25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


ராஜபாளையத்தில் ரோடுகளில் ஆக்கிரமிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் ரோடுகளில் ஆக்கிரமிப்பு

ராஜபாளையத்தில் ரோடுகளில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு ராஜபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள ரோடுகளில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகத்தால் பொது மக்கள் பாதித்து வருகின்றனர்.நம் நகரில் உள்ள முடங்கியாறு ரோடு, ரயில்வே பீடர் ரோடு, டி.பி மில்ஸ் ரோடு இது தவிர தென்காசி தேசிய நெடுஞ்சா லையில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.கடந்த நான்கு வருடங்களுக்கு முன் இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் நகராட்சி அதி காரிகளிடம் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு பற்றி அளவீடு செய்து குறியிட்டு சென்றனர். இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு முறையான ஒத்துழைப்பு நகராட்சி சார்பில் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது ..ராஜபாளையம் நகராட் சிக்கு உட்பட்ட 15 வது வார்டில் பழைய பஸ்ஸ் டாண்டு எதிரே செல்லும் வடக்கு, தெற்கு தெரு உள்ளிட்ட ஏழு தெருக்கள், ஊரணிப் பட்டி தெரு, இதனை ஒட்டிய இரண்டு பக்க மெயின் ரோடு ஆகியவை இவ்வார்டில் உள்ளது.. பள்ளமான ரோடு, துார்வாராத வாறுகால், நாய் கள் தொல்லை, வாகனம் ஆக்கிரமிப்பு உட்பட பல் வேறு பிரச்சனைகளில் சிக்கி ராஜபாளையம் நக ராட்சி 15 வது வார்டு மக்கள் தவிக்கின்றனர்,மெயின் தெருக்களை தவிர குடியிருப்பின் அனைத்து பகுதி குறுக்கு தெருக்கள் தாமிரபரணி, பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு செப்ப னிடாமல் விட்டுள்ளனர்.ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினருக்கு ராஜபாளையம் நகரமைப்பு அலு வலகம் முறையான ஒத்துழைப்பு வழங்கி தடை யற்ற போக்குவரத்திற்கு வழி காண வேண்டும். என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News