25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ராஜபாளையத்தில் ரோடுகளில் ஆக்கிரமிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் ரோடுகளில் ஆக்கிரமிப்பு

ராஜபாளையத்தில் ரோடுகளில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு ராஜபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள ரோடுகளில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகத்தால் பொது மக்கள் பாதித்து வருகின்றனர்.நம் நகரில் உள்ள முடங்கியாறு ரோடு, ரயில்வே பீடர் ரோடு, டி.பி மில்ஸ் ரோடு இது தவிர தென்காசி தேசிய நெடுஞ்சா லையில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.கடந்த நான்கு வருடங்களுக்கு முன் இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் நகராட்சி அதி காரிகளிடம் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு பற்றி அளவீடு செய்து குறியிட்டு சென்றனர். இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு முறையான ஒத்துழைப்பு நகராட்சி சார்பில் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது ..ராஜபாளையம் நகராட் சிக்கு உட்பட்ட 15 வது வார்டில் பழைய பஸ்ஸ் டாண்டு எதிரே செல்லும் வடக்கு, தெற்கு தெரு உள்ளிட்ட ஏழு தெருக்கள், ஊரணிப் பட்டி தெரு, இதனை ஒட்டிய இரண்டு பக்க மெயின் ரோடு ஆகியவை இவ்வார்டில் உள்ளது.. பள்ளமான ரோடு, துார்வாராத வாறுகால், நாய் கள் தொல்லை, வாகனம் ஆக்கிரமிப்பு உட்பட பல் வேறு பிரச்சனைகளில் சிக்கி ராஜபாளையம் நக ராட்சி 15 வது வார்டு மக்கள் தவிக்கின்றனர்,மெயின் தெருக்களை தவிர குடியிருப்பின் அனைத்து பகுதி குறுக்கு தெருக்கள் தாமிரபரணி, பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு செப்ப னிடாமல் விட்டுள்ளனர்.ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினருக்கு ராஜபாளையம் நகரமைப்பு அலு வலகம் முறையான ஒத்துழைப்பு வழங்கி தடை யற்ற போக்குவரத்திற்கு வழி காண வேண்டும். என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News