கார்ன்ப்ளேக்ஸ் கலந்த மிக்சர்
அரிசி, பருப்பு வகைகளை பத்திரப்படுத்தி வைக்கு போது காய்ந்த வேப்பிலைகளை சிறிது போட்டு வைத்தால் புழு பூச்சிகள் சேராது.
தோசை ஊற்றும்போது சுண்டுவதாய் தெரிந்தால், கல்லில் சிறிதளவு எண்ணையை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு ,கல்லை தோய்த்து விட்டு ஊற்றினால், தோசை சரியாக வரும்.
ஈர துணியில் இஞ்சியை சுற்றி ,தினந்தோறும் தண்ணீர் பாத்திரத்தின் மேல் வைத்துக்கொண்டு வந்தால், ஒரு வாரத்திற்கு வதங்காமல் இருக்கும்.
டீ போடும்போது டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடாதீர்கள். டீயின் சுவை குறைந்துவிடும்.
பாகற்காய் பொரியல் செய்யும் பொழுது கேரட், வெங்காயம் துருவி போட்டு, நிறைய கருவேப்பிலை சேர்த்தால் கசப்பே தெரியாது.
மிக்சர் செய்யும் போது கொஞ்சம் கார்ன்ப்ளேக்ஸ் கலந்து விடுங்கள். மிக்சர் சுவை அதிகமாகும்.
0
Leave a Reply