முகம் இளமையாக தெரிய....
தினமும் காலையில் எழுந்து வெந்நீர் அருந்த வேண்டும். ஏனெனில் தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் இரத்த ஓட்டம் மேம்படும். இதனால் முகம் பளபளப்பாகவும் இருக்கும்.
ஊறவைத்த உலர்ந்த பழங்கள் வால்நட், பாதாம்.அத்திப்பழங்கள் ஆகியவற்றை தினமும் காலை, காலை உணவுக்கு முன்பு சாப்பிட வேண்டும்.
30 முதல்45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம், உடற்பயிற்சி தோல் செல்களை வளர்க்கவும், உயிர்ப்பிக்கவும் உதவுகிறது. தோல் உட்பட உடல் முழுவதும் செயல்படும் செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும்' ஊட்டச்சத்துக்களை ரத்தம் கொண்டு செல்கிறது.30 முதல்45 நிமிடங்கள் யோகா(ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் மற்றும் பிரார்த்தனை) செய்யுங்கள். யோகா ஆழ்ந்த சுவாசத்தை செயல்படுத்தி இது சருமத்தை நேர்த்தியாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள். காலை உணவு மிகவும் முக்கியமானது. வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் ஜூஸ் தினமும் குடியுங்கள். வைட்டமின் சி சீரத்தை தினமும் முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
0
Leave a Reply