25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


அஜித்தின் விடாமுயற்சி  திரைப்படம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அஜித்தின் விடாமுயற்சி  திரைப்படம்

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒருவழியாக துவங்கிரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. துணிவு படத்திற்கு பிறகு கடந்த பத்து மாதங்களாக அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருப்பது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மறுபக்கம் விஜய், ரஜினி, கமல் ஆகியோரின் படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகிவந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்புஅஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகாமல் இருந்தது.இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பிற்காக ஆவலாக,காத்துக்கொண்டிருந்தனர்..விடாமுயற்சி திரைப்படம் கண்டிப்பாக நடக்கும் என்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல் வந்த பிறகு தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் அஜித், த்ரிஷா, ரெஜினா ஆகியோர் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.விடாமுயற்சி படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News