25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா கல்விக் குழுமத்தின்  24 ஆவது விளையாட்டு விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா கல்விக் குழுமத்தின் 24 ஆவது விளையாட்டு விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா கல்விக் குழுமத்தின்  24 ஆவது விளையாட்டு விழா பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக  திருமதி.L.சுஜாதா Deputy General Manager SDAT, Chennai அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்க, ஆனந்தா போர்டிங் நிர்வாகத் தலைவர் திரு.K.R.பிரபாகர் அவர்கள் விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். 

பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.

 சிறப்பு விருந்தினர்  தனது உரையில்

இராஜபாளையம் மண்ணில் பிறந்து வளர்ந்து  இத்தகைய பதவியில் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும், அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் இன்ஜினியர் ஆக வேண்டும், டாக்டராக வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் ஆக வேண்டும் என்று நினைப்பது இல்லை. 

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதைப் போல வீட்டுக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் உருவாக்கினால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்க முடியும் என்றும் விளையாட்டுத் துறையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன அதனை இம்மண்ணின் மைந்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

 மேலும் விளையாட்டு வீரர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கின்ற பல்வேறு சலுகைகளையும், சிறப்புகளையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

விழாவில் மாணவர்கள் டேக் வான்டோ, யோகா, பிரமிடு, வில்வித்தை, சிலம்பம் மற்றும் பல வகையான உடற்பயிற்சிகளை அழகாக நிகழ்த்திக் காட்டினர். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினர். விழாவில் நிர்வாகக் குழு  உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News