25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சர்க்கரை நோயாளிகளுக்கு, வரப்பிரசாதமாக உள்ள இலுப்பை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்க்கரை நோயாளிகளுக்கு, வரப்பிரசாதமாக உள்ள இலுப்பை

.இலுப்பை பூ, இலுப்பை வேர், இலுப்பை பழம், இலுப்பை விதை, என அத்தனையும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையே.இலுப்பை பழங்களை எடுத்துக் கொண்டால், மலச்சிக்கலை போக்கக்கூடியது. இலுப்பை மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு, பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது.. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சாறுதான் மருந்தாகிறது.சரும பாதுகாப்புக்கு இலுப்பை இலைகள் உபயோகமாகின்றன.. இலுப்பை இலைகளை கழுவி சுத்தம் செய்து, தண்ணீரை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். பலவீனமான நரம்புகளுக்கு இது தீர்வாக அமையும்.. இலுப்பை இலையை மார்பில் வைத்து கட்டிவந்தால், இளந்தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கும்.

இலுப்பை விதைகள்: இலுப்பையின் விதைகள் சரும பாதுகாப்பை தரக்கூடியது.. தோல் பிரச்சினைகளை அகற்றக்கூடியது.. ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள், இந்த விதையை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் பலன் கிடைக்கும்,. இலுப்பை கொட்டையிலிருந்து, இலுப்பை எண்ணெய் எடுக்கப்படுகிறது.. அந்தவகையில், இலுப்பை பூக்களும் பெரும் பலனை தரக்கூடியது.. ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை என்று பழமொழியே உண்டு.. அதாவது, கரும்பு இல்லாமல் சர்க்கரை கிடைக்காத மக்கள் இனிப்புச்சுவைக்கு, இலுப்பை பூக்களையே பயன்படுத்தலாம் 


அன்றைய காலங்களில், பழங்குடியினர் இதைதான், சர்க்கரையை போல பயன்படுத்தியிருக்கிறார்கள்.. இந்த பூக்களை அரிசியுடன் சேர்த்து சமைத்து, தேனை தொட்டு சாப்பிட்டு வந்துள்ளனர். வெறும் சர்க்கரையை தவிர, புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம் போன்றவை இந்த பூக்களில் உள்ளன. இரும்புச்சத்து: இந்த பூக்களில் ஏராளமான இரும்புச்சத்து நிறைந்துள்ளது.. இலுப்பைப்பூவை தினமும் சாப்பிட்டு வந்தாலே, ஹீமோகுளோபின் பிரச்சனை தீர்ந்துவிடும்.. இந்த பூக்களை கழுவி சுத்தம் செய்து, பாலில் கலந்து குடித்து வந்தால் உடலில் பலம் கிடைக்கும்..
பலவீனமானவர்கள், உடல் மெலிந்தவர்கள், இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து, காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் குடித்து வந்தால், உடம்பு தேறும்..

இலுப்பை பூக்களை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும். கடும் காய்ச்சல் இருப்பவர்கள், இலுப்பை பூக்களை கழுவி தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம்.. இதனால், வெப்பத்தினால் உண்டான காய்ச்சல் உடனடியாக நின்றுவிடும். உடலிலுள்ள நீர்ச்சத்து குறைபாடும் நீங்கும். மாதவிடாய் நேரத்தில் நிறைய ரத்த இழப்பு ஏற்படும்.. இவர்களுக்கு இலுப்பை பூக்கள் மிகவும் நல்லது.. அதுமட்டுமல்ல, இலுப்பைப்பூவை காயவைத்து பொடித்து, வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் கோளாறுகள் நீங்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News