சப்பாத்தி மிருதுவாக வர....
சப்பாத்தியை நன்கு திரட்டி அதன் மேல் எண்ணெய் ஊற்றி நான்காக மடித்து மீண்டும் ஒரு முறை திரட்டினால் சப்பாத்தி நன்கு உப்பி வரும்.
சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
கோதுமை மாவில் வண்டு வராமல் இருக்க, சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு வராது.
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிது பாலையும் ,சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சுடு தண்ணீர் ஊற்றி பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
0
Leave a Reply