25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தூவானம்  2020    2021
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தூவானம்  2020 2021

  இரு மகான்களின் திருவிழா  ஒரே தினத்தில்! அதே நாளில் எம் பள்ளி  பாரதியின், பிரதிகளின் அணிவகுப்பு மேலும்  சிறப்பு.        பாரதிகளின் திறமைகளைப் பார்க்க வந்த சிறப்பு விருந்தினர்கள் குழந்தைகளோடு குழந்தைகளாகவே மாறிப் போன விதம் அருமை. திரு. சோமசுந்தரம் அவர்களின் சிலேடைப் பேச்சு அற்புதம்.         வருங்கால இந்தியாவின், நேர்மையான தலைவர்களை உருவாக்க ஆசைப்படும் உன்னத தலைவரான திரு.ஷியாம் அவர்கள், உயரிய கருத்துக்களை எடுத்துச் சொன்ன விதம் மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.        எம்பள்ளியின் பாரதிகளிடையே நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்தியும், வெளிக்கொணர வைத்தும்,கதை சொல்லும் ஆசானாக மாறி வாழ்க்கையின் மதிப்புகளை எடுத்துச் சொன்ன திரு.வெங்கடேசன் அவர்களின் பேச்சு பாராட்டுக்குரியது.      மாணவர்கள், பாரதியின் பிம்பமாகவே மாறி அவருடைய கருத்துக்களையும், உணர்வுகளையும்  பேச்சுத் திறமை மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினார்கள்.        பார்ப்பவர்களுக்கும் பாரதியின் எண்ணங்களை நினைவூட்டி அவர்களையும் பங்களிக்க தூண்டிய மாணவர்களின் செயல்பாடுகள் வியப்பைத் தந்தது.         பாரதி கண்ட புதுமை பெண்களாய் வலம் வரும் பள்ளி தாளாளர் திருமதி.ஆனந்தி மற்றும் பள்ளி தலைமையாசிரியை திருமதி. ஜெயபவானி அவர்களும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற  மாணவச் செல்வங்களைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News