'காந்தாரா'
கேஜிஎப் படத்தின் முதல் பாகம் வரும் வரையில் தான்அதிகம் கவனிக்கப்படாத திரையுலகமாக கன்னடத் திரையுலகம்இந்தியத் திரையுலகத்தில் இருந்து வந்தது. அதன்பின் கன்னட சினிமாவை பலரும் கவனிக்க ஆரம்பித்தனர். இந்த ஆண்டில் வெளிவந்த 'கேஜிஎப்' படத்தின் இரண்டாம் பாகம் 1000 கோடி வசூலைக் கடந்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
அதற்கடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்த கன்னடம் படமான காந்தாரா படமும் வசூல் சாதனையைப் புரிந்துள்ளது. மொத்தமாக400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற இந்தப் படம் கர்நாடகாவில் கேஜிஎப்2 வசூலை முந்தியதாக கன்னட பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'கேஜிஎப்2' வசூலித்த160 கோடி தான் இதுவரையில் கர்நாடகாவில் ஒரு கன்னடப் படத்திற்கான அதிக வசூலாக இருந்துள்ளது. அதை'காந்தாரா'170 கோடி வசூலித்து முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளதாம் மற்ற தென்னிந்திய ஹிந்தி மொழிப் படங்களை விடவும் 'கேஜிஎப் 2, காந்தாரா படங்கள் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூலைக் குவித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply