கல்வி வளர்ச்சி தினவிழா
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இரண்டாம் வகுப்பு மாணவி சுபிக்ஷா ஸ்ரீ அனைவரையும் வரவேற்று பேசினாள். மாணவன்அஸ்வின் காமராசர் போல் உடை அணிந்து அழகாக பேசினான். மாணவன் சத்ரேஸ் கல்வியின் சிறப்புகள்பற்றி எடுத்துரைத்தான். மாணவிகள் பெண் கல்வி பற்றியபாரதிதாசன் பாடலை இனிமையாக பாடினார்கள். மேலும் மாணவிகள் அஜ்வா மற்றும் ஜெனிதா இருவரும் குருகுல முறை மற்றும் தற்கால கல்விமுறை பற்றியும் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்கள். மாணவர்கள் குருஷித் மற்றும் மதுமிகா
இருவரும் தனித்தனியே பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார்கள்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் பாராட்டினார். மேலும் அவர் மாணவர்களிடையே நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கவனிக்க வேண்டும் என்றும் கேள்விகள் சில கேட்டும் உற்சாகப்படுத்தினார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி ஜெயபவானி அவர்கள் கல்வி பற்றிய செய்திகளை கூறினார். பள்ளி நிர்வாகக் குழு அலுவலர் திரு. வெங்கட பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் கல்விக்கண் திறந்த காமராசர் பற்றிய செய்தியை விளக்கமாகக் கூறினார். மாணவன் மாதேஷ் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.
0
Leave a Reply