப்பற்றி, பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்தியாவுக்கு  குளிர்கால ஸ்பெஷல் ஒலிம்பிக்கில் 5 பதக்கம். இத்தாலியில், அறிவுசார் குறைபாடுள்ள வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கும் ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடக்கிறது. இதன் 'ஸ்னோபோர்டிங்' விளையாட்டுக்கான 'நோவைஸ் ஜெயன்ட் ஸ்லாலோம்எப்25'பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை பாரதி, தங்கம் வென்றார். இது,இத்தொடரில் பாரதி கைப்பற்றிய 2வதுதங்கம். ஏற்கனவே இவர்,'நோவைஸ் ஜெயன்ட்ஸ்லா லோம்,எப்14' பிரிவில்,'ஆல்பைன் ஸ்கீயிங்எப்6' பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை நிர்மலா தேவி தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றார். 'ஆல்பைன் ஸ்கீயிங்,எப்6' பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை நிர்மலா தேவி தங்கத்தை வென்றார். இந்தியாவுக்கு இத்தொடரில்  4 தங்கம், 4 வெள்ளி, ஒருவெண்கலம் என 9 பதக்கம் கிடைத்துள்ளது. 

Mar 13, 2025

கிரிக்கெட் வருண் சக்ரவர்த்தி மகிழ்ச்சியில் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு நன்றி

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக் ரவர்த்தி 33. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முதலில் இடம் பெறவில்லை. "சாம்பியன்ஸ் தொடரில் டிராபி கேப்டன் ரோகித் சர்மா, என்னை சரியான நேரத்தில் பவுலிங் செய்து அழைத்து சிறப்பாக பயன்படுத்தினார்," என, வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து மீளாத நிலையில் தொட ரில் இருந்து விலகினார். இதையடுத்து வருண் சக்ரவர்த்திக்கு அணியில் இடம் கிடைத்தது நியூசிலாந்துக்கு எதிராக வாய்ப்பு பெற்ற வருண் சக்ரவர்த்தி, 5 விக்கெட் சாய்த்தார். அடுத்து ஆஸ்திரேலியா வுக்கு எதிரான அரையி றுதி (2), நியூசிலாந்துக்கு எதிரான பைனல் (2) என 3 போட்டியில் 9 விக்கெட் சாய்த்து, கோப்பை வெல்ல கை கொடுத்தார்.

Mar 12, 2025

விளையாட்டு போட்டிகள் 13th MARCH

 பாட்மிண்டன்   இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில்  ஆல்  இங்கிலாந்து பாட்மின்டன் தொடர்  இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில். பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 16 வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்து, 21வது இடத்திலுள்ள தென் கொரியாவின் காயுன் கிம்மை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 21-19 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 13-21 என மோசமாக இழந்தார்.  முடிவில் சிந்து 21-19, 13-21, 13-21 என்ற செட் டில் அதிர்ச்சி தோல்விய டைந்தார். மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் டில்லியில் . மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப், வரும் செப்டம்பர் மாதம் டில்லியில் நடக்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளம், முதன் முறையாக டில்லியில் நடக்கிறது நேற்று ஆண்களுக்கான 400 மீ., டி 54 பிரிவு (வீல் சேர் ரேசிங்) போட்டியின் பைனல் நடந்தது. இந்தி யாவின் ஜோதி மணிகண்டன் ஒரு நிமிடம், 04.56 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்தார். தமிழகத்தை சேர்ந்த இவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரர் மனோஜ்குமார் சபாபதி (தமிழகம்), ஒரு நிமிடம், 04.85 வினாடி  நேரத்தில் வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.இருவர் மட்டுமே பங்கேற்ற பார்வைத்திறன் குறைந்த, பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் லலிதா (ஒரு நிமிடம், 07.59 வினாடி), ஷாலினி (ஒரு நிமிடம், 21.53 வினாடி ) தங்கம், வெள்ளி கைப்பற்றினர். ஸ்குவாஷ்இந்திய ஓபன் தொடர் மும்பையில் மார்ச் 24-28ல்  நடக்க உள்ளது. இதில் வேலவன், அனாஹத் சிங், ரமித் டான்டன் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.உலக குளிர்கால விளையாட்டில் இந்தியாவுக்கு 4 பதக்கம், ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு, 12வது சீசன் இத்தாலியில்,  102 நாடுகளை சேர்ந்த, சுமார் 1500 அறிவுசார்  குறைபாடு உள்ள வீரர், வீராங்கனைகள், 8 வகை யான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 30 விளையாட்டு நட்சத்திரங்கள், 19 பயிற்சியாளர் குழுவினர் என, 49 பேர் சென்றுள்ளனர்.இதன் 'ஸ்னோபோர் டிங்' விளையாட்டுக்கான 'நோவைஸ் ஜெயன்ட்  ஸ்லாலோம்-எப்13' பிரிவு பைனலில் இந்திய வீரர் சமீர் யாதவ், தங்கம் வென்றார்.  

Mar 12, 2025

மூன்றாவது முறை சிறந்த வீரர் ஆன சுப்மன் கில் தேர்வு

 ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்மித், நியூசிலாந்தின் பிலிப்ஸ் பெயர்கள்பரிந்துரை செய்யப்பட்டன. தற்போது பிப்ரவரி மாதத்தில் 5 போட்டியில் 406 ரன் எடுத்த சுப்மன் கில் (சராசரி 101.50 ரன்), சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது மூன்றாவது முறை சிறந்த வீரர் ஆன முதல் இந்தியர் என பெருமை பெற்றார்.

Mar 12, 2025

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா

 ரோகித் சர்மா இந்திய அணி கேப்டன் 37. கடந்த 2024ல் 'டி-20' உலக கோப்பை, தற்போது சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி., தொடரில் இந்தியாவுக்கு இரண்டு கோப்பை வென்று தந்தார். 37 வயது ஆன போதும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். இருப்பினும் ரோகித், ஓய்வு பெறப்போகிறார் என தொடர்ந்து செய்தி' இதை மறுத்த ரோகித்,' இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம்."  என்றார். இவரது திறமைக்கு சான்று ஒருநாள் அரங்கில் மூன்று இரட்டை சதம் அடித்தவர் ரோகித் (264, 209, 208). 

Mar 11, 2025

இந்தியாவின் 'சிறந்த கனவு லெவன்' அணி தோனிக்கு கேப்டன் கவுரவம் .

ஐ.சி.சி., உலக கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையில், 1983 முதன் முதலில் இந்தியா கோப்பை வென்றது. அடுத்து தோனி தலைமையில் இந்திய அணி 2007ல் 'டி-20', 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றியது.ரோகித் தலைமையில் 2024ல் 'டி-20' உலக கோப்பை, தற்போது சாம்பியன்ஸ் டிராபி வசப் படுத்தியது இந்தியா. இந்த அணிகளில் விளையாடிய வீரர்களை கொண்டு, இந்தியாவின் 'சிறந்த கனவு லெவன்' அணியை, கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தேர்வு செய்தார். தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். 

1 2 ... 75 76 77 78 79 80 81 ... 93 94

AD's



More News