வெண்டைக்காய் காரக்குழம்பு ருசியாக இருக்க...
வெண்டைக்காய் காரக்குழம்பு என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். ஆனால் அது இன்னும் கூடுதல் சுவையை கொடுக்க, வெண்டைக்காயை முதலில் 2 டேபிள்ஸ்பூன்எண்ணெயில் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.அதிலிருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி சுருள வதங்கிவிடும். அதன் பின்பு. நீங்கள் காரக் குழம்பில் சேர்த்தால் குழம்பின் ருசியே அலாதியாக மாறும்.
வெந்தயக்கீரை சமைக்கும் போது சிறிது வெல்லம் கலந்து சமைத்தால், கீரையின் கசப்பு சுவை நீங்கும்.
கடலைமாவில் சிறிது தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைத்து தேய்த்து கழுவினால் சமையல் மேடையில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கி சுத்தமாக மாறிலிடும்.
வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்புத் தூளை தடவிக் கொண்டால், கைகளில் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கும்.
வெங்காய பக்கோடா மொறு மொறுவென்று வர மாவுடன் சிறிது வறுத்த கடலைப் பருப்பை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
இட்லிக்கு அரிசி ஊற வைக்கும் போது அரிசியை நன்கு களைந்து விட்டு வெது வெதுப்பான வெந்நீரில் அரிசியை ஊற வைத்தால் இட்லி பூப்போல இருக்கும்.
கோதுமை ரவையை ஒரு கப் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்து, அத்துடன் அரை கப் உளுந்தையும் சேர்த்து இட்லிக்கு அரைப்பது போல நைஸாக அரைத்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இட்லி செய்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.
0
Leave a Reply