நடிகை சாவித்திரி
பழம்பெரும் நடிகை சாவித்திரி முன்னணி நடிகையாக புகழ்பெற்று விளங்கினார். ஒரு சமயம் இவர் வீட்டில் 100 பவுன் நகை காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் அவர் வீட்டில் பல ஆண்டுகள் பணிபுரிந்த பெண்மணியும், காணாமல் போய்விட்டார். உறவினர் அனைவரும் போலிசில் புகார் செய்யச் சொன்னார்களாம். ஆனால் அதற்கு நடிகை சாவித்திரி ஒப்புக் கொள்ள வில்லையாம். ஏன்? என்றால் போலீஸீக்குத் தெரிந்தால், விசாரணை என்ற பெயரில் வேலைக்காரியை கடுமையாக தண்டிப்பார்கள். என்னிடம் பல வருடங்கள் அன்புடன் நன்றாக வேலை செய்பவர்களை ,அப்படி என் முன்னே விசாரித்தால், என் மனசு தாங்காது. போனால் போகட்டும். விட்டு விடுங்கள். பலர் என்னை ஏமாற்றி, என்னிடம் உள்ள பொருள்களை கவர்ந்துள்ளனர். “100 பவுன் தானே ! விட்டு விடுங்கள்” என்று கூறியுள்ளார். இப்படி ஒரு நல்ல குணமுள்ள நடிகை .
0
Leave a Reply