25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தயிருடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தயிருடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்

கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். வயிற்றுக்கு நல்ல குளிர்ச்சியாக இருப்பதனால் அடிக்கடி சாப்பிடுகின்றனர். தயிரில் சோடியம்,பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்டி போன்ற பல சத்துக்கள் உள்ளன. இருப்பினும் தயிருடன் சில உணவுகளைசேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் அது உடலுக்கு சில தீங்குகளைவிளைவிக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பாலுக்கு பிறகு தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பாலுடன் எந்த நொதித்த(fermented) உணவுகளையும் பின் சாப்பிடக் கூடாது. அவ்வாறு செய்வது வயிற்று வலி மற்றும் பல செரிமான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம்.

வெங்காயம் மற்றும் வெங்காயத்திலிருந்து தயாரிக்கப்படும் எந்த உணவுகளையும்ஒருபோதும் நீங்கள் தயிருடன் பயன்படுத்தக் கூடாது. நறுக்கிய வெங்காயத்தைதயிருடன் சேர்த்து ரைத்தாவாக சாப்பிடுவது வழக்கம்தான். ஆயுர்வேதத்தின்படிதயிர் சூடானதாகவும் வெங்காயம் குளிர்ச்சியானதாகவும் இருப்பதால்இவைஇரண்டையும் சேர்த்து சாப்பிடுவது முகப்பரு, தோல்எரிச்சல்மற்றும்சிலஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தும்..

 தயிருடன் நெய் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. நெய்யில் கொழுப்பு உள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடலில் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. மேலும் இவை சோர்வாக இருப்பது போன்ற உணர்வை தரும்

.தயிர் சாத்திற்கு மாம்பழத்தை வைத்து சாப்பிடுவார்கள். சிலர் மாம்பழ லஸ்ஸி, மாம்பழ ஷேக் உள்ளிட்டவை தயார் செய்து குடிப்பார்கள். ஆனால் உண்மையில் இவ்வாறாக சாப்பிடுவது அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் உடலில் ஏற்படும்.

தயிருடன் சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. குறிப்பாக தக்காளி, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களுடன் சாப்பிடவே கூடாது. ஆயுர்வேதத்தின் படி இவை ஒன்றுக்கொன்று எதிரான உணவுகளாக கருதப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News