25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >>


சுவையான கோதுமை பாயசம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுவையான கோதுமை பாயசம்

ஒரு கரண்டி கோதுமை மாவை நெய்யில் வாசனை வரும் வரை நன்கு வறுத்து, பின் தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். பிறகு காய்ச்சின பால், சர்க்கரை, ஏலப்பொடி, வறுத்த முந்திரி சேர்க்க சுவையான, மணமான கோதுமை பாயசம் ரெடி

சாம்பார் பொடிக்கு அரைக்கும் போது ஒரு கப் புழங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது சாம்பார் குழைவாகவும், கெட்டியாகவும் வரும். இதனால், பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.

வறுவல், கூட்டு ஆகியவற்றில் உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் ஒரு ஸ்லைஸ் அல்லது இரண்டு ரஸ்க் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து சிறிது தூவினால் சரியாகிவிடும். எந்த வகை சூப் செய்தாலும் கொதிக்கும் போது சிறிது பொட்டுக் கடலை மாவை நீரில் கலந்து சேர்த்தால் சூப் திக்காக இருக்கும்.

வெண்டைக்காயை வதக்கும் போது புளித்த மோரைச் சேர்த்தால் மொறு மொறு வென இருக்கும்.

. வத்தக் குழம்பு செய்யும் போது கடைசியாக மஞ்சள், மிளகுத் தூளைச் சேர்த்தால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது. பருப்புடன் ஒரு டீ ஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால் சாம்பார் இரவு வரை ஊசிப் போகாமல் இருக்கும் ,உடம்புக்கும் நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News