கண்களின் கருவளையம் நீங்க
பப்பாளிப் பழ பேக்கை முகத்தில் அடிக்கடிபோட்டுக் கொண்டால், முகம் நல்ல நிறமாக இருக்கும். இதற்கு காரணம், முகத்தின் மேற் பகுதியில் அதிக அளவு மெலனின் சேர்வதை, பப்பாளி தடுத்து விடுகிறது.
சோற்றுக்கற்றாழை இலை ஜெல்லுடன் பப்பாளி கூழை கலந்து கொள்ளவும், இதை கழுத்து மற்றும் முகத்தில் பூசி நன்றாக தேய்க்கவும்,பின்காய்ந்ததும் தண்ணீரில் கழுவும். வாரம் இரண்டு முரை இப்படி செய்தால் கருப்பு புள்ளிகள் மறையும். பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு,கரும்புள்ளி ஆகியவை மறையும்.
அரை டீஸ்பூன் பப்பாளி சாறு, அரை டீஸ்பூன் ஆலுவேரா ஜெல், ஒரு விட்டமின் ஈ கேப்சூல் இது மூன்றையும் . ஒன்றாக கலந்து கண்களை சுற்றி உள்ள கருவளையம் மீது தினமும் தேய்த்து வந்தால் விரைவிலே கண்களின் கருவளையம் நீங்கிவிடும்.
ஒரு டீஸ்பூன் பப்பாளி பழ சாறு, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு இவை இரண்டையும் நன்றாக கலந்து உங்கள் முகத்தில் ஒரு பத்து நிமிடம் ஸ்க்ரப் செய்து, பின்பு முகத்தை அலம்பி விடுங்கள். இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறி விடும். (பப்பாளியை தோல் சீவி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்தால் பப்பாளி சாறு கிடைக்கும். அப்படி இல்லை என்றால் அரைத்த பப்பாளி விழுவதோடு அரிசி மாவை சேர்த்து முகத்தில் போடலாம்.)
0
Leave a Reply