இராஜபாளையத்தில் சாலைபராமரிப்பு பணியை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம்.
இராஜபாளையம் மெயின் ரோட்டில் மேம்பாட்டு பணிகளால், ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. எனவே இன்று (நவம்பர் 2) முதல் நகரின் வடக்கு பகுதியில் இருந்து வரும் கார் மற்றும் பயணிகள் பஸ் மட்டும் ,நேரு சிலை சந்திப்பில் திரும்பி, டி.பி.மில்ஸ் ரோடு வழியாக ,காமராஜர் நகர் ரோடு அடைந்து பஸ் ஸ்டாண்டிற்கும், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் அனைத்து பஸ்களும், காந்தி சிலை ரவுண்டானா வழியாகவும் செல்ல வேண்டும். மேற்கிலிருந்து வரும் பஸ் காந்திசிலை, முடங்கியார் ரோடு, தாலுகா அலுவலகம், நேரு சிலை, டி.பி. மில்ஸ் வழியே பழைய பஸ் ஸ்டாண்ட் வர வேண்டும். தெற்கிலிருந்து வரும் கனரக வாகனங்கள் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் சிலை, சங்கரன்கோவில் முக்கு, முதுகுடி, எஸ். ராமலிங்காபுரம், வன்னியம்பட்டி வழியே ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் சரக்கு, கனரக வாகனங்கள் இராஜபாளையம் நகரில் நுழைய அனுமதி இல்லை. வன்னியம்பட்டி, அட்டை மில் முக்கு ரோடு வழியே செல்ல வேண்டும். இராஜபாளையம் நகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற உள்ள சாலை பராமரிப்பு பணியை முன்னிட்டு நவம்பர் 2 முதல் 13 வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக டி.எஸ்.பி. ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply