சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி
பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம்12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை, பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கும் ,மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும், கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
0
Leave a Reply