பாசிப்பருப்பு முள்ளு முறுக்கு
வீட்டில் இட்லி தோசைக்கு மாவு. அரைக்கும் பொழுது அடுத்த நாள் ஊற்ற நாம் கொஞ்சமாக உப்பு போட்டு கரைத்து வெளியே வைத்து விடுவோம். சில நேரங்களில் மாவு பொங் ஊற்றி நம் வேலையை இருமடங்காக்கி விடும். இனி அப்படியே ஆகாமல் இருக்க மாவை கரைத்து வைக்கும் போது, அதன் உள்ளே நல்ல ஒரு நீளமான டம்ளரை தலைகீழாக உள்ளே சொருகி ஒரு சுற்று சுற்றி விட்டு அப்படியே வைத்து விடுங்கள். இப்படி வைக்கும் போது மாவு புளித்து பொங்கிd ஊற்றாமல் இருக்கும்.
பாசிப்பருப்பு ஒரு டம்ளர் எடுத்து தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெந்த பருப்பை நன்கு மசித்துக் கொண்டு, அதனுடன் நான்கு டம்ளர் அரிசி மாவு, உப்பு, காரப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து, முள்ளு முறுக்கு செய்து பாருங்கள். டால்டா, வெண்ணெய் சேர்க்காமலேயேமொறு மொறுவென்று வாயில் கரையும் இந்த முறுக்கு.
.பூண்டினை சுலபமாகஉரிப்பதற்கு சிறிது நேரம் வெயிலில் எடுத்து வைத்த பிறகு உரித்தால் பூண்டு. தோலினை எளிமையாக உரிக்கலாம்.
வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால் கண்களில் எரிச்சல் இருக்காது.
0
Leave a Reply