தயிர் கெட்டியாக உறைய.....
பாலை லேசாக சூடுபடுத்தி அரை தேக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஊற்ற. தயிர் கெட்டியாக உறையும் ,புளிக்கவும் செய்யாது.
வாழைக்காய் வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டுதாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்
இட்லி கெட்டியாக இருந்தால் நாலுபச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸ்யில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதி இருக்கும்.
சில சமயம் இட்லி, உளுந்து விழுது காணாமல் கல் மாதிரி இருக்கும். அப்போது மாவில்2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து பின் இட்லி வார்த்தால் மெதுவாக சுவையாக இருக்கும்
வற்றல் குழம்பு செய்யும்போது1 துண்டு சுக்கு,1 ஸ்பூன் மிளகு, ஒரு கைப்பிடி கருவேப்பிலை, பூண்டு பல் சேர்த்து அரைத்து,கொதிக்க வைத்து இறக்கி வெங்காய வடகத்தை நெய்விட்டு தாளித்து கொட்டினால் வத்தக்குழம்பினால் வீடே மணக்கும்
0
Leave a Reply