சங்கரா கண் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகில் (15.04.2024) மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு, நேர்மையான மற்றும் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி சங்கரா கண் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.
மக்களவை பொதுத்தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள், அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் மாவட்டத்திலுள்ள ஊரகம், நகர்புறம், பேரூராட்சிகள், மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் பெயருள்ள அனைவரும் 100 சதவீதம் தவறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். உலகத்தினுடைய மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக இந்திய பாராளுமன்றம் தேர்தல் நடைபெறுகிறது. உலக ஜனநாயக நாடுகளில் ஏறத்தாழ 96 கோடி வாக்காளர்களைக் கொண்ட மிகப்பெரிய நாடு இந்தியா தான்.
எனவே அந்த 96 கோடி மக்களும் வாக்களிக்க வருவதும் நேர்மையாக வாக்களிப்பதும் ஜனநாயகத்தின் உடைய மிக அடிப்படையான ஒரு செயல். அதில் அனைவரும் ஈடுபடுத்திக் கொண்டு இந்த தேர்தலை வெற்றிகரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.மேலும், கிருஷ்ணன்கோவில் சங்கரா மருத்துவமனை சார்பில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 ஏப்ரல்-19 அன்று தவறாமல் வாக்களிப்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கண் பரிசோதனை செய்வோர் தேர்தலில் வாக்களித்திருந்தால் அவர்களுக்கு 19.04.2024 மற்றும் 20.04.2024 ஆகிய நாட்களில் 50 சதவிகிதம் கட்டண சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது பாராட்டுக்குறியது என தெரிவித்தார்.இந்த ஜனநாயக திருவிழாவில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், வாக்களிப்பதன் மூலம் தங்களது பங்களிப்பை வழங்கி மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு இலக்கை அடைய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply